வேதா
வானம் பொய்க்கலாம், தவறில்லை….
என்
மானம் பொய்த்ததோ ?
கவலை புரியாத
காட்டாற்று வெளிளமாய்,
கழுத்தறுப்பாய்,
தாமதித்தே வரும்
தர்மசங்கடமான தினங்கள்……
ஒவ்வொரு தடவையும்
தீக்குளிக்கிறேன்….
ஒருமுறையாவது நம்பிவிடமாட்டாயா ?
என்
கன்னித்தன்மையிலும், கழுத்தறுப்பிலும்,
கட்டியிருக்கும் குடும்ப கவுரவம்…
உடலும் மனமும்
ஒத்துழைக்க மறுக்கும்
ஓங்காரத் தாண்டவம்!
உனக்கெங்கே புரியப்போகிறது ?
ஒன்றுமே அறியாத
குழந்தை நான் என்று!!
எங்கிருந்தோ ஒரு ஊதல் ஒலி,
என்
மரண ஒலியாக மாற்றிக்கொள்ளட்டுமா ?
மன்னிப்பே இருக்காது உனக்கு….
என் மனதில்
மூடி வைத்த கர்ப்பம்
கடைசிவரை கூடவே வரும்
தண்டவாளம் போல்…
‘சேர்ந்திருப்போமோ ? ‘ சந்தேகம் உனக்கு…
கலந்தேஇருப்பது பற்றி
சந்தோஷம்தான் எனக்கு…
கரம் ஒன்று
அனிச்சையாய் பிடித்திழுக்குது
கன்றுக்குட்டி கயிறைமட்டும்!
ரயிலின் ஊதல் கரையக் கரைய,
தண்டவாளம் வரை வந்து
திரும்பி நடக்குது
என் மனசு மட்டும்!
piraati@hotmail.com
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நினைவாக…
- ‘காலையும் மாலையும் ‘
- ஒற்றைச் சிறகு
- அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட அறிவுகள்….! (Twenty Years after the Three Mile Island Nuclear
- அறிவியல் மேதைகள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin)
- சத்துள்ள பச்சடி (ராய்த்தா)
- கசப்பும் இனிப்பும் (நா.பார்த்தசாரதியின் ‘வேப்பம்பழம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 63)
- சிறுகதை – அதன் அகமும் புறமும்
- வனத்தில் ஒரு வேனில் நாள் – இலக்கிய நிகழ்வு
- இந்தி சினிமாவின் பத்துவிதிகள்
- சித்திரமே என்னை சிதைக்காதே
- மனம்
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் நான்கு
- ஓ கடிகாரம்!
- இலக்கணக்குழப்பம்
- வளர்ந்தேன்
- இருக்குமிடத்தை விட்டு…
- கணினித் தத்துவம்
- நான்
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 5
- பறவைப்பாதம் 3
- குதிரை
- நயாகரா + குற்றாலம் = வேண்டாத கனவு
- 50 ரூபாய்க்கு சாமி
- வாரபலன் – 3 பழைய பத்திரிக்கை வாசிப்பு
- கைலாஷ்- மானசரோவர் யாத்திரை – சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை.
- புன்னகை
- கடிதங்கள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு
- தா கிருட்டிணன் கொலை :அரசியல் கொலையும் ஜனநாயகக் கொலையும்
- என்னுடைய சாராம்சவாதமும், ஸ்ரீநிவாஸ் அவர்களது மறுவாசிப்பும்
- ஒருசொல் உயிரில்….
- சொறிதல்…
- ஞாபகம்
- வினையில்லா வீணை
- ஆண்களைக் காணவில்லை
- தாழ் திறவாய், எம்பாவாய்!