புதியமாதவி
==================
காதலா..
நீ என்னை அணைக்கும்போது
என்
கண்கள் மூடிவிடும்
காதலா..
நீ என் கதவுகளைத் தட்டும்போது
என்
கோலங்கள் அழிந்துவிடும்
காதலா..
நீ என்னைத் தொடும்போது
என்
உயிர்ப்பறவைப் பறந்துவிடும்
ஆயிரமாயிரம் தேவர்கள்
முக்கடவுள்கள்
வேத முனிகள்
வித்தகர்கள்
சரித்திர புருஷர்கள்
சாணக்கிய வித்துக்கள்
கவிஞர்கள்
..
இவர்களின்
சந்திப்பில் எல்லாம்
பிறக்காதக் காதல்..
எம பாதகா..
உன்னைச் சந்திக்காமலேயே
ஏன் பிறந்ததடா ?
எப்படி வளர்ந்ததடா ?
உன்னைப்
பார்க்க வேண்டும்
இப்போதல்ல.
உன் குரல்
கேட்க வேண்டும்
இன்றைக்கல்ல.
உன்னைத்
தீண்ட வேண்டும்
இரவிலல்ல
எம ராசானே
உயிர்க்காற்று
கண்ணிமைகளை
மூடவரும்
சொற்ப நேரத்தில்
நம் சந்திப்பு
சருகுகளின்
தோட்டத்தில்
விறகுகளில்
பூத்த
நெருப்புமாலையுடன்
நான்.
இது..
நம் சந்திப்பு
நிச்சயிக்கப்பட்ட
நம் சந்திப்பு.
———————————
puthiyamaadhavi@hotmail.com
- மா ‘வடு ‘
- குமுறிக் கனல் கொப்பளிக்கும் இத்தாலியின் எரிமலைகள்
- உருளைக்கிழங்கு கோழி உருண்டைகள்
- உருளைக்கிழங்கு குண்டுகள்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – குளோது சிமோன் (Claude Simon)
- எனக்குப் பிடித்த கதைகள் – 97 – ஓங்கியொலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல்- எட்கர் ஆலன்போவின் ‘இதயக்குரல் ‘
- பெரியபுராணம் காட்டும் பெண்கள்
- திரைப்படத்தில் பாலுறவுச் சித்தரிப்புகள்: அறவியல் அழகியல் பிரச்சினைகள்
- நல்ல புத்தகங்களை தேடுவது
- எம காதகா.. காதலா!
- மீண்டும்
- எனக்கு வரம் வேண்டும்
- மரணம்
- பிரியம்
- பிறிதொரு நாள்
- ஏழையின் ஓலம்
- காதலுக்கு என்ன விலை ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு
- கவிதைகள்
- பேரனுக்கு ஒரு கடிதம்…
- நானோ
- நேற்றின் சேகரம்
- அன்புடன் இதயம் – 6 – வெள்ளிப் பெளர்ணமியே
- உருகி வழிகிறது உயிர்
- மீண்டும் சந்திப்போம்
- வள்ளி திருமணம் (பால பாடம்)
- ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.
- இது என் நிழலே அல்ல!
- கடிதங்கள் – பிப்ரவரி 5, 2004
- பழையபடி நடந்திடுவேன்..
- விடியும்!- நாவல்- (34)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -10)
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் – 5