வலைப்பூ இலக்கியத்தின் வளமை

This entry is part [part not set] of 24 in the series 20070412_Issue

முனைவர் மு. பழனியப்பன்


இணையம் தகவல்களின் சரணாலயம் என்ற நிலையில் மிகக் குறிப்பிடத்தக்க இடத்தைத் தற்காலத்தில் பெற்றுவருகிறது. இணையதளம், இணையச் சந்திப்பு, இணையக் கடிதம், இணையப் படங்கள், இணைய திரைப்படம், இணையக் குறும் படம், இணைய இதழ், இணைய அகராதி, இணைய நூலகம், இணையக் கல்வி, இணைய விளையாட்டு, இணைய வணிகம், இணையச் சுற்றுலா, இணைய வரைபடம், இணையக் குபுமம், இணைய நட்பு, இணையக் காதல், இணைய வங்கி, இணைய அலுவலகம் என்று எல்லாத் துறைகளுடனும் இரண்டற கலந்து விட்ட ஒரு காலம் இக்காலம். இத்தகைய அத்தனை வசதிகளையும் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளிலும் ஓரளவ குறைந்த பணச்செலவில் பெற முடிகிறது என்பது ஒரு ஆறுதலான செய்தி.
இணையத்தைப் பயன் கொள்ளுதல் என்பது ஒருமுறை. அம்முறையின் வளர்ச்சி ஒவ்வெரு இணையப் பயனாளியும் இணைய நிர்வாகியாக மாறுவது என்பதுதான். இணைய நிர்வாகியாக மாறி இணையதளம் ஒன்றைப் பொறுப்பேற்று நடத்துதல் என்பது சற்று கடினமான செயல். அதற்கென ஒரு பெயரைப் பதிவ செய்து அதை நிர்வகிக்கப் பணம் கொடுத்து அதில் இடம் பெற வேண்டிய செய்திகளை அவ்வப்போது தயாரித்து, வடிவமைத்து அதன்பின் இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணங்களை ஏற்று மேலும் அதனை வளப்படுத்துதல் என்பதை வெற்றிரமாகச் செயல்படுத்துதல் என்பது ஒரு சாதனையாகும்.
இந்த இணைய தளத்தை விளம்பரங்கள் முலமாக அல்லது நண்பர்களின் தொடர்பகள் முலமாக பரவலாக்கம் செய்தல், தேடு பொறிகளுக்கு தயாரிக்கப் பெற்ற இணையதளத்தை வழங்குதல் என்பது இன்னும் பெரிய கலை. இதற்குப் பல நிறுவனங்கள் இலவசமாக இணைய தளம் அமைக்க வசதி செய்து தந்தன. அவ்வசதிகளைப் பயன் படுத்தி இணைய தளம் ஆரம்பித்து அவற்றில் செய்திகளைப் படங்களை உள்ளீடு செய்து கொண்டிருக்கும் நேரத்தில் இணைய இணைப்பில் ஏதேனும் தகராறு தோன்ற மீண்டும் முதலில் இருந்து வரவேண்டும். எனவே வலையேற்றம் செய்வது என்பது மிகக் கடினமான செயல். அதைவிடக் கடினமான செயல் வலையேற்றம் செய்தவற்றில் தவறு நேர்ந்தாலோ அல்லது மாற்றி அமைக்க நேர்ந்தாலோ அவ்வ மாற்றங்களை உடன் செய்வது என்பது ஏறக்குறைய இயலாத ஒன்று.
இச்சூழலில் ஒரு இணையப் பக்கம் வெற்றிகரமாக நடத்த, அவற்றில் செய்திகளை நினைத்த நேரத்தில் வலையேற்றம் செய்ய, வலையேற்றியவற்றை உடன் நிறுத்த, வலையேற்றப் பெற்ற செய்திகளுக்கு பின்னூட்டம் என்ற நிலையில் பிரதிபலிப்புகளைப் பெற ஒரு அருமையான வசதி தற்போது கிடைத்துள்ளது. இதற்குப் பெயர் வலைப்பூ என்பதாகும். இது முழுக்க முழுக்க இலவசமாகக் கிடைக்கிறது. ஒரு மனிதருக்கு எத்தனை வலைப் பூக்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அவற்றிற்கான பின்னூட்டங்களை அவர் தன் மின்னஞ்சல் முகவரியில் பெறலாம். அப்பின்னூட்டங்களும் அவ்வலைப் பக்கத்திலேயே தெரியும். மேலும் ஒரு செய்தியை வலைப்பக்கத்தில் வலையேற்றி விட்டால் அச்செய்தி நிரந்ததரமாக சேமிக்கப் பெற்றுவிடும். தேவையான போது அவற்றை எவரும் பார்க்க இயலும். அவற்றில் உள்ள செய்திகளைச் சொல், தொடர், தலைப்பு வாரியாகத் தேடிப் பெறமுடியும். கணினியில் சேமித்து வைக்கப்பெற்ற கோப்பு அழிந்து போனாலும் வலைப்பூவில் உள்ள பதிவ வழியாக மீண்டும் அந்தச் செய்தியைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி. அது மட்டும் இல்லை. என் சொந்தக் கணினி என் சொந்த ஊரிலேயே இருக்க அதில் உள்ள கோப்புகளில் தேவையானவற்றை வலைப் பூவில் பதிவு செய்துவிட்டால் எந்நேரத்திலும் எவர் கணினியிலும் இணைய இணைப்ப பெற்றவுடனேயே பெற்றுவிடமுடியும்.

வலைப்பூ வசதியை வழங்கும் நிறுவனங்கள்
வலைப்பூ வசதியைத் தற்போது பல நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகின்றன. ஒருகாலத்தில் இதில் இணைந்தபின் இந்த வசதி பணமயமாக்கப்படுமோ என்ற ஐயம் இருந்தது. ஆனால் தற்போது இந்த ஐயம் இல்லை என்ற அளவிற்குப் பெரும்பாலான நிறுவனங்கள் இவ்வசதியை வழங்கத் தயாராகி விட்டன. குறிப்பாக கூகிள் நிறுவனத்தின் தொடர்பில் பிளாக்கர் என்ற தொடுப்பின் வழியாக ஒவ்வெருவரும் ஒரு வலைப்பூவைப் பெறமுடியும்.

யாகூ, எம்எஸ்என், ரீடிப் மெயில் போன்ற பரவலாகத் தெரிந்த நிறுவனங்கள் இவ்வசதியை வழங்கி வருகின்றன. இருப்பினும் பிளாக்கர் என்பதே ஏறக்குறைய பல நிலைகளில் பலராலும் பயன்படுத்தப் பட்டு வருகின்றது.

வலைப்பூ வடிவமைப்பு
வலைப்பூ வடிவமைப்பில் ஏற்றப்படும் வலைச்செய்திக்கு அதிக இடம் முக்கியஇடம் தரப்படும்.

அதன்பின் இதனை ஏற்படுத்தியவர் பற்றிய குறிப்பு ஓரிருவரிகளில் தரப்பெற்றிருக்கும். அத்தொடர்பை அழுத்தி ஏற்படுத்தியவரின் தகவல்களை அதிகமாகப் பெறஇயலும்.

மேலும் வலைச் செய்திகளைப் பார்க்கும் வண்ணம் ஆவணக் காப்பகத் தொடுப்பு ஒன்றும் இருக்கும். இத வார வாரியாகத் தலைப்ப வாரியாக, அடுக்கிக் கொள்ளவம் வசதி உண்டு.

வலைச்செய்திகளுக்கு வரும் பின்னூட்டங்களை அதன் அடிப்பக்கத்தில் காமாண்ட்ஸ் என்ற நிலையில் அடுக்கி வைக்கப் பெற்றிருக்கும். இவற்றைத் திறந்து வந்தப் பின்னூட்டங்களுக்குத் தக்கவகையில் ஏற்படுத்தியவர் பதிலும் வழங்கலாம்.

யாகூ, எம்எஸ்என், ரீடிப் மெயில் போன்ற பரவலாகத் தெரிந்த நிறுவனங்கள் இவ்வசதியை வழங்கி வருகின்றன. இருப்பினும் பிளாக்கர் என்பதே ஏறக்குறைய பல நிலைகளில் பலராலும் பயன்படுத்தப் பட்டு வருகின்றது.

மேலும் இவ்வலைப்பூவில் பாடல்கள் ஒலிபரப்படலாம். குறும் படங்களைக் காட்சிப்படுத்தலாம். புகைப்படங்களை இணைக்கலாம். அசை படங்களை இணைக்கலாம். வலைப்பூவைத் திறந்ததும் பூமாரி பொழியச் செய்யலாம். ஓடும் வகையில் செய்திகளை ஓடவிடலாம். தற்போது எந்தக் குறிப்பிட்ட நாட்டவர் அக்குறிப்பிட்ட வலைப்பூவைப் பார்த்துக் கொண்டுள்ளார் என்பதனை அறியலாம். எத்தனை பேர்கள் இவ்வலைப்பூவைப் பார்க்கின்றனர் என்ற எண்ணிக்கையை அறியலாம். இவையெல்லாம் கூடுதல் முயற்சிகள்.
மேற்வுறியவை குறிப்பிட்ட ஒருவர் ஏற்படுத்திய வலைப்பூவில் அவர் பெறும் தகவல்கள். அவ்வலைப்பூ முலம் மற்றவலைப் பூக்களைத் தொடர்பு கொள்ள இயலும். அதற்கான தொடுப்பகள் லிங்ஸ் என்ற அமைப்பில் பெறலாம். குறிப்பிடத்தக்க ஒருவரின் முகவரியை மற்றவர்கள் இதில் தந்து அவர் பக்கத்திற்குச் செல்லச் செய்யலாம். இவைதவிர இந்தத் தொடுப்பில் தினம் பார்க்கவிரும்பம் ஏற்பாட்டாளரின் விருப்ப தளங்களை வரிசைப்படுத்திக் கொள்ளலாம். இதன் முலம் வேறுபக்கங்களுக்கு இதன்வழியே சென்று சேர இயலும்

இதற்கு அடுத்த நிலையில் வலைப்பூவை இலவசமாக வழங்கும் நிறுவனங்கள் ஏற்பாட்டாளரின் அனுமதியோடு விளம்பரங்களை இணைக்க ஒரு இடத்தை வைத்துள்ளன. அவ்விடம் அதற்கான வாடகை போன்றன வலைப் பூவை வழங்கும் நிறுவனங்களுக்குச் சென்று சேரும் வகையில் அமைக்கப்பெற்றுள்ளது. இதன் காரணமாகவே வலைப்பூக்களை இலவசமாக அளிக்கப் பெற்று வருகின்றன.

வலைப்பூ முகவரி
வலைப்பூவின் முகவரி விருப்பத் தேர்விற்கு உரியது. அவரவர் சுய விருப்பம் கருதி அவரவர் அவரவர் வலைப்பூவிற்குத் தமிழிலேயோ அல்லது ஆங்கிலத்திலேயே அல்லது அவரவர் மொழியிலேயே வைத்துக் கொண்டு அம்மொழியிலேயே தெரியவும் செய்யலாம். அப்பெயருக்குப் பின்னால் வழங்கும் நிறுவனத்தின் பெயர் அமையும். அதன்பின் வகைமை அமையும். எடுத்துக்காட்டிற்கு manidal.blogspot.com என்பது கட்டுரையாளரின் வலைப்பூ முகவரி. இதனடிப்படையிலேயே எல்லா வலைப்பூக்களும் முகவரியைப் பெறுகின்றன.

வலைப்பூ வடிவமைக்க உதவி
வலைப்பூவை இலவசமாக வழங்கும் நிறுவனங்கள் வலைப்பூவினை வடிவமைத்துக் கொள்ள அதற்கேற்ற கருவிகளையும் வழங்குகின்றன. இக்கருவிகளைக் கொண்டு முன்று படிநிலைகளில் ஒரு வலைப்பூவை வடிவமைத்துவிடலாம். ஒரே பக்கம் தான் வலைப்பூ. இது அதன் வலிமையும் கொடுமையும் கூட. எனவே அந்த ஒரே பக்கம் அழகாக இருந்தால் மட்டுமே வாசிப்பவரைக் கவரும். அதே நேரத்தில் அது ஏற்பாட்டாளரின் சுவைக்கு ஏற்ப அமைந்திருக்கவேண்டும். இவ்வகையில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். இல்லையானால் வேண்டும் போது மாற்றிக் கொள்ளலாம். மாறிக் கொள்ளலாம்.

வலைப்பூவில் வலையேற்றம் செய்ய வழிகள்

பிறரது வலைப்பூவை யார் வேண்டுமானலும் பார்க்கலாம். ஆனால் யார் வேண்டுமானாலும் மற்றொருவர் வலைப்பூவுக்குள் நுழைந்து வலையேற்றம் செய்துவிட முடியாது. வலைப்பூ ஏற்படுத்தியவரே தன் வலைப்பூவுக்குள் நுழைந்து வலையேற்றம் செய்யமுடியும். அவருக்கு என ஒதுக்கப் பெற்றுள்ள கடவுச் சொல்லைப் பயன்படுத்தி அவர் குறிப்பிட்ட வலைப்பூ வலையேற்ற உதவும் பகுதிக்குள் நுழையவேண்டும். அங்கு புதிய செய்தியை ஏற்றும் வசதி, ஏற்றிய செய்தியை அழிக்கும் வசதி, செய்திக்கு வண்ணம் பூச, படம் சேர்க்க, எழுத்துகளை பட்டை தீட்ட, சாய்க்க, உருவ ஒழுங்கு செய்ய எனப்பல கருவிகள் இருக்கும். அவற்றை இணைத்து ஒரு செய்தியை வலையேற்றம் செய்க என்ற தொடர்பை அபுத்தினால் வலையேற்றிவிடலாம். வலையேற்றிய அழகை ஏற்பாட்டாளரே பார்த்து ரசிக்கலாம்.

வலைப்பூவின் வரலாறு
வலைப்பூ என்பதன் ஆங்கில முலம் பிளாக் என்பதாகும். இதன்முலம் வெப்பிளாக் என்பதாகும். இதுவே சுருங்கி பிளாக் ஆனது. 1994ல் பிளாக்கை உருவாக்கிய சஸ்டின் ஹால் என்பவர் பிளாக்கின் தோற்றக்காரணர்களுள் முன்நிற்பவர் ஆவார். அதன்பின் பல முயற்சிகள் தொடர்ந்துள்ளன. ஆக்ஸ்போர்டு அகராதி வெப் பிளாக், வெப்பிளாக்கர் ஆகிய சொற்களை 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தன் சொற்குழுமங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளது.

பிளாக்கிற்கான ஏற்பாட்டுக் கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள் இவான் வில்லியம்ஸ், மற்றம் மெக்ஹாரிக்கான்ஸ் ஆவர். இவர்களின் குழமமான பைரா லாப்ஸ் என்பதுதான் முதன்முதலில் பிளாக்கர் என்பதை உருவாக்கியது. இவ்வசதி பின்னால் கூகிள் நிறுவனத்தால் காப்புரிமை செய்யப் பெற்று அந்நிறுவனத்திற்கு ஆக்கப் பெற்றுவிட்டது.

தமிழில் வலைப்பூ
தமிழில் ஒருங்குறி முறை என்ற எழுத்துவடிவ முறை அறிமுகமானது மிகப் பெரிய உதவியாக வலைப்பூ ஏற்பாட்டாளர்களுக்கு அமைந்துவிட்டது. ஏறக்குறைய முதன் முதல் தமிழ்ப்பதிவு என்பது எது எனக் கண்டறியமுடியாத ஆதி அந்தமில்லா இலக்கிய வரலாற்றுச் சூழலே இதற்கும். ஆனால் 2001 ஆம் ஆண்டு முதல் தமிழ் பதிவகள் வேகம் பெற்று விட்டன என்பது மட்டும் உறுதி.

வலைப்பூ ஏற்பாட்டாளர்களின் தகுதிகள்
வயது, கல்வி, மொழி, இனம், பால், பெயர் என எவ்வகையிலும் கட்டுப்பாடு தேவையில்லா கட்டுப்படுத்த முடியாத அனைவரும் இதனுள் நுழையலாம். தமிழ் படிக்க வலையேற்றத் தெரிந்தால் போதும்.

வலைப்பூக்களின் அரங்கம்
வலைப்பூவில் செய்தியை வலையேற்றம் செய்தாகிவிட்டது. அதனை எவ்வாறு மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வது. அதற்கெனத் தொடங்கப் பெற்றவைதான் அரங்கம் என்ற அமைப்பகள். இவற்றில் உறுப்பினர்களாக இணையவேண்டும்.

ஒவ்வெரு வலையேற்றமும் வலைப்பூவில் நிகழ்த்தியபின் இவ்வரங்கங்களில் தேவையான இடத்தில் வலைப்பூ முகவரியைத் தந்து அற்றைநாள் முன்னேற்றத்தை ஏற்க எனக் கட்டளையிட்டால் வலைப்பூ அரங்கத்தின் பொருளடக்கம் போன்ற பக்கத்தில் இரண்டுவரிகளில் அச்செய்தி தெரிய ஆரம்பிக்கும். அதன்பின் மேலும் என்ற தொடர்பை அழுத்தினால் வலைப்பூவின் பக்கத்திற்கே சென்று சேரலாம்.

இவ்வசதியை வழங்குவதில் தமிழில் குறிக்கத்தக்கவை இரண்டு. ஒன்று தேன்வகூடு, மற்றொன்று தமிழ்மணம் இவற்றில் தமிழ்மணம் தனக்குத் தரப்பெற்ற வலைப்பூ வலையேற்றச் செய்திகளை வகைமை செய்து பூங்கா என்ற வலைப்பூ அரங்க இதழாக மாதம் ஒருமுறை வெளியிட்டு வருகிறது. இது மீள்வாசிப்பக்கு மேலும் உதவகிறது. இவை ஒரு வரையறை வைத்துள்ளன. கவர்ச்சி, பாலியல் செய்திகள் படங்கள் ஆகியன இடம் பெறும் தளங்களைத் தவிர்த்தலை முக்கியமாகக் கொண்டுள்ளன. இது ஒரு இன்றியமையாத நல்ல செய்தி

வலைப்பூ இலக்கியம்
எல்லா வலைப்பூக்களும் இலக்கியச் செய்திகளைக் கொண்டிருப்பதில்லை. வாழ்க்கை, அனுபவம், கவிதை, கதை, கட்டுரை, ஆராய்ச்சிக் கட்டுரை, கடிதம் இவை போன்ற வடிவங்களில் இலக்கியம் வலைப்பூக்களில் பரவிக்கிடக்கின்றது. தமிழ்மணம் வலைப்பூஅரங்கம் வலையேற்றச் செய்திகளை இலக்கியம், சிறுகதை, கவிதை, நூல்நயம் என்ற பலபிரிவுகளில் செய்திகளைத் தொகுக்கிறது. இதனை வகைப்படுத்தும் முறை ஏற்பாட்டாளரைச் சார்ந்தது என்றாலும் அதனைச் செய்ய அவர் மறந்துவிட்டால் படிப்பவர் அதனை வகைப்படுத்த இயலும்.

வலைப்பூ இலக்கியங்களுக்கு என்று தனித்த நடை கிடையாது. தணிக்கை கிடையாது. அவரவர் போக்கில் அவரவர் எழுதலாம். எழுதப்படும் செய்திகளைப் பின்னூட்டத்திற்கு அளிக்கும்போது மட்டுமே அச்செய்திகளின் உண்மை பொய்மை தெரியவரும். அப்படி உண்மைக்கு மாறான செய்திகள் வழங்கப் பெற்றிருந்தாலும் அது குறித்து மன்னிப்ப வேண்ட அவசியமில்லை. கட்டற்ற இலக்கிய வகையாக இது விளங்குகிறது.

அதே நேரத்தில் இதன் வசாகர்கள் சற்று வித்தியாசமானவர்கள். ஓரளவு தமிழறிவு, அதைவிட அதிக அளவு கணினி அறிவு என்ற நிலையில்தான் பல வாசகர்கள் அமைந்துள்ளனர். வலைப்பூ ஏற்பாட்டாளர்களும் அமைந்துள்ளனர். இவர்களில் தேர்ந்த இலக்கிய விமர்சகர்களும் இல்லாமல் இல்லை. அவர்கள் அவ்வப்போது இதன் நடை குறித்துச் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். இருப்பினும் வலைப்பூ இலக்கியம் எவ்விதக் கட்டுப்பாடும் அற்ற இலக்கியவகையாகும். தமிழறிவு மிகுந்தவர்கள் இதனுள் அதிகம் இடம் பெறல் வேண்டும். அதன் காரணமாக இவ்வகை மேலும் உயர்வு பெறும்.
திலகபாமா முதல் மாலன் வரை பெரும்பான்மை எழுத்தாளர்கள் இவ்வலைப்பூ வசதியை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இருப்பினும் வலைப்பூ அரங்கங்கள் இலக்கியத்திற்கென தனியே வரவேண்டும். மேலும் ஆய்வக் கட்டுரைகளின் அரங்கம் என்பதாக பதியநிலையில் மற்றொரு அரங்கமும் துவக்கப் பெறலாம். இதற்குக் கணினி அறிவு சார்ந்தவரகள் உதவலாம்.

மேலும் இவ்வலைப்பூ இலக்கியங்கள் பெரும் மீள்பிரதி செய்யப் பெறுவனவாகவே உள்ளன. இணைய இதழ்கள் அல்லது வெகுஜன இதழ்களில் வெளியான படைப்புகள் பல மீள்வாசிப்பக்கு இங்கு வருகின்றன. அப்படி வருகின்ற நிலையில் அதன் வெளிவந்த செய்திகளைத் தருவது தேவையானதாகும்.

வலைப்பூ இலக்கியம் எல்லா இலக்கிய வகை போன்று அமைந்திருந்தாலும் இது உடனுக்கு உடன் பலரால் பார்வையிடப் பெற்று அவர்களின் மௌனத்தின் மீதோ அல்லது விமர்சனத்தின்மீதோ பின்னூட்டங்களைப் பெறுகிறது என்பதுதான் இதன் வலிமை. இப்பின்னூட்டங்கள் உண்மையான பெயரில் இடம் பெறலாம். அல்லது போலி மறைபெயரில் பின்னூட்டத்தைத் தரலாம். இதனை ஏற்பதோ மறுப்பதோ ஏற்பட்டாளரின் கடமையாகும்.

மேலும் பெண்களுக்கு உரிய இடமும் வலைப்பூவில் உண்டு. தோழி .காம் என்ற இதழ் பெண்களுக்கான தனித்த வலைப்பூக்களை வழங்கிவருகிறது. இவைதவிர இலக்கிய வலைப்பூக்கள் பல உள்ளன.

இவற்றை இணைத்துப் பார்க்கும்போது வலைப்பூ இலக்கியம் என்பது தற்போது வளர்ந்து வருகிறது என்பது தெரியவருகிறது. மேலும் இதற்கான விடுதலை மற்ற ஊடகங்களில் இருந்து மாறுபட்டது.

இவ்வாறு தனித்த நிலையில் வலைப்பூவக்கென எழுதப்படாமல் இணைய இதழ் போன்ற எதற்கோ எழுதியவை இங்கு ஒருங்கிணைக்கப் படுகின்றன என்பது இதன் தரத்தைச் சற்றுக் குறைக்கிறது.

இலக்கியம், ஆய்வக்கட்டுரை அடங்கிய தனித்தனி வலைப்பூ அரங்கங்கள் தோன்றிடின் சிறப்பாய் இருக்கும்.

இவ்வழிகாட்டுதல்கள் எதிர்காலக் கணினித் தமிழ் உலகத்தின் வளமை கருதி இங்குப் பகிர்ந்து கொள்ளப் பெறுகின்றன.


முனைவர் மு. பழனியப்பன்,தமிழ் விரிவரையாளர்,
மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்