கடிக்காமல் விடுவேனோ ?

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

பவளமணி பிரகாசம்


முழுதாக மூடிக் கொண்டிருக்கும் மாங்கனியே!
உனை தீண்டாதென் உயிர்தான் தரிக்குமோ ?

வலைக்குள்ளே வனப்பான வண்ண மயிலே!
நானின்றி வந்ததுவோ உனக்கு பூந்துயிலே ?

எட்டி நில்லென்று கட்டளையோ, தேன்மலரே!
உனைத் தொட்டாலன்றி எந்தன் பசியாறுமோ ?

வாசனை பூச்செல்லாம் பூசிய பூங்காற்றே!
வரவிடாதெனை விரட்டுவது தர்மந்தானோ ?

நறுமணம் வீசும் வத்தி கொளுத்திய நல்லழகே!
நச்சாலே எனை நசித்தலும் நியாயந்தானோ ?

கொல்லும் படை கொண்ட என் இனிய விருந்தே!
வெல்லும் வகையில் வீரியம் வளர்க்கமாட்டேனோ ?

என் உயிரின் ஆதாரமே! அரிய ஆகாரமே! அன்னமே!
கட்டுக்காவல் தாண்டி வந்து கடிக்காமல் விடுவேனோ ?
—-

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்