பிழைதிருத்தம் 12. – நகர்புறம் – நகர்ப்புறம்

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

கரு.திருவரசு



“நகர்புறம்” என்பதும் “நகர்ப்புறம்” என்பதும் ஒருபொருள் சொற்களா?

நகர்புறம் என்றால் “நகரும் புறமும்” என்றும், “புறத்தே நகர்” என்றும் பொருள்படும்.

“நகர்” என்பது பெயர்ச் சொல்லாக வரும்போது ஊர், நகர், நாடு என்ற வரிசையில் வரும் நகரமாகவும், அதுவே வினைச் சொல்லாக வரும்போது, நீ இருக்கும் இடத்திலிருந்து கொஞ்சம் “நகர் – நகர்ந்துகொள்” என்றும் பொருள்படும்.

நகர்புறம், என்பதையும் நகர்ப்புறம் என்பதையும் ஒன்றுபோலப் பயன்படுத்தி நாம் குழம்பிப் போவதோடு, மற்றவரையும் குழப்பிக் கொண்டிருக்கிறோம்.

‘நகர்’ என்பது நகரம் என்றும் நகர்ந்துகொள் என்றும் பொருள்படும்.

‘புறம்’ என்னும் சொல்லுக்கு வெளியிடம், முதுகு, பக்கம், வீரம் போன்ற பல பொருள்கள். இங்கே நாம் புணர்ச்சி விளக்கத்துக்காக “பக்கம்” எனும் பொருளைமட்டும் எடுத்துக்கொள்வோம்.

‘நகர்ப்புறம்’ என்றால் நகரமும் நகரத்தைச் சார்ந்த பக்கமும் என்று பொருள்.

“நகரத்தின் வளர்ச்சி அதைச் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் அதன் விளைவுகளை ஏற்படுத்தும்” என்று எழுதும்போது அல்லது பேசும்போது ‘நகர்புறத்தின்’ என்பதைப் பயன்படுத்துவது தவறு. “நகர்ப்புறத்தின்” என எழுதவேண்டும், பேசவேண்டும்.

நகர்புறம் = நகரும் புறமும்
நகர்ப்புறம் = நகரப் பகுதி


thiruv36@yahoo.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு