திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20051014_Issue

அரசியலும் சமூகமும்

கஜினி திரைப்படம்- எழுத்தாளர்களுக்குச் சொல்வது….

கோவிந்த் கஜினி ஒரு விறுவிறுப்பான பொழுதுபோக்குப் படம். மிகப் பெரிய வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால், அது தொடர்பாக சில விஷயங்கள் நாம் சிந்திக்க வேண்டியது அவசியம். அந்தக்காலத்தில் ஸ்ரீதர், பாலசந்தர் பின் மணிரத்னம், சரண்…

தவளை-மனிதர்களின் இயக்க வரலாறு குறித்து ஒரு நூல்

அரவிந்தன் நீலகண்டன் முனைவர்.ஈ.பாலகிருஷ்ணன் நக்ஸல்பாரி இயக்கத்தில் ஈடுபட்டு மீண்டவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்தவர். இன்று வரலாற்றுப் பேராசிரியராக இருக்கும் இவரது முனைவர் பட்டம் கேரள கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு குறித்ததாகும். கட்சி நூலகங்கள் மற்றும்…

வள்ளுவரை வசைப்பாடிய சிரிப்பு நடிகர் எஸ்.எஸ். சந்திரன்!

அக்னிப்புத்திரன் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் மனிதனைக் கடித்த கதையாக அதிமுகவின் எம்.பி எஸ்.எஸ் சந்திரன் தமிழரின் குலதெய்வமாகப் போற்றப்படும் அய்யன் வள்ளுவரையே வம்புக்கு இழுத்து வசைப்பாடியிருக்கிறார். அநாகரீகமாகப் பேசுதிலும் அசிங்கமாகப் பேசுவதிலும்…

சிந்திக்க ஒரு நொடி – கற்பும் கற்பிதங்களும்

வாஸந்தி தமிழ்த் தேசியம் பேசுபவர்களின் சகிப்பற்ற போக்கு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது தமிழ்ப் பெண்கள் இனி நிம்மதியுடன் இருக்கலாம். அவர்களது மானத்தை, கெளரவத்தைக் காப்பாற்ற, பாதுகாக்க, வீரம் செறிந்த ஆண்கள் படை ஒன்று தமிழகத்தில்…

அறிவிப்புகள்

கடிதம்

சுந்தர் விசுவாமித்திரா என்றப் பெயரில் எழுதும் நண்பரே உங்களின் குஷ்புவும், ஈ.வே.ராவும் சில சமன்பாடுகள் கட்டுரை அனைத்து தமிழ்நாடு அரசியல்வாதிகளுக்கும் ஒரு சாட்டையடி. அரசியல் சூதாட்டம் ஆடும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளுக்கு நீங்கள்…

கடிதம்

சின்னக்கருப்பன் எனது சிறிய கட்டுரைக்கு எதிர்வினையாக திரு ரவி ஸ்ரீநிவாஸ் அவர்களும், திரு சுந்தரமூர்த்தி அவர்களும் எழுதிய கடிதங்களுக்கு சிறிய பதில். திரு ரவி ஸ்ரீநிவாஸ் அவர்கள் என் மீது எனக்கே இல்லாத அளவுக்கு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நிர்மூலமாக்கிய ஹரிக்கேனால் நியூ ஆர்லியன்ஸ் நகர மாந்தர் வெளியேற்றம் [2] (Mass Exodus in New Orleans City After Hurricane Katrina

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா எத்தனை கோடி இன்னல் வைத்தாய் எங்கள் இறைவா ? நித்தமும் பூமியின் கோரப் பற்களில் எத்தனை பேர் மடிந்தார் இறைவா ? யுத்தமும் கொல்லும் உலகில்…

இலக்கிய கட்டுரைகள்

விமர்சனக் குரல்களின் உலகம் (நான்காவது ஆணி – மலையாளச் சிறுகதைத்தொகுதி அறிமுகம்)

பாவண்ணன் ஒன்பது மலையாள எழுத்தாளர்களின் பத்துச் சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. 'நான்காவது ஆணி ' என்பது ஆனந்த் எழுதிய சிறுகதையின் தலைப்பாகும். அதுவே தொகுதியின் தலைப்பாகவும் அமைந்திருக்கிறது. தொன்மக்கதையின் பின்னணியில் விமர்சனத் தொனியுடன் ஒரு…

தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம், சிறப்புப் பேரவை,சென்னை

லதா ராமகிருஷ்ணன் ---- 14.08.2005 அன்று சென்னை தியாகராயகர் , தக்கர்பாபா வித்யாலயாவில் புதுமைப்பித்தன் நூற்றாண்டு நினைவரங்கில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் சிறப்புப் பேரவை நடைபெற்றது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ல் சென்னையில் நடைபெற்ற…

கவிஞர் புகாரியின் இருநூல்களின் இனிய வெளியீட்டு விழா

பல்கலைச் செல்வர் ஆர். எஸ். மணி (கனடாவில் 35 ஆண்டுகளாக வாழும் பல்கலைச் செல்வர் திரு ஆர்.எஸ்.மணி அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு) சிறுவயதிலிருந்தே ஓவியம், இசை, கவிதை முதலியவற்றில் நாட்டம். பள்ளியில் படிக்கும்போது,…

கதைகள்

வித்யாசாகரின் ரசிகை

எஸ். ஷங்கரநாராயணன் வித்யாசாகரை மீண்டும் ஐந்து வருடங்களுக்குப் பின் சந்திக்க நேர்ந்தது. ஆள் அப்படியே மாறாமல் மீதமிருந்தாற் போலிருந்தது. குறுந்தாடி. நீள நேருபாணி குர்தா ஜிப்பா. 'ஏய் ' என முதுகு பின்னால் கேட்ட…

நாலு வயது

இரா. குருராகவேந்திரன் கொஞ்சம் தூக்கம் கலைந்த மாதிரி இருந்தது. புரண்டுபடுக்கையில் அம்மாவின் கை மெல்ல அணைத்தபடி தட்டிக்கொடுத்தது கனவில் நடப்பதுபோல் இருந்தது. அம்மாவின் அணைப்பில் மறுபடியும் தூக்கம் ஆழமானது. ராத்திரி அப்பா சொன்ன கதையால்…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-12)

சி. ஜெயபாரதன், கனடா 'ரோவென் நகர மாந்தரே! நான் சாகத்தான் வேண்டுமா ? தீயிக்கிரையாகி நான் மாய்ந்து போவதற்குக் காரணமான நீங்கள் துன்பப்படப் போகிறீர் என்று கவலைப் படுகிறேன். கடவுளின் தேவ தூதர்களே! என்…

கவிதைகள்

அப்பா (உள்ளது உள்ளபடி)

தேவமைந்தன் கூடத்தின் நடுவில் அப்பா, பாக்கமுடையான்பட்டுக் காதிபவனின் பார்சல் பிரித்த காய்கறி பிரியாணிக்குப் பின்புறம். கொக்குப்பாலம் அருகே நெல்லிக்காய் விற்றவனின் உபதயாரிப்பும் துணைவிற்பனையுமான நெல்லி ஊறுகாயைச் சப்புக்கொட்டித் தொட்டுக்கொண்டு. காரைக் கோவில்பத்து துளசிகடை எலுமிச்சை…

பாறையின் இதழ்கள்

நாகூர் ரூமி ==== எப்போதுமே மோனத்திலிருக்கின்றன உன் பாறையின் இதழ்கள். எனினும் நுரையீரல் நிறைக்கிறது அவ்விதழ்களின் நறுமணம். ஊழிப்பேரலைகள் உருண்டுவந்தடைத்தாலும் பாதை மாற்றிக்கொள்ளாது உன் மெளனம். வாக்குத் தவறுவதும் வாழ்க்கை தவறுவதும் ஒன்றுதான். பேச்சில்…

காட்சி மாற்றங்கள்

புதிய மாதவி ==== விடியலில் விலகாத இருட்டின் நாட்கள் மேகப்போர்வையில் முகம்மறைத்து இழுத்துப்போர்த்திக்கொள்ளும் அதிகாலைச் சூரியனைத் தட்டி எழுப்பும் தனிமையின் குரல். காதலிப்பதைத் தவிர வேறுவேலையில்லாத ஜோடிப்புறாக்கள் எத்தனைமுறை விரட்டினாலும் மீண்டும் மீண்டும் சன்னலே…

பெரியபுராணம் – 60 (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )

பா.சத்தியமோகன் 1638. பொன்மலை ஈன்ற கொடி போன்ற பார்வதி அம்மையுடன் திருக்கயிலை மலையில் விரும்பி வீற்றிருக்கும் தன்மை இங்கும் டும் வண்ணம் சக்தியும் சிவமும் கிய தன்மையில் பற்பல யோனிகள் யாவும் விளங்கும் முறைமை…

உயிர் வாழ்தல் என்பது

இளைய அப்துல்லாஹ் ஓரு இயத்தின் அளவு தான் உயிரும் இருந்தபோதிலும் ஒவ்வொரு உயிரும் இப்பூவுலகில் வாழவே ஆசைப்படுகின்றன. உயிாின் ஒவ்வொரு துடிப்பும் மிக அவதானமாகவே நகருகின்றது யாரும் தன்னைத் துன்புறுத்தாதபடிக்கு யாரும் தன்னை நோவினை…

கவிதை

வ ஐ ச ஜெயபாலன் பயிரோ மழைக்கேங்கும் பாலையோ நதியிடம் யாசிக்கும் ஏழையின் காவியங்கள் உயிர்த்திட உன்னிடம் கையேந்தும் உயிரினில் இனித்திடவும் உருக்கிடும் துயரெலாம் கருகிடவும் யாழினை எடுத்தேனடா கண்ணா இனி நதியென பெருகட்டும்…

ரோஜாப் பூக்கள்

வைகைச் செல்வி நான் தெரு வழியே செல்கையில் சிவப்பு ரோஜாக்கள் சிரிக்கின்றன. கதிரவனின் துகள்களைப் போல மஞ்சள் ரோஜாக்கள் மயக்குகின்றன. வெள்ளை ரோஜாக்களும் வெண் முயலாய் அசைகின்றன. துாரத்தில் ரோஜா வண்ண ரோஜாக்கள் அல்ல.…

கீதாஞ்சலி (44) எப்போதும் வருகிறானே! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா அமைதியாக அவன் வைக்கும் காலடிகள் அரவத்தை உன் காதுகள் கேட்க வில்லையா ? வருகிறான், வருகிறான், எப்போதும் வருகிறானே! வருகிறான் ஒவ்வொரு யுகமும்! வருகிறான் ஒவ்வொரு கணமும்! வருகிறான்…

அலறியின் மூன்று கவிதைகள்

அலறி நரகில் தள்ளும் பாலைவனப் பாதை அாிசி ஆலை தோற்கும் பஸ்ஸின் நடு ஆசனத்தின் வலதுபக்கம் பட்டியில் கட்டிய ஆடுபோல அடைக்கப்பட்டிருக்கின்றேன். ஆரை மணி இடை வெளியில் புறப்படுவதான பஸ் இரைந்து மூச்சிழுத்துக் கொண்டிருக்கிறது…