செய்தி
பவளமணி பிரகாசம்

அதிசயமோ அருமையான தத்துவமோ
அரிதாக இடறியது போல் சிக்கியதோ
காலையிலே படித்த கதையிது கேளீர்
சிந்திக்க வைத்ததே கதையின் செய்தி
வனத்தின் பச்சைமரக்கிளையொன்றிலே
விடிந்த பொழுதை கொண்டாடவென்றோ
குருவியொன்று குரலெடுத்துப் பாடியதே
அவ்வழியே சென்ற எமனின் பார்வையும்
ஒரு கணம் குருவியின் மேல் படிந்ததுவே
அரண்டு போனது கூவிய குட்டிப் பறவை
அழைத்தது அவசரமாய் வலிமிகு கருடனை
கெஞ்சியது ஏழு கடல் தாண்டிய தீவிற்கே
தன்னை கொண்டுசேர்க்க வேண்டுமென்றே
இசைவுடன் கருடனும் இறகை விரித்திட
ஏறி அமர்ந்து குருவி பயணித்ததுவே
நீண்ட நேரம் நெடுந்தூரம் நிற்காமலே
இலக்கை அடைந்த பின் நிம்மதியே
இரவுக்கு முன் வீடு திரும்பும் எமனோ
காலையில் பார்த்த வனத்து மரத்தை
தாண்டுகையில் சொன்னது துணையிடம்
ஏழு கடல் தாண்டியுள்ள தீவில் இப்பொழுது
நான் கவர வேண்டிய குருவியை இன்று
காலையில் இங்கு கண்டேனேயென்று
எழுந்த வியப்பு எமனுக்கு மட்டுந்தானா
Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com
பவளமணி பிரகாசம்
- மானுடம் போற்றுவோம்…
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-2)
- கடைசிப் பகுதி – கானல் நதிக்கரை நாகரிகம்
- என் சுவாசக் காற்றே
- sunday ‘ன்னா இரண்டு
- உயிர்-தொழில்நுட்பவியல் ஏகாதிபத்தியவாதம் – விதைநெல்லில் மழுங்கடிக்கப்பட்ட பரம்பரையலகு.
- அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டி
- பெரியபுராணம்- 50 – (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி)
- செய்தி
- பேய்மழைக் காட்சிகள் – மும்பை
- மெய்வருகை…
- கடலின் அகதி
- 21 ஆவது நூற்றாண்டின் அணுக்கருப் பிணைவு சக்திக்கு ஆற்றல் மிக்க லேஸர் ஒளிக்கதிர்கள் (High Power Laser For Nuclear Fusion)
- திசை மாறும் திமிங்கலங்கள்
- சொர்க்கத்துக்குச் சென்றது என் சைக்கிள் (ஒரு குழந்தைப்பாட்டு)
- கீதாஞ்சலி (34) – என்னைப் பின்தொடரும் நிழல்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- இளையராசாவின் இசையில் திருவாசகம் – பழுது ?
- இருளும் சுடரும் – (தமஸ் – மொழிபெயர்ப்பு நாவல் அறிமுகம் )
- கரை புரண்ட காவிரியே எம் கண்கள் கலங்கியது….
- ஊசிப்போன உப்புமா கிண்டுதல்
- ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
- கானல் காட்டில் கவிதையும் கவிகளும்
- கோலம்