வைகைச் செல்வி
வேகமாய்த் திரும்புகையில்
இன்றும் காலில் இடறிற்று
கருங்கல் அம்மி.
‘அரைக்கவும் ஆட்டவும்
என்னென்னவோ இருக்க
எடத்தை அடைச்சிட்டு
ஏன்தான் இருக்குதோ ? ‘
இப்படி-
அன்றாடம் மாமியார்
கண்டனம் தெரிவித்தும்
ஆசை அம்மியை
அறுத்தெறிய மனசில்லை.
அம்மா வீட்டில் இது
சும்மாவா இருந்தது ?
வெள்ளைத் தேங்காயும்
கறுப்பு மிளகும் ….
பச்சை மிளகாயும்
சிவப்பு வற்றலுமாய் ….
தாள லயத்தோடு
அம்மா அரைக்கையிலே
ஆத்துக்கு அக்கரையில்
அழகருக்கும் வாயூறும்.
இன்றோ-
அவசர உலகத்தில்
அடுக்கு மாடிக் குடியிருப்பில்
பதுங்கிக் கிடப்பதற்கு
முற்றமோ ?… புதுக்கடையோ ?
ஒதுங்கிக் கிடப்பதற்கு
திண்ணையோ இல்லாமல்
கவனிக்க ஆளின்றிக்
காய்ந்திருக்கும் வெறுங்கல்லாய்
வயோதிகம் போல் அம்மியும்.
ஆயினும் ஓர்நாள்-
மழைநாள் இரவில்
மின்சாரம் தடைபட்டுச்
சிம்னி கதகதப்பில்
ராச்சோறு சுவைப்பதற்காய்
பருப்புத் துவையலதைக்
கை வலிக்க அரைக்கையிலே
வீடெல்லாம் மணந்தது
அம்மாவின் வாசனையில்….!
vaigai_anne@yahoo.com
- இடுக்கண் வருங்கால்…
- க.நா.சு. – நினைவோடையில் துலங்கும் முகம்
- மாயக் கவிதைகளில் மனமிழந்தவர் (விக்ரமாதித்யன் கட்டுரைகள்)
- ராம்கியின் ‘ரஜினி: ச(கா)ப்தமா ? ‘ – ஒரு பார்வை
- உலகத் தமிழ் அடையாளம் என்பது என்ன ?
- சிங்கப்பூரின் இலக்கியச்சூழல்- திரு. தமிழவன் அவர்களின் கட்டுரைக்கு மறுமொழி!
- ஒளிநார் வடத்தில் மின்தகவல் தொடர்புகள் (Fibre Optics Communications)
- அடுத்த ஏழு நாட்கள் ட்ராஃபிக் எப்படி இருக்கும்- ஊகித்துச் சொல்லும் நடைமுறைகள்
- கனவு
- இது வரை கவிதை – கருத்தரங்க நிகழ்வுகள்
- மெட்டி ஒலி – கடிதம்
- திரவியம்
- கனவதே வாழ்வாகி….
- முக்காலடி
- கீதாஞ்சலி (29) புதுப்பித்திடு காலை ஒளியை! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- கடலாமைக் குஞ்சுகள்
- தலைமுறைகள் கடந்த துவேஷம்
- நான்காவது சாடிவதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா
- Merina America Thamilosai & NJ Tamil Sangam Proudly Presents the ‘Mega Musical Nite ‘ in NJ on July 10th, 2005.
- ஏணி
- இறகில்லா சின்னப்பறவை
- இந்த 21ம் நூற்றாண்டிலும் புலத்தில் தமிழ்ப்பெண்கள்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-1)
- பார்வை
- சந்திரமுக அந்நியன்
- ஒரு இந்தியக் கனவு
- ஞானம்
- குற்றமும் தண்டனையும் (சிறுகதை)
- மணி என்ன ஆச்சு ?
- The Almond: முஸ்லிம் பெண் எழுத்தாளரின் புதிய நாவல்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 7 – கோல்டா மேர்
- 26. சண்டேசுர நாயனார் புராணம் பெரியபுராணம் – 46
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- அம்மி
- ஒளியினை இரத்தல் பற்றி….
- கண்ணதாசா
- சாய்ந்த மரம்
- அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் தெற்காசியா
- சீட் பெல்ட்
- நிகழ்வுகள்-2004