வாழ்க்கை நினைவுகளின் எச்சம்

This entry is part [part not set] of 44 in the series 20090813_Issue

வே பிச்சுமணி


நினைவு தெரிந்த நாள்
யாதென யாருக்கு தெரியும்
உடனே நினைவில் வருவது

அடம் பிடித்து
அட்டை போட வைத்திருந்த
பழுப்புதாள் கற்றையை
ஒன்றாம் வகுப்பு ஆசிரியை
எடுத்து கொண்டது

அம்மாவை பெத்த தாத்தா
இறந்த விட்ட பொழுது
ஐந்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு
தனியே பேரூந்தில் சென்றது

தனி பயிற்சிக்கு செல்லாது
மாட்டிகொண்டு
அம்மாவிடம் அடிவாங்கியதென
சின்ன சின்ன நினைவு திட்டுகள்

நினைவுகள் மங்கும் நாளில்
நினைவுகளில் நிற்கும் நினைவுகள்
பத்து பக்கம் கூட தேறாது

மற்றவர்கள் நினைவுக்கு
விட்டு செல்லபோவதென்னவோ
பெயரும் தோற்றமும் மறைவும்
ஆக்கிரமிப்பு அகற்றலிலோ
சாலை விரிவாக்கத்திலோ
அதுவும் கூட அகற்றபடலாம்

எள்ளுபெயரன் காலத்தில்
என்னை பற்றிய
எல்லாமும் போய்விடும்

வாழ்க்கை நினைவுகளின் எச்சம்
எச்சமும் சொச்சமில்லை
சொச்சமில்லை யென்றாலும்
சொர்ககம் தான் வாழ்க்கை

v.pitchumani@gmail.com

Series Navigation

வே பிச்சுமணி

வே பிச்சுமணி