சாத்தானுடன் போகும் இரவு

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

த.அகிலன்


சாத்தான்கள்
ஊருக்குள்திரும்பின
சாத்தான்கள்
புன்னகைகளை
வெறுப்பவைஸ..

பகலின் நிறம் மரணம்
இரவின் நிறம் பயம்
என்றாகியது,

ஊர்
பகலில் இறந்தவனை
அடக்கம் பண்ணிவிட்டு
இரவில் அடுத்;த சாவிற்கு
காத்திருக்கலாயிற்று

பாதித்தூக்கத்தில்
அடித்து எழுப்பப்பட்ட
வெறியில்
அலைந்தன சாத்தான்கள்

இரவுக்குக் கைகள்
முளைத்தது..,

கேள்விகளற்ற
வெறுங்கணத்தில்
இரவின் கரங்களில்
கோடாிகள் முளைத்தன..,

மனிதா;களைத்
தறித்து விழுத்தியபடி
தனது நிறத்தை
ஊரெங்கும் பூசிச்செல்கிறது
இரவு

விடியலில்
உருவங்களின் கரங்களில்
இருந்தது
இரவின் கோடாி

சூாியனைப்போர்த்தபடி
கேள்விகளற்று
நடந்துபோகிறது
இரவு சாத்தானுடன்

—-

agiilan@yahoo.co.uk

Series Navigation

த.அகிலன்

த.அகிலன்