சர்க்கரை
அபுல் கலாம் ஆசாத்

இனிப்பிற்கும் நாவிற்கும் உள்ள உறவு
முறிந்தது
சுவையில்
அதன் சுவடுகூடத் தெரிவதில்லை
கணையம் கண்ணுறங்க
வாய் விழித்திருக்கிறது
பழைய வீட்டுடன்
பரம்பரைச் சொத்தாக வந்தது
இதுவும்தான்
வெறும் வயிற்றில் வெங்காயமும்
பகல் உணவில் பாகற்காயும் பழக்கப்பட்டு
இனிப்பை நினைத்தால்
கசக்கிறது
“கரும்பு தின்னக் கூலி” எனக்கு மட்டுமே
இனியவனுக்கு
என் அகராதியில் வேறுபொருள்
திருமண விருந்தில்
தெரிந்தவர் தேடி அமர்ந்து
பக்கத்து இலைக்கு பாயசத்தைத் தள்ளுவதில்
வெட்கப்படவில்லை
தேனீர் கேட்டால்
அனிச்சையாய்ச் சொல்வேன்
“ஒண்ணு சக்கரயில்லாம”
இறுதிவரை என்னுடனிருக்க வந்த
உறவை ‘நீரிழிவு’ என்றழைக்க
நெருடுகிறது
‘சக்கரை’ என்றே சொல்வேமே
கல்லைத் தின்றாலும்
செறிக்கும் வயதென்றார்கள்
சிரித்துக்கொண்டது மனது
அளந்து உண்டு
இளைக்க நடந்து
இன்சுலின் ஏற்றி
இன்னும் என்னென்னவோ செய்தும் குறையாத
‘இதை’ப்போல்
என்
சேமிப்பும் இருக்க
யாரேனும் வழி சொல்லுங்களேன்
***
அபுல் கலாம் ஆசாத்
azad_ak@yahoo.com
- கள்ளர் சரித்திரம்
- கைது செய்யப்பட்ட விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பெண்களை விடுதலை செய்யவேண்டும்
- Europe Movies Festival
- இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 1, 2002) (எய்ட்ஸ் தினம், ஈராக் விவகாரம், அபு அப்ரஹாம்)
- அநாதை
- இவள் அவளில்லை ?.
- முக்கால் வயது முழுநிலவு
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது 6
- சர்க்கரை
- தாமதம்
- அப்பா!
- நான் நானாக …ஒரு வரம்
- நிலவு
- வெற்றிடத்தை அறிதல் குறித்து
- அணுயுகப் புரட்சி எழுப்பிய ஆஸ்டிரிய மேதை லிஸ் மையிட்னர்[Lise Meitnar](1878-1968)
- அறிவியல் மேதைகள் வோல்டா (Volta)
- இன்று நாமும் குழந்தையும்
- தப்பிக்க இயலாத பொறி (எனக்குப் பிடித்த கதைகள்- 38 -தி.ஜானகிராமனின் ‘கண்டாமணி ‘)
- Europe Movies Festival
- காலமும் பயணியும்
- உலகம் உன்னை….
- பனி
- வேண்டுதல்
- வேதாளம் கேட்ட கதை