கவலைபடாதே

This entry is part [part not set] of 13 in the series 20010519_Issue

பிரபு


வெளியே தொியாமல் வேராக இருக்கிறோமே,

முயற்சியின் கைகள் சிறைவைக்க படுகிறதே,

கவலைபடாதே,

உன் சிந்தனை வேர்,நாளை அசைய மரமாகும்..

உலகம் தன் பார்வையை உன் மேல் செலுத்தும்..

எனக்கு மட்டும் தோல்விகள் தொடர்கதையாகிறதே,

மனம் முழுதும் இருள் நிறம்பிக்கிடக்கிறதே,

கவலைபடாதே,

தோல்வி என்பது,

தூரத்தில் வந்து கொண்டுயிருக்கும் வெற்றி அல்லவா ?

இருள் என்பது,

குறைந்த வெளிச்சம் தானே ?

பிறைநிலவாகவே தான் வாய்ப்புகள் தொிகிறதே,

கவலைபடாதே,

உன்னுள்தான் பூர்ணசந்திரன் புதைந்து கிடக்கிறான்..

இலக்கோடு களமிறங்கு, இன்னல்களை எதிர்கொண்டு

போர்களம் வாசல் வந்து சேறும்..

வெற்றியின் கைகள் வீட்டுகதவை தட்டும்..

Series Navigation

பிரபு

பிரபு