This entry is in the series 20030104_Issue

வசீகர் நாகராஜன்


நினைத்த போதெல்லாம் என்னுடன்
தெருமுனைத் தேநீர் பருகிய

எனக்கு அசைவம் ஆகாதென்று
வீட்டில் சமைப்பதே தவிர்த்த

இரவு நிலவு வெளிச்சத்தில்
தன் உள்ளக்கனவு கூறிய

என் தங்கை திருமண வேலைகள்
தன் தலையில் ஏற்றுக்கொண்ட

புதிதாய் தான் கண்ட திரைப்படம்
அலசி ஆராய்ந்து விமர்சித்த

நள்ளிரவு தூக்கம் கலைத்து
பிறந்த நாளில் வாழ்த்திய

காயம் பட்டு மருத்துவமனையில் நானிருக்க
தாயாய் தந்தையாய் பார்த்திட்ட

போன மாதம் திருமணமான
என் அறை நண்பன்
சொல்கிறான் இப்பொழுதெல்லாம் ….
‘வீட்டில் கேட்டுவிட்டு சொல்கிறேன் ‘

வசீகர் நாகராஜன்

vasikar@yahoo.com

Series Navigation