- உணவுச் சங்கிலிகள்
- ஓட்டப்பந்தயம்
- அளவுகோல்
- யூசுஃபும் கண்ணாடியும் -கதை — 04
- உயிர்மைக்கு ஒரு கடிதம்
- கடிதம் – ஏப்ரல் 15,2004
- தமிழ்ப் படைப்பிலக்கியத் தடத்தில் மா அரங்கநாதன் படைப்புகள்
- ஏசுநாதர் வாழ்க்கை : நடன நாடகம் – ஏப்ரல் 18 , 2004
- கடிதம் – ஏப்ரல் 15, 2004
- காலம் சஞ்சிகையின் இலக்கியப் பொழுது
- 2004-ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிற்பி விருது
- கடிதங்கள் ஏப்ரல் 15,2004
- கடிதம் – ஏப்ரல் 25 – சுமதி ரூபனின் ‘வடு ‘
- மலர் வசந்தம் – நிழற்படத் தொகுப்பு
- தேவலோகத்தில் ஒரு கடிதப் போக்குவரத்து
- ஆருயிர்கெல்லாம் ‘வம்பு ‘ செய்யல் வேண்டும்!
- எந்த செய்தி – யார் பிரசுரித்தது ? தினகரன் – தினத்தந்தி தினமலர்
- வாழும் வகை
- என்னைப் பொறுத்தவரை
- சத்தியின் கவிக்கட்டு 3
- புத்தாண்டுப் பொன்மகளே புது அழகாய் நீவருவாய்!
- பரம்பொருள்
- ஓவியம்
- துரோகர்(துரோணர்)
- வேர்கள்
- என் பிரிய தோழி
- தமிழவன் கவிதைகள்-ஒன்று
- கவிதைகள்
- உயிர் தொலைத்தல்
- வசந்தத்தின் திரட்சி
- தீர்மானிக்காதவரை.. .. ..
- பகல் மிருகம்
- மன்னித்து விடலாம்….
- அவதாரம்
- அம்மணம்
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்
- என்னோடு என் கவிதை
- வா
- ஜங் அவுர் அமான்!
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 1
- முரண்பாடுகளின் முழுமை
- இந்துத்துவம் = சர்வ மத சமத்துவ சம்மதத்துவம்
- இது எப்படி இருக்கு…. ?
- நிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்
- தயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன ?
- கல்யாண ரத்து தீர்மானம்
- காடன்விளி
- என்னைப் பெத்த அம்மாாாாஆ…
- விளிம்பு
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -15
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)
- புழுத் துளைகள் (குறுநாவல் – 4)
- அன்புடன் இதயம் – 14 – காற்று
- காயம்
- மலைப்படுகடாம். ஒரு சித்திரம்
- டான் கில்மோர்
- குதிரைவால் மரம்
- நந்திக் கலம்பகம்.
- சரியும் மணல் மடிப்புகள் நடுவே
- கவிதை உருவான கதை-2
- ஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ : ஓர் அலசல்
- குளிர்பானங்கள்
- உலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் உன்னதமான பனாமா கால்வாய் [Panama Canal (1870-1914) The Greatest Engineering Marvel]
- மைக்ரோசாஃப்ட் – வின்டோஸ் சமாச்சாரங்கள்
- தொழில்நுட்பச் செய்திகள் ஏப்ரல் 15, 2004
- மரபும் புதிதும் : இரு கவிதைகள்
- வெற்றி
- அனுபவம்
- டாலர்க் கனவுகள்
- காசு
- திரேசா
எஸ் பாபு

—-
கடந்த 2002ம் ஆண்டு ஒரு வருட ஆராய்ச்சிப்பணிக்காக பிரான்சு நாட்டில் இருந்தேன். ஒரு அமைதியான ஊர். பாரீசிலிருந்து 300 மைல் தெற்கில் உள்ள ஆஞ்சே என்னும் ஊர். குளிர் காரணமாக இரவு ஒன்பது மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும். எப்போதாவது கடந்து செல்லும் விரைவுக் கார்களின் சப்தம், யாரோ இளைஞர்கள் (பெரும்பாலும் வார விடுமுறைகளில்) பீர் குடித்துவிட்டு சப்தமாக பேசிச் செல்வது தவிர வேறு ஓசைகளற்றன இரவுகள். ஒரு நாள் நாங்கள் குடியிருந்த வீட்டின் எதிர்புற அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து நள்ளிரவு கடந்த நேரம் ஒரு பெண்ணின் அலறல் கேட்டது. நள்ளிரவு கடந்தே தூங்கச் செல்லும் பழக்கமுடைய நான் அரை தூக்கத்திலிருந்து அலறல் ஒலி கேட்டு விழித்தேன். சன்னல் பக்கம் வந்து நின்று எதிர்புற குடியிருப்பை பார்த்தேன். எச்சலனமும் இல்லை. பக்கத்து குடியிருப்புகளிலும் சலனமில்லை. அது சாதாரண அலறல் அல்ல என்பதால் எனக்கு தூக்கம் போய்விட்டது. மனைவியோ ‘என்ன சப்தம் ‘ என்று கேட்டுவிட்டு உறக்கத்தைத் தொடர்ந்தாள். என்னால் முடியவில்லை. இரண்டு மூன்று சிகரெட்டுகளைத் தீர்த்து விட்டு முகந்தெரியா அப்பெண்ணின் அலறலையும் அதன் காரணத்தையும் யோசித்தபடி படுக்கப்போனேன், எனினும் விடியும் வரை தூக்கம் வரவில்லை. இவ்வனுபவத்தின் வெளிப்பாடே கீழ்க்காணும் கவிதை:
வலி
—-
ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும்
எதிர்புற அடுக்குமாடி
குடியிருப்பிலிருந்து
இரவின் அமைதியை
கிழித்துக் கொண்டு வெளிப்பட்டது
ஒரு பெண்ணின் அலறல்
ஒரு கணம் தான்
ஒரே கணம் தான் பொறுத்து
நிசப்தம் வந்து மூடிக்கொண்டது
ஒலியதிர்வுகளை
நெடுநேரமாகியும்
யாதொரு கொலையாளியும்
வெளியேறக் காணேன் நான்
விளக்கேதும் உயிர்கொள்ளாததால்
விபத்தென்றும் கொள்ளமுடியவில்லை
புதிய உயிரொன்று
பிறந்திருக்கலாமென்றால்
பிறந்த் உயிரின் அழுகுரல் தொடரவில்லை
ஏதொன்றும் நிகழாதது போல
தொடரும் இவ்விரவில்
எதற்காகவோ அலறிய
அப்பெண்ணின் துடிப்பினால்
தீர்ந்து கொண்டிருக்கிறது
என் இரவு.
–எஸ். பாபு.
(மேற்கண்ட கவிதை ‘பன்முகம் ‘ காலாண்டிதழில் சூலை-செப்டம்பர் 2002 இதழில் வெளியானது)
அன்புடன்
பாபு
Babu Subramanian
Postdoc
Department of Agriculture, Food and Nutritional Science,
410, Agriculture / Forestry Centre,
University of Alberta,
Edmonton T6G 2P5
Alberta, CANADA.
Office phone: 780-492-1778
Home phone: 780-432-6530