கார வகை சிற்றுண்டி ‘துக்கடா ‘

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

திருமதி. கற்பகம் சோமசுந்தரம்


செய்ய தேவையான பொருட்கள்:

1. கோதுமை மாவு : 2 கப்,

2. ஜவ்வரிசி மாவு : 1/2கப்,

3. இஞ்சி : சிறிதளவு

4. மிளகாய் தூள் : 2.தேக்கரண்டி

5. சமையல் எண்ணை : பொரிக்கதக்க அளவு

செய்முறை:

முதலில் கோதுமை மாவு, ஜவ்வரிசி மாவு இரண்டையும் கலந்து, அதனுடன் தேவைக்கேற்ற உப்பு, அரைத்த இஞ்சிவிழுது,மிளகாய்தூள் சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ளவும்.

பின் அதை சப்பாத்தி கல்லில் சப்பாத்தி தேய்ப்பது போல்மெல்லியதாகவுமில்லாமல்.தடியாகவும் இல்லாமல்,மிதமாக தேய்க்கவும்.

பின்னர் தேய்த்தமாவை சிறிய துண்டுகளாக வெட்டவும். அடுப்பில் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணை விட்டு, எண்ணை காய்ந்த பின், வெட்டிய துண்டுகளை அதில் போட்டு பொறித்து எடுக்கவும்.

சுவையான துக்கடா தயார்.

***

skarpag@yahoo.com

Series Navigation

கற்பகம் சோமசுந்தரம்.

கற்பகம் சோமசுந்தரம்.