திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040415_Issue

அரசியலும் சமூகமும்

ஜங் அவுர் அமான்!

நரேந்திரன் சமீபத்தில் இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர்களில் ஒருவரான ஆனந்த் பட்வர்தனின் 'ஜங் அவுர் அமான் (போரும் சமாதானமும்) ' என்ற ஒரு இரண்டு மணிநேர டாகுமெண்டரி படத்தை Sundance சேனலில் பார்க்க நேரிட்டது. மிக…

கல்யாண ரத்து தீர்மானம்

தந்தை பெரியார் ஆந்திர மாகாண பெண்கள் மாநாட்டில் விவாகரத்து செய்து கொள்வதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒன்று போலவே உரிமை இருக்கும்படியாக ஒரு தீர்மானம் பெண்களால் கொண்டு வரப்பட்டு ஒரே ஒரு ஓட்டில் அத்தீர்மானம் தோல்வியடைந்து…

தயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன ?

ஜெயமோகன் சமீபத்தில் ஒரு வார இதழில்[துக்ளக்] சுவாமி தயானந்த சரஸ்வதி வாசகர் கேள்விக்கு பதிலளித்தார். கெ. அசோகன் பள்ளியாடி கேள்வி : யாவரும் வேதம் கற்றுக் கொள்வதும் பிறருக்கு கூறுவதும் ஆலய அர்ச்சகர் ஆவதும்…

நிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்

மு. சுந்தரமூர்த்தி அரசியலும், சினிமாவும் இரண்டற கலந்திருக்கும் மாநிலம் என்ற பிம்பம் தமிழகத்துக்கு மட்டுமே உரிய ஒன்றாக இந்திய-தமிழக அறிவுஜீவிகளால் ஓயாமல் சுட்டிக்காட்டப்பட்டு வந்திருக்கிறது. இந்த போக்கு நாளடைவில் பிற பகுதிகளுக்கும் பரவி, இப்போது…

இது எப்படி இருக்கு…. ?

வரதன் 1996- தமிழமே கொந்தளித்துப் போயிருந்தது - ஜெயலலிதாவின் ஆட்சி முறையால். அப்போது மூப்பனார் எடுத்த முடிவு, சோவின் முயற்சி ஆகியவையால், மாற்றம் வந்தது. ஆனால் அறுவடையை திமுக சாமர்த்தியமாக செய்தது. ரஜினி கூட…

இந்துத்துவம் = சர்வ மத சமத்துவ சம்மதத்துவம்

ஜோதிர்லதா கிரிஜா அன்மைக் காலத்தில் அடிபட்டுவரும் இந்துத்துவம் என்னும் சொல்லைப் போல், வேறு எந்தச் சொல்லும் எக்காலத்திலும் இந்த அளவுக்கு அடி பட்ட தில்லை என்றே தோன்றுகிறது. இக்கட்டுரையின் தலைப்பில் உள்ள 'சர்வ மத…

முரண்பாடுகளின் முழுமை

தமிழ்மணவாளன் நடை பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலையொட்டி நடிகர் ரஜினிகாந்த் மனம் திிறந்திருக்கிறார். சென்னையில் இதுகாறும் நடந்திரா வண்ணம் 300க்கும் மேற்பட்ட புகைப்படக் காரர்களும் நிருபர்களும் அலைமோத தான் எழுதி வைத்திருந்த அறிக்கையை வாசித்திருக்கிறார். அதில்…

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 1

பி.கே. சிவகுமார் ஹார்வார்டில் கொடி நாட்டும் பெண்கள்: பெண்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். வருகிற இலையுதிர்காலத்தில் ஹார்வார்டில் முதலாம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிற பெண்களின் எண்ணிக்கை முதன்முறையாக ஆண்களைவிட அதிகம் என்று டைம் எழுதியிருக்கிறது.…

அறிவிப்புகள்

காலம் சஞ்சிகையின் இலக்கியப் பொழுது

டொராண்டோ நகர் தமிழ் எழுத்தாளர்களின் ஐந்து புத்தகங்கள் வெளியீடும், விமர்சனங்களும். சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, கவிதை, நாடகம், அறிவியல் கட்டுரைகள் என ஐந்து வேறு புத்தகங்கள் ஒரே நிகழ்வில் வெளியிடப்பட இருக்கின்றன. 1. இரவில் நான்…

கடிதம் – ஏப்ரல் 15, 2004

நாகரத்தினம் கிருஷ்ணா சென்ற வாரத்தில் வந்திருந்த முரளி ஆனந்த் கடிதத்திற்கு.. நண்பருக்கு, வழக்கம்போவொரு வக்காலத்து அல்லது சுயவக்காலத்துக் கடிதம். இதுபோன்ற கடிதங்களைத் திண்ணையில் ஏற்கனவே வாசித்த அனுபவம் உண்டு. நான் சொல்லவருவது ஏற்கவே ?தரன்,…

தமிழ்ப் படைப்பிலக்கியத் தடத்தில் மா அரங்கநாதன் படைப்புகள்

விவாதம் - ஏப்ரல் 17 , 2004 சனி மாலை 6 மணி தமிழ்ப் படைப்பிலக்கியத் தடத்தில் மா அரங்கநாதன் படைப்புகள் மற்றும் முன்றில் இலக்கிய இதழின் பங்களிப்பு குறித்த ஓர் விவாதம் பங்கு…

கடிதம் – ஏப்ரல் 15,2004

வெங்கட், டொராண்டோ. அன்புள்ள திண்ணை ஆசிரியர் குழுவிற்கு, வணக்கம். என்னுடைய முதலாவது தமிழ்ப் புத்தகம் 'குவாண்டம் கணினி - அறிவியல் கட்டுரைகள் ' யுனைட்டெட் ரைட்டர்ஸ் (தமிழினி) பதிப்பாக சென்றவாரம் சென்னையில் வெளிவந்திருக்கிறது. இந்த…

உயிர்மைக்கு ஒரு கடிதம்

நண்பர்களுக்கு வணக்கம். கடந்த செப்டம்பர்2003. தொடங்கப்பட்ட உயிர்மை மாத இதழ் பரந்துபட்ட பங்களிப்புகளுடன் ஒரு சர்வதேச தமிழ் சஞ்சிகையாக பரிணமித்து வருகிறது. உலகெங்கிலிருந்தும் தமிழில் எழுதும் நண்பர்கள் கலை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம், தத்துவம்,…

கடிதம் – ஏப்ரல் 25 – சுமதி ரூபனின் ‘வடு ‘

பொ. கருணாகரமூர்த்தி. பெர்லின் அந்தக் கதையை நான் முன்னரே காலச்சுவட்டில் படித்திருந்தேன். மல்லிக்குட்டி என்ற பெண் சிறுமியாக இருந்தபோது அவள்மேல் பிரயோகிக்கப்படும் விலங்குத்தனமான அருவருக்கக்கூடிய பாலியல் துஷ்பிரயோகத்துக்கு எதிராக அவளால் ஒன்றுமே செய்யமுடியாமல் போகிறது.…

கடிதங்கள் ஏப்ரல் 15,2004

நாகூர் ரூமி - அப்துல் சலாம் - ஜெயமோகன் - கார்த்திக் ராமசாமி - பித்தன் கொஞ்ச நாட்களுக்கு முன் வந்த இஸ்மாயீல் அவர்களுடய 'வாப்பாக்காக ' என்ற கதையை இன்று படித்தேன். ரொம்ப…

2004-ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிற்பி விருது

கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கு அமெரிக்க தமிழிலக்கிய ஆர்வலர்கள் அமைப்பு* வழங்கும் 2004-ஆம் ஆண்டிற்கான 'இலக்கியச் சிற்பி ' விருது கவிஞர் திரு. மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கவிஞரைப்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

தொழில்நுட்பச் செய்திகள் ஏப்ரல் 15, 2004

லிண்டோஸ்/லின்ஸ்பைர், டிம் பெர்னெர்ஸ் லீ, எக்ஸ்பி ஓட்டைகள், நவீன ஒயின், வை ராஜா ஃபை ** லிண்டோஸ் இயங்குதளத்தை விற்பனை செய்யும் லிண்டோஸ் நிறுவனம், லிண்டோஸ் இயங்குதளத்தின் பெயரை மாற்றப்போவதாக அறிவித்திருக்கிறது. விண்டோஸ் இயங்குதளத்தை…

மைக்ரோசாஃப்ட் – வின்டோஸ் சமாச்சாரங்கள்

சீனாவில் மைக்ரோஸாஃப், இண்டர்டிரஸ்ட் காப்புரிமை மைக்ரோசாஃப்ட் ஏறக்குறைய 750 மில்லியன் டாலர்களை முதலீடு செய்து சீனாவில் தன்னுடைய விற்பனையையும் சீன மொழி நிரலிகளையும் உருவாக்கும் என்றும் அறிவித்திருக்கிறது. சீனாவில் ஏற்கெனவே மிகவும் பரவலாக மைக்ரோஸாஃப்டின்…

உலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் உன்னதமான பனாமா கால்வாய் [Panama Canal (1870-1914) The Greatest Engineering Marvel]

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா மனிதர் படைத்த கடல்வழிக் கணவாய்! மலைமேல் கட்டிய அணைநீர்க் கால்வாய்! கடல்களை இணைக்கும்! கண்டத்தைப் பிரிக்கும்! கப்பலைத் தொட்டி நீரில் ஏற்றி இறக்கும், ஒப்பிலா…

இலக்கிய கட்டுரைகள்

நந்திக் கலம்பகம்.

வளவதுரையன் கலம்பகம் என்பது தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். கலம்பகம் என்பது கலப்பு + அகம் எனப் பிரிக்கப்படும். அதாவது கலப்பதற்கு உரிய இடமுடையது என்று பொருள்படும். அகம், புறம் முதலாகிய பல்வகைப் பொருள்களும்,…

குதிரைவால் மரம்

ஜெயமோகன் நித்யாவிடம் அஜிதனைப் பற்றி நிறையச் சொல்லியிருந்தேன். அப்போது அவனுக்கு நான்கு வயது. குருகுலத்தில் பலரும் தங்கள் குழந்தைகளைக் கொண்டுவந்து விட்டு விடுமுறை முடிந்தபிறகு கூட்டிச் செல்வதுண்டு. விடுமுறையில் நிறைய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும்.…

டான் கில்மோர்

அ.முத்துலிங்கம் அது அங்கே இருப்பது எனக்கு தெரியும் மறுபடியும் விலாசத்தை சரி பார்த்தேன். ரொறொன்ரோவில் இந்த பகுதிக்கு நான் அதுவரை வந்ததில்லை. அப்படியும் ரொறொன்ரோவின் மத்தியில் அது இருப்பதாக விலாசம் சொல்லியது. பல வருடங்களுக்கு…

மலைப்படுகடாம். ஒரு சித்திரம்

வளவ துரையன் நமக்குக் கிடைத்துள்ள சங்கப் பாடல்களாக எட்டுத்தொகையும், பத்துப் பாட்டும் போற்றிப் புகழப்படுகின்றன. சங்க காலத்தில் காதலும் வீரமுமே பாடுபொருள்களாக விளங்கின. புலவர்களும் புறத்துடன் அகத்தையும் சேர்த்தே பாடினர். சங்ககால மாந்தர்தம் வீரம்…

என்னோடு என் கவிதை

மாலதி ---- எந்த நட்சத்திர பாதிப்பில் என் கவிதை எனக்குள் இருப்பைத் தெரிவித்தது என்று யோசித்தபோது எனக்குப் புரிந்தது. இன்னது தான் என் ரசனை இது தான் என் தேவை என்று இனம் காண்பிக்கிற…

சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்

கரு திருவரசு உலகப் பெருமொழிகள் அனைத்துக்கும் தனித்தனி இஇயல்புகள், மரபுகள் இஇருக்கின்றன. இஇயல்பு, மரபு என்பனவற்றின் தொகுதியைத்தான் இஇலக்கணம் என்று சொல்கிறோம். இஇப்போது, 'தமிழில் உள்ள சொற்புணர்ச்சி விதி தேவையில்லை ' என்பதுபோல ஒரு…

ஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ : ஓர் அலசல்

சோதிப் பிரகாசம் ( வரலாற்றின் முரண் இயக்கம்:பாகம் ஒன்று:இணைப்பு-1-இல் இருந்து . . . ) இந்த நூலின் முன்னுரையை எழுதி முடித்து, ஒன்றாவது ஒளி-அச்சுப் பிழைகளையும் சரி பார்த்து விட்டு, அணிந்துரைகளுக்காக நான்…

கவிதை உருவான கதை-2

எஸ் பாபு ---- கடந்த 2002ம் ஆண்டு ஒரு வருட ஆராய்ச்சிப்பணிக்காக பிரான்சு நாட்டில் இருந்தேன். ஒரு அமைதியான ஊர். பாரீசிலிருந்து 300 மைல் தெற்கில் உள்ள ஆஞ்சே என்னும் ஊர். குளிர் காரணமாக…

கதைகள்

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)

எஸ். ஷங்கரநாராயணன் /13/ தனுஷ்கோடிக்கு நாதன் சாரைச் சந்தித்தது பெரும்பொழுது என்றுதான் பட்டது. சற்று பெரியவர் என்பதை... முதிய தலைமுறைக்காரர் எனவும் அதனாலேயே அவரை முதல்-மதிப்பீட்டிலேயே அலட்சியப் படுத்தவும் நினைத்தது எத்தனை அறிவீனம் என…

நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -15

நாகரத்தினம் கிருஷ்ணா நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ் சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனுமாவர் பராநந்தி ஆணையே - திருமூலர் (திருமந்திரம்) தை மாதம். பெளர்ணமி சந்திரன் கிழக்கிலுமில்லாமல்,…

விளிம்பு

சூர்யராஜன் கடற்கரையில் நின்று கொண்டிருந்தான் அவன். கடல் முன்பும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. எப்போதும் இருக்கும். சாஸ்வதம் கரையைத் தொடும் ஒரு அலைக்கும், இன்னொரு அலைக்கும் இடையில் பம்மும் ஏகாந்தம் ஓங்காரமா ? சூன்யப்…

என்னைப் பெத்த அம்மாாாாஆ…

புதியமாதவி, மும்பை42 'எப்ப வந்த தாயி.. ? ' மாட்டைப் பத்திக்கொண்டுப் போகும் கோனார் மாமா கேட்டார். 'வந்துப் பத்து நாளு ஆவுது மாமா.. ' 'என்ன இன்னும் அப்படியேதான் கிடக்காளா.. ' 'யோவ்…

காடன்விளி

ஜெயமோகன் தூரத்துச்சொந்தம் என்பதனால் அவர்கள் நேராக எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டார்கள். அம்மாவும் பெண்ணும் சாயந்தர நேரத்தில் ஆற்றுக்கு அக்கரையில் ஒற்றைக்காளை வண்டியில் வந்து இறங்கினார்கள். கிழக்கு திண்ணையின் விளிம்பில் நின்று தூரத்தில் சரிந்த செம்மண்…

அ.முத்துலிங்கம் அது அங்கே இருப்பது எனக்கு தெரியும் மறுபடியும் விலாசத்தை சரி பார்த்தேன். ரொறொன்ரோவில் இந்த பகுதிக்கு நான் அதுவரை வந்ததில்லை. அப்படியும் ரொறொன்ரோவின் மத்தியில் அது இருப்பதாக விலாசம் சொல்லியது. பல வருடங்களுக்கு…

திரேசா

நாவாந்துறைடானியல்ஐீவா நள்ளிரவு இரண்டு மணியைக் கடந்தும் துாக்கம் வராமல் துாரத்தே செல்ல; என் கால நகர்வில் கடந்து சென்ற ஜந்தாண் ஆண்டுகளுக்கு முன் முற்றுப்பெற்று விட்ட அந்த மனிதத்தின் நினைவு எனக்குள் ஓடத்தொடங்கியது. .வயதெல்லை…

யூசுஃபும் கண்ணாடியும் -கதை — 04

தமிழில் : நாகூர் ரூமி ==== யூசுஃப் நபி வரலாறு -- ஒரு அறிமுகம் நபி யூசுப் (அலை) அவர்கள் நபிமார்களிலேயே மிகவும் அழகானவர்கள். அதேசமயம் மிகவும் ஒழுக்கமானவர்கள். யூசுஃப் நபியவர்கள் யஃகூப் நபியின்…

புழுத் துளைகள் (குறுநாவல் – 4)

ரெ கார்த்திகேசு அக்கிக்கோ பயன்படுத்திய அதே அலுவலகத்தில்தான் ஸ்டாவனின் அலுவலகம் இருந்தது. ஆனால் முன்பு அவன் பார்த்திருந்த பல கருவிகள் சாதனங்கள் அங்கே இல்லை. சுத்தமாக பெரும்பாலும் பொருட்கள் ஏதும் இல்லாமல் காலியாக இருந்தது.…

கலைகள்

குளிர்பானங்கள்

அஃபிபா ஜவ்வாத் மணியர் ** சாக்கோ வாழைப்பழ குளிர்பானம் தேவையான பொருட்கள் 1 கோப்பை பால் 1 கோப்பை கோகோ தூள் 2 வாழைப்பழங்கள் உரித்தது 2 மேஜைக்கரண்டி கிரீம் (வேண்டுமாயின்) 2 மேஜைக்கரண்டி…

கவிதைகள்

உயிர் தொலைத்தல்

நாவாந்துறைடானியல்ஐீவா- வெண்பனித் துகள்கள் வந்திறங்கும் இரவில் நம் காதல் காத்திருக்க காலமற்று கரைந்து போனது.... வெட்டித் தெறித்த மின்னலைக் கோடுகளாய் உன் நினைவு மட்டும்.... முறிந்த இடம் இன்னும் மூடுபனி போல்.... தொலைந்தலுக்கான காரணம்....…

வெற்றி

நளாயினி தாமரைச்செல்வன். வலி ரணம் அதன் தழும்புகள் எப்படி இருக்கும். ? தெரியவே தெரியாது எனக்கு. பேனா பிடித்தபோது தான் தழும்புகள் தாராளமாய். மனசோ அடிக்கடி தடவிப்பாற்து பெரிமிதப்பட்டுக்கொள்ளும். எனது எழுத்துக்கள் உன்னை அக்கு…

கவிதைகள்

புஷ்பா கிறிஸ்ரி இரத்த தானம் இன்னொருவர் நலம் காத் திரங்கி இன்னொருவர் துயர் போக்குமி ன்பத்தில் எத்தனை மகிழ்ச்சி எத்தனை மகிழ்ச்சி அத்தனை மகிழ்விலும் மனத்தினில் கிளர்ச்சி அத்தனை நிகழ்விலும் எத்தனை நெகிழ்ச்சி எத்தனை…

மரபும் புதிதும் : இரு கவிதைகள்

தேனிரா பாண்டியன் , தேவதேவன் ==== எது கவிதை ? தேனிரா பாண்டியன். இலைக்கனத்தை தாங்குகின்ற மரத்தைப்போல இலக்கணத்தை தாங்குவதே கவிதையாகும் மலைக்கனத்தை தாங்குகின்ற தரையைப்போல மரபுதனை தாங்குவதே கவிதையாகும் அலைக்கனததை தாங்குகின்ற கரையைபோல…

தமிழவன் கவிதைகள்-ஒன்று

தமிழவன் சிவப்பாய் பூத்து உதிரும் மர நிழலில் நடந்து செல்கையில் நினைவுவர பக்கத்தில் வசிக்கும் பழங்கால ஆசிரியரைப் பார்த்து விடலாமே என்று போனேன். ஸ்ரோக்கில் அவஸ்தைபட்டபடி மெலிந்து வயதாகிப்போய் புரண்டபடி கிடந்தார் அதட்டும் முரட்டு…

என் பிரிய தோழி

பாஷா என் நினைவு செல்களிலிருக்கும் உன் முகவரி இந்த உப்புகாற்றில் கரைந்துகொண்டிருக்கிறது என் இதய ஆழத்திலிருந்து மீண்டும் மீண்டும் வரும் உன் நினைவுகளை அலைகள் இழுத்துசெல்வதை கையாலாகத்தனமாய் கண்ணீருடன் பார்த்திருக்கிறேன் அதோ நம்சுவடுகள் நடுக்கடலில்…

வேர்கள்

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) (தெள்ளூதமிழ்க்குதவு சீலன் எனத்தொடங்கும் காவடிச்சிந்து) மூச்சடக்கி முக்குளிக்கும் கூட்டம் - மூழ்கி முத்தெடுக்கும் பெரும்பணியே தேட்டம்- தேடிச் சேர்த்ததெல்லாம் வேறிடத்தில் தேடியவர் ஓரிடத்தில் இருப்பார்--சுகம் துறப்பார் கண்குளிரும் பூவழகு ஈர்க்கும்-- மொட்டு…

வா

அரவிந்த் அப்பாதுரை வா... அழைப்பு விடுத்துவிட்டு காத்திருக்க வேண்டியதுதான்... எந்த சுடரும் வருவதில்லை. எத்தனையே கணங்கள் காத்திருக்கின்றேன் வரவில்லை. ஒன்றுமே வரவில்லை. வந்திருந்தாலும், அவை புலன்கள் தேடி, கண்டடைந்து, இன்பமுற்ற பண்டங்களாகவில்லை. சுடர்கள் நிதானமாகி…

துரோகர்(துரோணர்)

பிச்சினிக்காடு இளங்கோ தகுதி கேட்டாய் முதலில் தட்சிணை கேட்டாய் பின்பு கூச்சமில்லையா 'குரு ' என்று சொல்லிக்கொள்ள..! குரு பக்தியைக் கொலைசெய்த முதல் குற்றவாளி நீ! உன் பெயரை உச்சரிக்கிறபோதே யுக யுகமான ஏமாற்றம்…

அளவுகோல்

நாகூர் ரூமி ==== செண்ட்டிமீட்டர்களும் இன்ச்சுகளும் கொண்ட இஷ்ட அளவுகோல் ஒன்று எப்போதும் வைத்திருந்தேன் துல்லியமாக அளப்பதற்கு. கைக்கு அடக்கமான அதைக்கொண்டு கஷ்டப்பட்டு ஒரு நாள் நான் நீளம் மற்றும் உயரம் அறிய பாதத்திலிருந்து…

நகைச்சுவை

எந்த செய்தி – யார் பிரசுரித்தது ? தினகரன் – தினத்தந்தி தினமலர்

கேள்விபதில் சொதப்பப்பா படியுங்கள் - பதில்கள் கீழே 1 மதுரையில் டாக்டர் ராமதாசுக்கு கறுப்புக் கொடி காட்டிய ரஜனி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி தடியடியில் காயம் அடைந்த ரஜனி மன்ற நிர்வாகி வக்கீல்…

ஆருயிர்கெல்லாம் ‘வம்பு ‘ செய்யல் வேண்டும்!

சித்ரா ரமேஷ் , சிங்கப்பூர் பிழைத்தவன் தப்பித்தவன் இல்லை.இதுதான் 'சர்வைவர் ' என்ற தொலைகாட்சி நிகழ்ச்சியில் நடப்பது. நயவஞ்சகம், குழி பறித்தல், கட்சி மாறுதல், திட்டமிட்டு முதுகில் குத்துதல், பழி வாங்குதல்.... நம்மூர் அரசியல்…

தேவலோகத்தில் ஒரு கடிதப் போக்குவரத்து

சொதப்பப்பா முதல்கடிதம் *** பெறுநர் விஷ்ணு அனுப்புனர் நாரதர் பொருள்: தமிழக அரசியல் கருணை கூரும் பிரபோ, நேற்று தமிழ்நாடு போயிருந்தேன். ரஜினி பூந்து கலக்குகிறார். (ராகவேந்திரராக வேஷம் போட்ட அதே ஆள்தான்). ராமதாஸ்…