சின்ன வீடு

This entry is part [part not set] of 27 in the series 20050930_Issue

சுப்ரபாரதிமணியன்


====

கோடை காலத்தில் நமது பயணங்கள் தறுமாறாகத்தான் அமைந்து விடுகின்றன். நகர நெரிசல், பெட்ரோல் புகை மூட்டம் இவற்றிலிருந்துதப்பிப்பதற்காக் கோடை வாசஸ்தலங்களை நோக்கி பயணிப்பதும் சாதரணமாகி விட்டது. வார விடுமுறையை வீட்டை விட்டு வெளியில்சென்று கழிப்பது என்ற மேற்கத்திய வாழ்க்கைமுறையின் ஒரு அம்சம் நம்க்குள் விடுமுறை தினங்களில் புனித ஸ்தலங்கள், கெடா வெட்டுகள் என்று கழிகின்றன. இந்த பயண அலைச்சலின் மையமாக இருப்பது நகர நெரிசலைத்தவிர்ப்பது, இய்ற்கையை அண்டிப் போவது என்றாகிறது.

அறிவியல் தந்த வசதிகளை தவிர்த்து விட்டு இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்கு ஏங்குவதும் அதனோடு இயைந்து வாழப்ப்ழகுவதும்அடி ஆசை என்றாகி விட்டது. அதை பிரதிபலிக்கிற பிலிப்பைன்ஸ் , சப்பான் இணை தயாரிப்பான் படம் சின்ன வீடு .இயற்கை வேளாண்மைக்கு சப்பான் போன்ற நாடுகள் திரும்பிக்கொண்டிருக்கிற முயற்சிகளில் பூக்கோகாவின் ஒற்றை வைக்கோல் புரட்சி போன்ற நூல்களின் வழிகாட்டுதல்கள் முக்கியமாக இருக்கின்றன.

ஆதிவாசி பழங்குடி குடும்பங்களில் இருந்து படித்து நகர வாழ்க்கையைப் பார்த்தவர்களுக்கு ஒரு நிலையில் காடும், மரங்களும் நிதானமும் மீறி வேறு வாழ்க்கை தேவைப்படுகிறது. அந்த வகையான ஆதிவாசிகளின் குடும்பத்தலைவன் வெளிநாடு போகிற ஆசையில் அலைகிறான்.நகர விடுதிகளில் சாதாரண வேலை செய்ய வேண்டியக் கட்டாயம். அதன் மூலம் வெளி நாட்டு வேலைகளுக்கு பணம் சேர்ப்பது, விடுதிகளின் தாதா கும்பல்களின் ஆக்கிரமிப்பு, வெளிநாட்டிற்குக் கூட்டிச் செல்வதாகப் பணம் பிடுங்குபவன்,வேறு நகரத்தில் விட்டு விட்டுச் செல்வதும் சதாரணமாகிறது.அவனின் மனைவி நகரத்தில் சாதாரண வேலை செய்து சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. கணவனின் வெளிநாட்டு சம்பாத்தியக் கனவில் அவளுக்குப் பங்குண்டு.

ஆனால் அவர்களின் மூன்றுக் குழந்தைகளும் மலைப்பிரதேசம் ஒன்றில் முதிய உறவினர் வீட்டில் இருக்கிறார்கள். பெற்றோரை எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கிறார்கள். அந்த மலைப்பிரதேசம் மின்சாரமோ, தேவாலயமோ, பாதை வசதிகளோ இல்லாதது. இயற்கை உரங்கள் பயிர் வளர்க்கதபோதுமானதாக இருக்கிறது. காய்கறிகளும், கனிகளும், கீரைகளும் சதாரண அரிசி போன்ற பொருட்கள் விளைகிற இடமாகவும் இருக்கிறது.

அந்த வாழ்க்கை நகர வாழ்க்கையின் சிக்கல்களிலிருந்து விடுபட்டு வந்து வாழும் சிலருக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒட்டு விதைகள் பற்றிபிரசாரம் செய்கிறவர்களை மலைப்பிரதேச மக்கள் நிராகரிக்கிறார்கள். மினி செனரெட்டர் போன்றவற்றுடன் வந்து மின்சாரத்தின் பயன் பற்றியும், தொலைக்காட்சி, மிக்ஸி உட்பட் மின்சாதனப் பொருட்களுடனும் வந்து அதன் உபயோகம் பற்றி உபதேசிப்பவன் தேவையில்லாததவனகிறான்.மலரும் பூக்களும், தூரத்து காட்சிகளும், சலசலக்கும் நீரோடைகளும், உணவிற்கான தங்கள் முயற்சிகளும் அங்கு வாழ்பவர்களுக்கு இயல்பாகவேப்படுகிறது

மூன்றுக்குழந்தைகளும் தங்கள் முயற்சிகளை முதியவர்களோடு தினசரி வேலைகளில் உதவுவது மட்டுமல்லது, கீழ்ப்பகுதிகளுக்குச் சென்று சிறு சிறு பொருட்களை விற்பது, தேவாலயங்களில் பூசை பொருட்களை விற்பது என்றாகிறது. பெற்றோர்களின் வீடு திரும்பலுக்காக ஏங்குகிறார்கள்.நகரத்தில் வசிக்கும் பெற்றோர் மலைப்பிரதேசத்திற்கு வந்தாலும் மீண்டும் நகரக்கனவுகளில் இருக்கிறார்கள். தனிமையை இரண்டாம் பட்சமாக்கி கணவன் இம்முறையாவது வெளிநாடுசெல்லும் கனவை நிறைவேற்றிக் கொள்வது என்று கணவனுக்கும் அவரவர் பாதைகள் நீள்கின்றன். குழந்தைகள் முதியவர்களோடு மலைப்பிரதேச வாழ்க்கைகு தங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள். .

நகர வாழ்க்கையின் குரூரங்களும், மலைப்பிரதேச இயற்கையோடு இணைந்த வாழ்க்கையும் மாறி மாறி பிம்பங்களாகின்றன்.

இயற்கையோடு வாழ்தல் என்பது பற்றினத் தீர்மானங்களாய் இந்த பிம்பங்கள் அழுத்தமாகப் பதிகின்றன. படம் இந்த விடங்களை சொல்லும் நிதானமும், மிகையற்ற் சாதாரண் பிரேம்களும் இப்படத்திற்கு இன்னும் வலு சேர்கின்றன். இயற்கைக்கு கடன் பட்டிருக்கிறவர்கள் மற்றும் நகர வாழ்க்கை, வெளிநாட்டு வேலை சொகுசு என்று பொருளாதர்ரச் சூழலுக்குக் கடன்பட்டிருப்பதை சுட்டுகிறது இப்பட.ம் .

அபோங்க் ( சின்னவீடு) ஆங்கிலம் மற்றும் பிலிப்பைன்சின் பிற மொழிகளில் தயாரிக்க்பட்டிருக்கிறது.

சுப்ரபாரதிமணியன்

—-

srimukhi@sancharnet.in

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்