இடியாப்பம்

This entry is part [part not set] of 26 in the series 20020421_Issue


தேவையான பொருட்கள்

மாதக்கணக்கில் வைத்து உபயோகப்படுத்த தேவையான அளவு புழுங்கலரிசி

செய்முறை

கொடைக்காலத்தில் செய்யுங்கள்

புழுங்கலரிசியை கழுவி தண்ணீர் வடிந்ததும், இடித்து மிக மிருதுவாக சலித்துக்கொள்ளவும்

இடித்த மாவை வெய்யலில் ஒரு நாள் காயவைக்கவும்

நிழலில் இரண்டு நாள் காய வைக்கவும்

மறுபடி சலிக்கவும்.

இதனை ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவும்

**

தேவையான போது, இதில் தேவையான அளவு மாவு எடுத்து தேவையான அளவு உப்புடன் வெந்நீரில் பிசைந்து கொள்ளவும்

இடியாப்ப கட்டையில் போட்டு இட்டிலித்தட்டில் பிழிந்து இட்டலி போல அவித்து எடுக்கவும்

அவித்து எடுத்த இடியாப்பத்தை நன்றாக உதிர்த்துக்கொண்டு, தேங்காய் துருவி நெய் சர்க்கரை கலந்து சாப்பிடலாம்

அல்லது

பொடியாக நறுக்கிய வெங்காயம், கடுகு உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய் ஆகியவற்றைத் தாளித்து மோரில்கலந்து உதிர்த்த இடியாப்பத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.

அல்லது குருமாவுடனும் சாப்பிடலாம்.

Series Navigation