‘ரிஷி’
என் கழுத்தைச் சுற்றி
நாய்ப்பட்டையிட்டு
இழுத்துக்கொண்டு போகும் எத்தனம்
எந்நாளும் உங்களிடம்…
இயல்பான சுதந்திரவுணர்வோடு
திமிறி நழுவிச் சென்றால்
அன்று தந்த இரண்டு பிஸ்கோத்துகளை
சொல்லிக் காட்டி
“நன்றி கெட்டது”
என்று நாவால் கல் வீசுகிறீர்கள்.
கோழிக்கோ, காக்கைக்கோ, புறாவுக்கோ
ஏதோ ஒரு சமயம்
பிடி தானியம் இறைக்கிறீர்கள்.
நாய்க்கு சில நேரங்களில்
சில ரொட்டித்துண்டுகள்.
மிருகக் காட்சி சாலைக்குச் செல்லும்போது மட்டும்
குரங்குகளின் கூண்டுகளுக்குள்
கடலை பட்டாணிகள் சில…
என்னை நோக்கி மட்டும் ஏன்
எப்போதுமே வார்த்தைகளை
வீசியெறிந்தவாறிருக்கிறீர்கள்?
சம எடையற்ற அளவுகோல்களைக் கொண்டு
சந்தையில் கடைபரப்பும்
சக வியாபாரிகள் நாம்.
காய் அளப்பதில் சிலர்
கூடக்குறைய.
வேறு சிலர்
வாயளப்பதில்.
நாய்ப்பிழைப்பு நம் பிழைப்பு
என்பதாய்
ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டால் அது
ஆதங்கத்தில் விளைந்த வேதனைப் பகிரல் .
“நானே புனிதன்; நீ புறம்போக்கு”
என்றால் அது
அநியாயப் புளுகல்.
“உன்னை வழிநடத்த நானே தகுதிவாய்ந்தவர்”
என்ற தன்னிலை விளக்கத்தோடு
கிளம்பி வருகிறீர்கள்
சேணமும் கடிவாளமுமாக.
அடிக்கச் சாட்டையுமுண்டு.
ராஜபாட்டையில் கூட்டிச் செல்வதாய்
என்னை வண்டியில் பூட்டப் பார்க்கிறீர்கள்.
அப்பால் விரையும்
என் கண்முன்னே கிளைபிரிந்து கிடக்கின்றன
ஆயிரம் பாதைகள்!
முளைக்கின்றன புதிதுபுதிதாய்!
காலம் ஓர் ஆரவாரமற்ற ஆசானாய்
கற்றுத் தருகிறது ஏராளம்.
உம் போன்றவர்களிடமிருந்தும் படித்துக்
கொண்டிருக்கிறேன்_
என் சுயாண்மையை.
ஓடும் பரவசத்திற்காய் ஓடிக் கொண்டிருக்கிறேன்!
ஓடும்போது கால்களில் கண்கள் திறக்கின்றன!
கூடுதல் இதயமொன்று துடிக்க ஆரம்பிக்கிறது!
கண்ணிமைப்போது அண்ணாந்து பார்க்க
என் ஆனந்தம் நீலவானில்
பிரதிபலிப்பதைக் காண முடிகிறது!
கால்களின் ரீங்காரம் வெளியெங்கும் பரவுகிறது!
ஓட்டம் பறத்தலாகி மிதத்தலாகும்
உற்சவப் பொழுதில்
பெருகும் இதம்
விருதுகளுக்கப்பால்!
ramakrishnanlatha@yahoo.com
- கோலம் – வீடு தேடி வரும் சினிமா இயக்கத்தின் தொடக்க விழா
- ஜெயமோகனின் “காடு” நாவலை முன் வைத்து
- “புறநானூற்றில் அவலம்”
- அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ என்னும் குறியீட்டு நாவல்
- காலச்சுவடு பதிப்பக நூல் வெளியீடு – மெட்ராஸில் மிருது – வஸந்தா சூரியா
- சிங்கப்பூர் – கவிமாலை விருது விழா
- A STREETCAR NAMED DESIRE = screening
- இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு – ஆகஸ்ட் 23
- ‘சமசுகிருதம்’ பற்றிய கட்டுரை
- The Other Song – Screening
- வாசகர் வட்டம் இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள்
- பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான ஈழத்தமிழறிஞர் சய்மன் காசிச் செட்டி
- துளிகள் நிரந்தரமில்லை
- கடைசி ஆலமரம்
- நடை வாசி
- பகைத்துக் கொள்!
- பயணம்….
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -3 (முன் பாகத் தொடர்ச்சி)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 48 << விளக்கின் ஒளி நீ >>
- என். விநாயக முருகன் கவிதைகள்
- வேதவனம் -விருட்சம் 46
- சு.மு.அகமது கவிதைகள்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினாறாவது அத்தியாயம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -7
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி எட்டு
- அச்சம் தவிர்
- தட்டையாகும் வளையங்கள்
- ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை
- சில அமானுட குரல்களும் பிள்ளை பேயும்
- காங்கிரஸ் கவனிக்க !
- ரிபப்ளிகன் கட்சியும் இலவச பிரியாணி பொட்டலங்களும்:
- தாவூத் பாய்க்கோ குஸ்ஸா கியூன் ஆத்தா ஹை?
- ஜிக்ஸா விளையாட்டு
- தன்மை
- ஈழ சகோதரர்கள்
- கடவுளுடன் ஒரு நீண்ட உரையாடல்
- பூரண சுதந்திரம் ?
- :நான்கு ஹைக்கூ கவிதைகள்:
- ஒரு நிலாக்கிண்ணம்
- பொறித்த அப்பள பொறியல் நட்பு
- வாழ்க்கை நினைவுகளின் எச்சம்
- ஏதும்…
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! காந்த விண்மீன்களில் தீவிரக் காமாக் கதிர் வெடிப்புகள் ! (High Energy Gamma-Ray Bursts fr