”கனவு” இலக்கிய கூட்டம்

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

சுப்ரபாரதிமணியன்


====================================================

திருப்பூரில் ” கனவு ” இலக்கிய வட்டத்தின் அக்டோபர் மாதக்கூட்டம்
9-1-11 அன்று ஓசோ பவனில் நடைபெற்றது. வழக்கறிஞர் சி ரவி தலைமை
தாங்கினார். சுப்ரபாரதிமணியனின் “ சாயத்திரை “ நாவலின் மொழிபெயர்ப்பு
நூல்கள் அறிமுகம் நடந்தது.
சுப்ரபாரதிமணியனின் “ சாயத்திரை” நாவலை 1998ல் காவ்யா பதிப்பகம்
வெளியிட்டுள்ளது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ( ஆங்கிலத்தில்
பாண்டிச்சேரி ராஜ்ஜா, THE COLOURED CURTAIN ,வெளியீடு; BRPC, NEW DELHI )
மலையாள மொழிபெயர்ப்பு, “ சாயம் புரண்ட திர “ (மலையாளத்தில்
மொழிபெயர்ப்பு ஸ்டான்லி, சிந்த
பதிப்பகம், திருவனந்தபுரம் ), கன்னட மொழிபெயர்ப்பு “ பண்ணத்திர “
( கன்னடத்தில் தமிழ்ச்செல்வி, வெளியிடு நவயுக பெங்களூரு ) ,இந்தி
மொழிபெயர்ப்பு “ ரங் ரங்கிலி சாதர் மெஹெலி “ ( இந்தியில் மீனாட்சி புரி ,
வெளியிடு நீலகணட் பிரகாசன், மொளர்லி , புது தில்லி ) ஆகியவை
அறிமுகப்படுத்தப்பட்டன.

“ சாரு நிவேதிதாவின் கலகக்குரல்” என்றத்தலைப்பில் சுந்தர்
அர்ணவா, “ பிரகடனமாகாத வாக்குமூலங்கள்= வாசந்தியின் சிறுகதைகளை
முன்வைத்து வாசந்தியின் படைப்புலகம்” என்ற தலைப்பில்
சுப்ரபாரதிமணியன், “ அம்பேத்கார் திரைப்படம் எழுப்பும் காந்தி மீதான
கேள்விகள் “ என்ற தலைப்பில் முத்துசரவணன் ஆகியோர் உரையாற்றினர்.
ஜோதி கவிதைகள் வாசித்தார். ரவி மகேஸ் நன்றி கூறினார்.
பிப்ரவரியில் நடைபெற உள்ள திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் வெளியிடப்பட
உள்ள திருப்பூர் படைப்பாளிகளின் இலக்கியப் படைப்புகளின் தொகுப்பான
” பருத்திக்காடு ” பற்றி சி ரவி அறிமுகப்படுத்தினார்.

” கனவு “ இலக்கிய வட்டத்தின் மாதாந்திர கூட்டச் செய்திகளுக்கு ;
ரவி 9994079600., முத்து சரவணன் 7200733728.
செய்தி: முத்து சரவணன்

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்