திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110320_Issue

அரசியலும் சமூகமும்

விதியை மேலும் அறிதல்

மலர்மன்னன் விதியை அறிதல் ஓர் ஆரோக்கியமான கருத்துப் பகிர்வுக்கு அடிகோலும் போலத் தெரிகிறது. கனடா ஸ்ரீ சி. ஜயபாரதன் இயற்பியலிலும் பிரபஞ்சவியலிலும் ஆழ்ந்த அறிவு பெற்றவர். இவை தொடர்பாக அவர் சலிப்பின்றி நீண்ட தொடர்களை…

நினைவுகளின் சுவட்டில் – 64

வெங்கட் சாமிநாதன்(64) – நினைவுகளின் சுவட்டில் சாந்தி பத்திரிகை எனக்குப் பிடித்திருந்தது. பொதுவாக எல்லோரும் வெளிப்படுத்தும், பிரபலமாகியுள்ள அபிப்ராயங்களை எதிர்த்து மாற்றுக் கருத்து சொல்வது என்ற சமாசாரம் பத்திரிகை என்னும் இன்னொரு பொது மேடையில்…

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் . (4)

வெங்கட் சாமிநாதன்புதுமைப் பித்தன் (1907 – 1948) போன்ற ஒரு பெரிய கலைஞன், தலித் பிரச்னையை அவர் பார்வைக்கேற்ப வேறு விதமாகத் தான் கையாள்கிறார். அவர் ஏற்கனவே சுப்பிரமணிய பாரதி தன் சந்திரிகையின் கதை…

சட்டப்படி குற்றம் (இது திரைப்படமல்ல, ஒரு நிஜக்கதை)

அக்னிப்புத்திரன் ஒரு நடிகரின் தந்தை இயக்கும் “ பாசக்கார அப்பன்” – இது நிழல் படமல்ல. நிஜப்படம்! இயக்குநர் சந்திரசேகரின் பாசக்கார மகன் நடிகர் விஜய். தன் மகனை எப்படியாவது அரசியலில் ஒரு உயர்ப்பதவியில்…

அறிவிப்புகள்

ஸ்ரீ விருட்சம் அவர்களுக்கு

மலர்மன்னன்ஸ்ரீ விருட்சம் அவர்களுக்கு விதியை அறிதல் என்னும் கட்டுரையைப் படித்துவிட்டுத் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளமைக்கு நன்றி. செய்ல், எண்ணம் இரண்டுமே சுதந்திரமான சுய சங்கற்பத்திற்கு உடபட்டவைதாமே! செயல் என்பது சக்தி எனில் எண்ணம் என்பது…

எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு விருது

இவ்வருட கனடா உதயனின் தமிழ்நாட்டிற்கான சிறப்பு விருது எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு வழங்கப்படுகின்றது. கனடாவில் வெளியாகும் உதயன் வாரப்பத்திரிக்கை வருடா வருடம் பிரமாண்டமான முறையில் நடத்தும் உதயன் விருது வழங்கும் விழா எதிர்வரும் 20ஆம் தேதி…

சென்னையில் குறும்படப் பயிற்சிப்பட்டறை

நிழல்-பதியம் இணைந்து நடத்தும் 21 வது குறும்படப் பயிற்சி பட்டறைசென்னையில் குறும்படப் பயிற்சிப்பட்டறை நிழல்-பதியம் இணைந்து நடத்தும் 21 வது குறும்படப் பயிற்சி பட்டறை சென்னையில் மே 15 முதல் 22 வரை எட்டு…

எஸ்.அர்ஷியாவின் இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி நாவலும் கவிஞர் ஸ்ரீரசாவின் புதிய கவிதை நூலானா எதிர்கொள் கவிதை நூலும்

காலம் வெளியீட்டின் சார்பாக காலம் வெளியீட்டின் சார்பாக நாவலாசிரியர் எஸ்.அர்ஷியாவின் இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி நாவலும் கவிஞர் ஸ்ரீரசாவின் புதிய கவிதை நூலானா எதிர்கொள் கவிதை நூலும் வருகிற 27,03,2011 ஞாயிறு மாலை 5.30…

சாகித்ய அகாதமி புத்தக கண்காட்சியும் இலக்கிய விழாவும்

சாகித்ய அகாதமிரபீந்திர நாத் தாகூரின் 150ஆவது பிறந்த தின விழாவை ஒட்டி சாகித்ய அகாதமியின் இலக்கிய விழா அழைப்பிதழ்

அறிவியலும் தொழில்நுட்பமும்

கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா முன்னுரை: 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த…

இலக்கிய கட்டுரைகள்

‘‘காடு வாழ்த்து’’

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பல்வேறு வியத்தகு செய்திகள் இடம்பெற்று கற்போர்க்கு களிப்பூட்டும் களஞ்சியமாகப் புறநானூறு திகழ்கிறது. யாரை வாழ்த்துவர்? கடவுள், வள்ளல்கள், அரசன்,…

“புளிய மரத்தின் கதை” நூல் விமர்சனம்

மோகன் குமார் "ஒரு புளிய மரத்தின் கதை" கல்லூரி காலத்தில் படிக்க முயன்று தோற்றிருக்கிறேன். அப்போது வாசிக்க பொறுமை இல்லை. ரொம்ப நாளாக என்னுடன் இருந்த புத்தகம் தற்போது ஒரு பயணத்தின் போது வாசிக்க…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -2

சத்யானந்தன் பால காண்டம் "ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? " என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப…

சாகித்திய அகாடெமியின் வடகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் சந்திப்பு – ஹெச் ஜி ரசூலின் கவிதைகளும் மொழிபெயர்ப்பும்

ஹெச்.ஜி.ரசூல்திருவனந்தபுரம் வயலோப்பில் சன் ஸ்கிருதி பவனில் இந்திய அரசு சாகித்திய அகாடெமி சார்பில் நடைபெற்ற வ்டகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் பங்குபெற்ற இலக்கிய கலைநிகழ்வு மார்ச் 5- 6 தேதிகளில் நடைபெற்றது. முதல்நாள் அமர்வில்…

இவர்களது எழுத்துமுறை – 31 ஜெயமோகன்

வே.சபாநாயகம். 1. கேள்வி: (அ.முத்துலிங்கம்) நீங்கள் உங்கள் சிறுகதைகளை தொடக்கம், நடு, முடிவு என்று ஒருவித திட்டமிடாமல் எழுதுவதாகச் சொல்கிறீகள். இது எப்படி சாத்தியமாகும்? ஜெ: நான் கம்புயூட்டரின் முன் போய் அமரும்போது ஒரு…

கதைகள்

ஒரே ஒரு துளி – துப்பறியும் சிறுகதை

ராம்ப்ரசாத்'சார், வேதம் பேசறேன் சார். ஆமா சார். ஸ்பாட்க்கு இப்பதான் சார் வந்தேன். அந்த லேடியோட ஹஸ்பெண்ட் தான் கால் பண்ணினாரு. அவர்ட்ட நான் இன்னும் நேர்ல பேசல‌ சார். அவரு ரொம்ப நேரமா…

விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தொன்று

இரா.முருகன் 1915 நவம்பர் 14 - ராட்சச வருஷம் ஐப்பசி 29 ஞாயிறு என்ன எதுக்கு என்று சொல்லாமல் அழுகிற குழந்தை போல் வானம் பொத்துக் கொண்டு ஊற்றிய சாயந்திர நேரம். கண்ணூரில், ஏன்,…

விதை

ராம்ப்ரசாத் (இச்சிறுகதை, மதுரையைச் சேர்ந்த அதிதி தொண்டு நிறுவனம் 2011 குடியரசு தினத்தையொட்டி நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான 'இறைவன் கொடுப்பது ஒரு வாழ்வு , மனிதன் கொடுப்பது மறுவாழ்வு' என்ற கருத்தை வலியுறுத்திய சிறுகதைப் போட்டியில்…

நாலுபேருக்குநன்றி

சின்னப்பயல்‘எங்கசார்போணும்?’ ஆட்டோவநிறுத்திஆமமாதிரிதலயமட்டும்வெளியேநீட்டிகேட்டார் “டி.எம்.எஸ்” ‘எவ்ளவ்சார்தருவ?” நீங்கசொல்லுங்க ,பார்க்கவயதானவர்போலிருந்தார்.உள்ளேசாதாரணசட்டையும் ,அதுக்குமேலகாக்கிஉடுப்பும்அணிந்திருந்தார்.” அறுபதுரூபாகுடுசார்” மத்தவன்லாம்எம்பதுநூறுன்னுகேப்பான்,நான்நியாயமாகேக்கறேன்.இந்தஆபீஸ்போறடயத்துலஅதுவும்மவுண்ட்ரோட்லசவாரிபோறதுன்னாஎவ்ளவ்செரமம்னுஉனக்குதெரியாதுசார்,”ஏறிக்கோ “. வண்டிநந்தனம்சிக்னலைத்தாண்டிசென்றுகொண்டிருந்தது.அவரேதான்பேசிக்கொண்டேவந்தார்.” இதேஆட்டோவவாடகைக்கிவிட்டிருந்தேன்சார் ,எடுத்தவன்ஒழுங்காஓட்றானான்னா, தெனம்தண்ணிஅடிக்கிறான்சார் , அதொடவந்துவண்டிஎடுக்கிறான்சார், அதுனாச்சும்பரவால்ல,பொண்டாட்டியும்சேத்துக்கிட்டுதண்ணிஅடிக்கிறான்சார்.குடும்பமேபேஜாரு.அதோடநானேதிரும்பவண்டியஎடுத்துஓட்டஆரம்பிச்சுட்டேன். ஒருதொழில்பக்திவேணாம் ? அதுலருந்துதான்காசுவருது, கும்பிடாட்டியும்பரவால்ல , ஒருமரியாதஇருக்கணும்சார், காசும்ஒழுங்காகுடுக்கிறதில்ல, எல்லாத்தயும்தண்ணிலயேவுட்டுர்றான்சார்.அதான்வேணவேவேணாம்னுசொல்லிஅனுப்பிட்டேன்.கொழந்தகுட்டியகாப்பாத்தறதுக்குதொழில்செய்யணும்,ஒருபயபக்திவேணும்,…

மழை ஏன் பெய்கிறது

அழகிய இளவேனில் (எ) நாசா என் பெயர் கண்ணன். சென்னையில் ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். இப்போது நான் திருவண்ணாமலையில் காமராஜர் சிலைக்கு முன்னால் ஒரு பெரிய மழையில் மாட்டிகொண்டு கோபத்தோடு நின்றுக்…

குருவிக் கூடு

குமரி எஸ். நீலகண்டன் திடீர்னு வந்து வீட்டுக்காரர் சொன்னார். வீட்டைக் காலி பண்ணிக் கொடுக்கணுமாம்? அது எப்படிச் சாத்தியம்? அதிர்ச்சியில் எனக்கும் என் மனைவிக்கும் பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது. இந்த வீட்டில் என்னோட…

குமார் அண்ணா

ஸ்ரீஜா வெங்கடேஷ் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பக்கத்தில் தான் நான் அவரைப் பார்த்தேன். அசப்பில் குமார் அண்ணாவைப் போல இருந்தது. அந்த ஆள் பஞ்சகச்சம் உடுத்திக் குடுமியோடும் , கையில் தர்ப்பைக் கட்டோடும் போய்க்…

சாமியின் தந்தை..

T.V.ராதாகிருஷ்ணன் தன் மகன் தன்னை கவனிப்பது இல்லை..தனியாக விட்டு விட்டான்..என அறுபத்திரெண்டு வயதுள்ள முதியவர்..அந்த ஊர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க..காவல்துறை அதிகாரி அருணாசலம் ..உடன் அவர் மகன் சாமியை கைது செய்து காவல் நிலையத்திற்கு…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -3

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "நானொரு தொழிற்சாலை நெப்போலியன் என்று நினைக்கிறார். அதனால்தான் மிஸ். எல்லி கூட என்னை மணக்க விரும்புகிறாள்.…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30

ரேவதி மணியன்सम्बोधनरूपाणि ( sambodhanarūpāṇi) விளி வேற்றுமை (எட்டாம் வேற்றுமை)பற்றி இந்த வாரம் அறிந்து கொள்வோம். ’விளித்தல்” என்றால் ‘அழைத்தல்’ என்று பொருள். இதற்கு தனியாக வேற்றுமை உருபு கிடையாது. இது முதல் வேற்றுமையின்…

கவிதைகள்

அந்தவொரு மழை நாள்..

தேனு முன்மொழிக்குப் பிறகான நாளொன்றில் துளி துளியாய் எதிர்பார்ப்புகள் சொட்டிக் கொண்டு சூடேற்ற, இருவண்ண வானவில் சாரலுடன் மெய் சிலிர்த்திருந்தோம்.. . அவளுக்கான என் மௌனமும் எனக்கான அவள் மௌனமும் சிலாகித்துக் கொண்டிருந்தன மழையின்…

அக்கறை பச்சை

பி. பகவதி செல்வம் தலைவிதியோ தற்செயலோ சூழ்நிலையின் சூதோ ஏதோ ஒன்றால் எப்போதோ தவறவிட்ட வாய்ப்பு இப்போதைய நாட்களின் இன்னல்களால் உறுத்தி கொண்டிருக்கிறது அக்கறை பச்சையாய்...! - பி. பகவதி செல்வம்

தேவைகள்

அதீதன்சுப்ரமனியம் இத்தனை சுத்தமான மௌனத்தை யார்தான் ஒத்தையில் எதிர்கொள்ளமுடியும் இப்பொழுது தேவையாயிருப்பது என்றோ காணாமல் போன காதலியின் முகம் என்றோ யாருக்காகவோ அழுத கண்ணீர் என்றோ யாரோ பயன்படுத்திய கொச்சையான வசை சொல் என்றோ…

இரண்டு கவிதைகள்

வெலிகம ரிம்ஸா முஹம்மத், இலங்கைபுதிய சட்டங்கள்! -- வன்னி நகரில் நடந்த வன்செயல்களின் கொடூரத்தில்... இடம்பெயர்ந்தலைந்தேன் தாங்காத சோகத்தில்! போர் மேகங்கள் ஒன்றுசூழ்ந்து பொழிந்தன அன்று குண்டு மழைகள்.. ஈவிரக்கம் துளியுமின்றி துண்டாடப்பட்டன அப்பாவிகளின்…

ஒற்றை மீன்

இளங்கோ* எல்லையற்று நீளும் துயரச் சுவரில் கரும்பாசி போல் படிந்திருக்கிறாய் தனிமைப் போக்கும் வழியற்று அகன்ற கண்ணாடிக் குடுவையில் நீந்தும் என் ஒற்றை மீனுக்கு உன்னைக் கொஞ்சம் சுரண்டி உணவிடுகிறேன் அது குமிழ் குமிழாய்…

இருக்கை…

ஹேமா(சுவிஸ்)****************** இயல்பை விடுத்து இப்போ... தனக்குத் தொடர்பில்லாத இடத்தில் பறந்துகொண்டிருக்கலாம். நாளை... நீந்திக்கொண்டும் இருக்கலாம். இன்னொரு நாள்... இடப்புறச் சங்குக்குள்ளும் ஒளிந்திருக்கலாம். பிறகொருதரம்... பிணங்கள் புதைக்கும் இடத்திலும் பார்த்ததாகச் சிலர் சொல்லலாம். காற்றாய் பறந்து…

நீ….. நான்…. மழை….

ச. மணி ராமலிங்கம் எதிர்பார்ப்பின் எதுகைகளாக பயணிக்கிறோம் மழை தேடும் நீயும் உன்னை தேடும் நானும்.... உன்னை சேர்ந்தால் மோட்சம் பெறுவேன் நான்... நீ மழையை சேர்ந்தால் மோட்சம் பெறும் மழை.. முக்கோண காத்திருப்பில்…

கொடிய பின்னிரவு

கலாசுரன் பகல்களில் தேன் வழிய மலர்ந்த கனவுகள் எண்ணற்ற சிந்தனைகளில் மடிந்து பிறக்கும் தென்றலின் கோபுரங்கள்போல் எண்ணித்துணிந்த முடிவொன்றில் சிதறும் ஞாபகங்கள் இசையின்றித் தாளம்போடும் உணர்வற்ற பாதங்களின் விரல்கள் தேய்ந்துபோனது ஆயிரம் நினைவோட்டங்களின் மனதோர…

வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்

வளத்தூர் தி .ராஜேஷ் அதன் மீதமே ------------------------ பிறப்பிக்கபட்ட நிர்பந்தம் என்னை தழுவி கொள்வதற்கு முன் தொடர்ந்து எழுகின்ற மவுன அலறல் சுயத்தில் எதிரொலிக்க மறுக்கிறது அதன் மீதமே . பழியின் தீரம் என்னை…

கைகளிருந்தால்…

துவாரகன் - எமக்குக் கைகளிருந்தால் ஒருவரைக் கன்னத்தில் அறையலாம் தடியால் அடிக்கலாம் சுட்டுவிரலால் அதிகாரம் செய்யலாம் இன்னும் எதுவும் செய்யலாம் எமக்குக் கைகளிருந்தால் ஓடிவரும் குழந்தையை அள்ளி அணைக்கலாம் வீதியில் விழுந்தவரைத் தூக்கி விடலாம்…