2010ஆம் ஆண்டுக்கான “ஃ விருது” திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வழங்கப்படுகிறது
சுயாதீன கலை, திரைப்பட கழகம்

2010ஆம் ஆண்டுக்கான “ஃ விருது” திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை சுயாதீன கலை, திரைப்பட கழகம் பெருமையுடன் அறியத்தருகிறது.
சுயாதீன கலை, திரைப்பட கழகம் வருடா வருடம் மாற்று ஊடகத்திற்காக தங்களது பங்களிப்பை செய்தவர்களை “ஃ விருது” என்னும் விருதை அளித்து கௌரவிப்பது வழமை. கடந்த ஆண்டுகளில் நாடகர் பாலேந்திரா, ஊடகவியலாளர், நாடகர் பி.விக்னேஸ்வரன், கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் போன்றோருக்கு இவ் விருது வழங்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டுக்கான “ஃ விருது” பெறும் திரு. டொமினிக் ஜீவா, கடந்த 45 வருடங்களாக மல்லிகை என்னும் இலக்கிய சஞ்சிகையை இலங்கையில் இருந்து வெளியிட்டு வருகின்றார். இச் சஞ்சிகையில் இன்றைய முண்ணனி எழுத்தாளர்கள் பலர் எழுதியுள்ளனர். கால் நடையாகவும், மிதிவண்டியிலும் ஊர் ஊராக சென்று இப் பத்திரிகையை இவர் விநியோகித்துள்ளார் என்பது எத்தகைய இடைஞ்சல்களுக்கிடையில் இவர் தனது இலக்கியப் பணியைத் தொடர்ந்துள்ளார் என்பதற்கு சான்று பகர்கின்றது.
1927 ஜூன் 27ல் பிறந்த இவர் 1966ல் மல்லிகையின் முதலாவது இதழை வெளியிட்டார். தமிழிலக்கியத்தின் முக்கியமான சஞ்சிகைகளில் மல்லிகையின் இடம் முக்கியமானது. வறுமைக் கோட்டின் கீழ் வாழ் மக்கள் அனைவருக்கும் சார்பாக குரல் கொடுத்த இவர், சாதியம் போன்ற சமூகத்தின் மிகக் கொடூரமான ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் உரத்து குரல் பதித்தவர். திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு ‘ஃ விருதை” அளிப்பதில் சுயாதீன கலை, திரைப்பட கழகம் பெருமிதப்படுகின்றது.
அமைப்பின் சார்பாக
திரு. ராம் சிவதாசன்
416-804-3443
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திநாலு
- ஒரு ஆசிரியை பரீட்சை வைக்கிறாள் தன் கணவனுக்கு…..
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -20
- என்ன தவம் செய்தனை
- முள்பாதை 32
- உயர்சாதிமயநீக்கம்
- அங்காடித் தெருவும் தேநீர் இடை வேளை நாவலும்
- இது வெற்றுக் காகிதமல்ல…
- வேத வனம் விருட்சம் 88
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று – கவிதை -11 – பாகம் -2
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னைப் பற்றி -போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் -கவிதை -29 பாகம் -2
- யமுனா தீரத்து நந்தக்குமாரன்….
- நாற்பது நாட்களில் செவ்வாய்க் கோள் செல்லும் அதிவேகப் பிளாஸ்மா ராக்கெட் ! (கட்டுரை -1) (The Superfast Fusion Power Plasma Rocket
- மங்களூரு விபத்து மே 22, 2010
- ரிஷி கவிதைகள்
- கண்ணாடி வார்த்தைகள்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -17
- புதுக்கவிதைகளில் தாய்மை
- தள்ளாட்டம்
- 2010ஆம் ஆண்டுக்கான “ஃ விருது” திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வழங்கப்படுகிறது
- கே. எஸ். பாலச்சந்திரனின் கரையைத்தேடும் கட்டுமரங்கள்.
- பெண்ணிய நோக்கில் அறநெறிச்சாரம் காட்டும் கற்பு
- களம் ஒன்று கதை பத்து வரிசை – 3 – அவன்பாடு