அன்பைத் தேடி…
புஷ்பா கிறிஸ்ரி
அன்பைத் தேடி அலைவதனால்
உன்னுள் அன்பும்,
அடக்கமும், பாசமும், பண்பும்
இன்பமும், இனிமையும்
இனிதாய் வந்து தங்கும்
அதிகாரம் தேடி,
சதிகாரனாகி
சாதிக்கப் போவது என்ன ?
விதியே என்று நீயும்,,
வீணாகத் தனிமைப் படுத்தப் படுவாய்
வீதியோரத்தில்…
அன்பைக் கொடுத்து விடு
அறிவைத் தந்து, பிறரை
ஆதரிக்கக் கற்று விடு
விதியை வென்று நீ
விண்ணை எட்டிடலாம்.
பிறரைச் சாடி
வதை மொழி பேசுவதால்
மிஞ்சுவதெல்லாம் உனக்கு..
பேயனென்ற பேச்சுத் தான்
நாயே என்றுன்னை
நாலுபேர் தள்ளி வைத்தால்
நீ போய் தனிமையில்
மெளனியாய் அஞ்ஞாதவாசம் தானே!
வேண்டாம்..வேண்டாம்
விட்டு விடு விவாதிப்பதை..
ஏற்றிடு பிறர் கருத்தை..
அது உனக்குச் சாதகமில்லை
என்றாலும்
சார்ந்து விடு அவர் பக்கம்
சாதிக்கலாம் நீ நிறையவே!
pushpa_christy@yahoo.com
- வாழ்வும் கலையும்
- மன அஜீரணத்துக்கு மருந்து.
- வேதத்தின் கால நிர்ணயமும் ஆரிய படையெடுப்புக் கோட்பாடும் : ஒரு மறு பார்வை
- தமிழக ஆறுகளைச் சிதைக்கும் மணற் குவாரிகள்
- சபா- தீபாவளி ஸ்பெஷல்
- கணவன்
- மதமாற்றத் தடைச் சட்டமும் தமிழ் நாட்டின் அரசியலும்
- தன்னாட்சி.. ?
- தீவுகள்
- என் கதை
- அன்பைத் தேடி…
- தேடல்
- முதல் சினேகிதி
- சொல்லியிருந்தால்…
- சொல்லுவதெல்லாம்
- அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம்
- இனிப்பும் ஆபத்தும் (எனக்குப் பிடித்த கதைகள் – 35 -சார்வாகனின் ‘கனவுக்கதை ‘)
- உலகத்தின் மிகப்பெரிய தங்க புதையலின் ரகசியம்
- பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow1904-1968)
- வளர்சிதை மாற்றம்
- அறிவியல் மேதைகள் சார்லஸ் டார்வின் (Charles Darwin)
- வாழ்வும் கலையும்
- புதையல்
- அழைப்பிதழ்
- குழந்தைகள் பற்றிய எட்டுக் கவிதைகள்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது…(தொடர்கவிதை ெ3)
- யாருக்கும் நான் எதுவுமில்லை
- உதய கீதம்
- விரதம்