மன்சூர் ஹல்லாஜ்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் அவர்கள் மீது அவரது ஊரைச் சார்ந்த ஜமாத் ஊர்விலக்கு நடவடிக்கை எடுத்தது கடும் கண்டனத்திற்கும் ஆட்சேபத்திற்கும் உரியது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
கருத்தை கருத்தால் மட்டுமே எதிர் கொள்ளவேண்டும்.உலகம் முழுவதிலும் முஸ்லிம்களை பயங்கரவாதிகள்,சகிப்புத் தன்மையற்றவர்கள் என்ற அவச் சொற்கள் பிறரால் பயன்படுத்தப்படும் இந்த சூழலில் அதை உறுதி செய்வனவாகவே இதுபோன்ற எதிர்நடவடிக்கைகள் அமையும். இது போன்ற நடவடிக்கைகளால் எந்தப்பயனும் இல்லை. மேலும் இது மனிதாபிமானமற்ற சட்டவிரோதமான நடவடிக்கையுமாகும். எனவே எனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.
கே.எஸ்.முகம்மத் ஷூஐப், தூத்துக்குடி
கலைஞர்களும்,எழுத்தாளர்களும் ஆய்வாளர் ஹெச்.ஜி.ரசூல் மீது விதிக்கப்பட்டுள்ள ஊர்விலக்கம் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். எனினும் இது தமிழகம் எங்கும் பரவலாக நிகழ வேண்டும் என்பது என் விருப்பம்.மத அடிப்படைவாதத்தின் கோரப்பற்களுக்கு ஒருமுறை அடிபணிந்தால் அது நம்மை என்றென்றும் காவு கொள்ளும் எனும் உயிர்மையின் தலையங்க வரிகளிலுள்ள உண்மையையும் நியாயத்தையும் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கலை இலக்கியப் படைப்பாளியும் ரசிகரும் உணர்ந்து செயல்படவே வேண்டுகிறேன்
திகசி,நெல்லை
ஹெச்.ஜி.ரசூல் என்ன குற்றமிழைத்து விட்டார்.மைலாஞ்சியில் தொடங்கியது இன்னும் தீரப்பிரச்சினையாகவே உள்ளது. அவருடைய குடும்பம் அலைகழிக்கப்படுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.தமிழக வாசகர்கள் ஒருமித்தக் குரலாய் ரசூலுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தயாராய் உள்ளோம்.படைப்பாளி பாதிக்கப் படுவது கண்டு தமிழ் வாசகர் உலகம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.
ஜெயபால்,திருப்பூர்
நன்றி: உயிர்மை மாத இதழ், அக்டோபர் 2007
mansurumma@yahoo.co.in
- Toronto International Film Festival 2007
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 12(அத்தியாயம் 18)
- I, BOSE presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE)
- வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி ஜெயராமன் எழுதிய கடிதம்
- மலர்மன்னன் உண்மையிலேயே திண்ணைக்கு நாட்டாமைதானா ?
- மை கவிதைத் தொகுப்பு
- தாகூரின் கீதங்கள் -1 புவியில் வாழ விரும்புகிறேன் !
- நேற்று இன்றல்ல நாளை : ஆசிரியர் : எஸ் சங்கரநாராயணன்
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தால் இந்தியாவிற் தொடர்ந்து, நடத்தப்படும் பத்தாவது பெண்கள் சிறு கதைப்போட்டி
- மறுமலர்ச்சிக்கவிஞர் புதுவைச்சிவம்(23.10.1908-31.08.1989)
- 26 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 1
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர் விந்தைகள் பிரபஞ்சத்தின் வயதென்ன ? (கட்டுரை: 1)
- “மாறிப் போன தடங்கள்”
- பூ ஒன்று (இரண்டு) புயலானது
- 1/4 என்னும் சிற்றிதழில் பிரஞ்சுப் பண்பாட்டுத் தாக்கம் பெற்ற தமிழர் பற்றிய காரை சிபியின் அரிய கருத்துகள்
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 30 (நாவல் – நிறைவுப் பகுதி)
- படித்ததும் புரிந்ததும் – (8) அந்நியன் – அஞ்சா நெஞ்சன் – வலைப் பூக்கள் – இலக்கணக் குறிப்பு
- தண்ணீர்
- லா.ச.ரா என்கிற கைவினைஞர்
- லா.ச.ரா. குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் – முதல்வர் தகவல்
- தமிழ்படித்தோரைக் காப்போம்
- தமிழ்வாணன் – மூ ட் டா த அ டு ப் பை மூ ட் டி ய வ ர்
- “ததிங்கிணதோம்”
- கதைகளுக்குள் நர்த்தனமாடும் கதைகளும் கதையாசிரியர்களும்
- குள்ளநரி
- தண்ணீரைப் போன்றது வெளிச்சம்
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 34
- கடிதம் – தவிர்க்க முடியாத இருளின் குறிப்புகள்
- பெஞ்சமின் லெபோ, சர்சல் (பிரான்சு) அவர்களின் ‘பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்?’ கட்டுரை
- மெல்லச் சுருங்கும் மேற்கத்திய உலகம்
- கவிதைகள்
- கவிதைகள்
- ஏன் இந்தத் தலைக்குனிவு
- வழக்கம் போல் இருப்பதில்லைதான் வழக்கமான மழை
- லா.ச.ரா. (92) சொற்களின் சூத்ரதாரி
- புத்தனுக்கு போதி மரம்………..
- ஊர்விலக்கு கண்டனத்திற்குரியது
- அந்த நாள் ஞாபகம் : அதோ அந்தப் பறவை போல….
- திரைப்படம் : ஆப்ரிக்காவின் துண்டு வளையல்கள்