துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்ட மய்யித்துகளுக்கான ஜனாஸா குறிப்பு
ஹெச்.ஜி.ரசூல்

ஆட்டாத விரல்
ஆட்டிய விரல்
எல்லா விரல்களையும் கடந்து
ஒருபடிஉயர்ந்து நின்றது
மய்யித்தை குளிப்பாட்டிய போது
மலவாயின் உள்நுழைந்து
நஜீஸோடு வெளிவந்த
வெள்ளைத்துணி சுற்றிய
இடதுகை ஆட்காட்டிவிரல்
—————————————————————————————————-
அத்தஹியாத் – தொழுகையின் இறுதி இருப்பு நிலை
மய்யித்து -இறந்த உடல்
குளிப்பாட்டல் – இறந்த உடலை சுத்தப்படுத்தும் சடங்கு.
நஜீஸ் – மலக் கழிவு
ஜனாஸா – கபன் பொதியப்பட்ட மய்யித்து.
——————————————————————————————————-
குறிப்பு 1
தர்கா,சூபிமரபுக்கு எதிராகவும்,அத்தஹியாத் இருப்பில் விரலை அசைத்தல் அசையாது வைத்திருத்தல்,தக்பீரை நெஞ்சில்கட்டுதல்,வயிற்றின்மீதுகட்டுதல் உள்ளிட்ட தொழுகை முத்திரைகள் சார்ந்தும் இஸ்லாத்தில் உருவான குழுவினர் வகாபியர்கள். இவர்களில் ஒரு பிரிவினர் தவ்கீது ஜமாஅத்தினர். மரபுவழியைப் பின்பற்றுபவர்கள் சுன்னத்துல் ஜமாத்தினர்.
தமிழகம் முழுவதிலும் இப்பிரிவினர்களுக்கிடையே சர்ச்சைகளும் சண்டைகளும் உண்டு.இதன் காரணமாக எல்லா ஜமாஅத்துகளும் இரண்டிரண்டாகவும் உடைந்துள்ளன.
குறிப்பு 2
2010 செப்டம்பர் 5ம் தேதி புனிதரமலான் மாதத்தில் திருவாரூர் மாவட்டம் திருவிடைச் சேரியில் இவ்வாறான தொழுகை சம்பந்தப்பட்ட பிரச்சினையில்வகாபிய தவ்கீது ஜமாஅத்திற்கு ஆதரவுநல்க வந்த குழுவினரில் ஹஜ்முகமது என்பவர் உணர்ச்சிநிலையில் துப்பாக்கியால் சுட்டதில் கிராம ஜமாத்தைச் சேர்ந்த தலைவர் முகமது இஸ்மாயில் உட்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.ஐந்துபேர்
குண்டுபாய்ந்து படுகாயமடைந்துள்ளனர்.
ஹெச்.ஜி.ரசூல்
- இசட் பிளஸ்
- எரியாத முலைகள்
- மறுபடியும் அண்ணா
- கோகெய்ன்
- உவமையும் பொருளும் – 1
- யெளவனம்
- அப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே!!
- இவர்களது எழுத்துமுறை – 5 பாரப்புரத்து (மலையாள எழுத்தாளர்)
- காக்கி உடை காவலர்கள் தங்களைவிட உயரமான தடிகளோடு மல்லுக்கு நிற்பதை நிறுத்தி உழைப்புதான திட்டத்தை அமல்படுத்துவோம்.
- காதுள்ளோர் கேட்கட்டும்
- இரண்டு கவிதைகள்
- தாணிமரத்துச் சாத்தான்…..!
- வனச்சிறுவனின் அந்தகன்
- கடிவாளம்
- சும்மாக் கிடந்த சங்கு
- ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் -மொழிபெயர்ப்புக் கவிதை
- குற்றமிழைத்தவனொருவன்
- மேட்ரிக்ஸ் தமிழில்
- பிரான்சு ஸ்ட்ராஸ்பூரில்…. “சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -18 பூமியின் கூக்குரல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -33 பாகம் -4 நமது பூமி
- முள்பாதை 46
- பார்சலோனா -3
- மொழிவது சுகம் : பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம் – மரி தியய்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -12
- அண்ணா மீது கவி பாடிய திருலோக சீதாராம்
- துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்ட மய்யித்துகளுக்கான ஜனாஸா குறிப்பு
- குவைத்தில் ரமாலான் சிறப்பு மாதாந்திர இலக்கிய நிகழ்வு
- MARUPAKKAM And National Folklore Support Centre Jointly organizes Monthly screening of Documentaries and Short films
- பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற நலதிட்டங்கள் அறிவிப்பு
- கவிஞர் கே. ஆர் திருத்துவராஜாவுக்கு பாராட்டு
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
- முள்பாதை = வாசகர் கடிதம்
- பரிமளவல்லி – 11. சன்டோகு கத்தி
- தந்தையும் தாயுமான அதிபர்.
- திலகபாமாவின் கழுவேற்றப்பட்ட மீன்கள் – நாவல் விமர்சன விழா
- சந்திரனைச் சுற்றித் தளத்தில் இறங்கப் போகும் இரண்டாவது இந்தியத் துணைக்கோள் சந்திரயான் -2 (கட்டுரை : 5)