மனசெல்லாம் இசை வெள்ளம்.
நளாயினி தாமரைச்செல்வன்.
____
மலை முகடுகளை
தொட்டு அழையும் முகில்கள்
என்னை சிலிர்க்க வைக்கும்
சின்ன சின்ன மழைத்துளி
தெப்பமாக
தன்னை நனைக்கும்
பிரயத்தனத்தில் இயற்கை
மொட்டையாக்கிப்போன
பனிக்காலத்தை
விட்டு விலத்தி
மெல்ல மெல்ல
ஒரு கருவின் அசைதல் போல்
தன்னை அழுகுபடுத்த முனையும்
மரங்களின் அரும்புகள்.
சக்கு சக்கு சக்கு
சளக் சளக் சளக்
டக்கு டக்கு டக்கு
கைய்யாாாா
ஏஏஏஏ
ஆஆஆஆ
என் மனசெல்லாம் மழைவெள்ளம்.
எதை என் உணர்வுகள் சேகாித்தக்கொண்டது.. ?!
எனக்குள் ஏதோ ஆனந்தப்பெருக்கம்.
தமது கைபிடி விடாது
இந்த இசையை எழுப்பிய படி
மழைவெள்ளத்துள்
விழையாடும் பட்டாம் பூச்சிகள்.
அப்படியே அப்படியே
கண்ணறும் தூரம் வரை
அந்த பட்டாம் பூச்சிகளை இரசித்தபடி.
ஏதோ ஒரு உணர்வு பரபரக்க
ஓடிச்சென்று மெய்மறந்து துள்ளி
விழையாடினேன் அந்த வெள்ளத்துள்.
கைகளை இறுக மூடியபடி
கண்களை திறந்தும் மூடியபடிக்கும்
கால்களால் வெள்ளத்தை
அடித்தும் உதைத்தும்
வெடி செய்தும்
டப் டப் டப்
சக்கு சக்கு
சளக் சளக்
சதக் சதக்.
? ? ? ?
அடடா மனசெல்லாம் இசைவெள்ளம்.
நளாயினி தாமரைச்செல்வன்.
சுவிற்சலாந்து.
08-04-2005
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-1)
- தேவை இந்த மனங்கள்
- பெரியபுராணம் – 49 – திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி
- நடை – “கோவிந்தா, கோவிந்தா” – பாகம் 1
- பொது மக்கள் கவனத்திற்கு – பரவி வரும் Blackmail கலாச்சாரம்
- உயிர்-தொழிநுட்பவியல் ஏகாதிபத்தியவாதம் – பரம்பரை உருமாற்றப்பட்ட உணவு. (Genetically Modified Food)
- உம்மாச்சிக்கு No Fire
- மூப்பனார் வழியில் இளங்கோவன் ?
- பாலஸ்தீனிய தெற்காசிய ஜிகாதி வெறுப்பியல் வேர்களில் சில இணை பரிமாணங்கள்
- எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ? ( மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல் )
- பகுதி 3 – கானல் நதிக்கரை நாகரிகம்
- இரட்ஷகன் வருகிறான்
- துளசி
- நினைவுகள்
- காலம் எழுதிய கவிதை – இரண்டு
- வலைப்போர்
- முழுக்க விழுந்தபின்
- நிழல் ஐந்தாம் ஆண்டு சிறப்பிதழ் – சிறு குறிப்புகள்
- ஆசை பற்றி அறையலுறும் வாசகப் பூனையெழுப்பும் ஓசைகள் (வை.மு. கோபாலகிருஷ்ணமாசார்யரின் கம்பராமயண உரைத் தொகுப்புகளுக்கு அறிமுகம்)
- கோபிகிருஷ்ணன் நினைவு கூட்டம்
- திமிங்கலங்கள்
- லேஸர், மேஸர் ஒளிக்கதிர்கள் ஒப்பற்ற புதிய ஒளிக்கருவிகள்-2 (New Tools: Laser & Maser Beams)
- என்ன உலகமடா இது
- செல்லம்மாவின் இருமுகங்கள்
- கீதாஞ்சலி (33) என்னைச் சுற்றி ஓர் மதில்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- மிச்சமிருக்கிறாய்..
- மனசெல்லாம் இசை வெள்ளம்.
- 24-வது ஐரோப்பியத் தமிழ்ப் பெண்கள் சந்திப்பு