இந்த வார அறிவியல் செய்திகள்

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue


பல இணையப்பக்கங்களிலிருந்து தொகுக்கப்பட்ட அறிவியல் செய்திகள்

***

சிறுத்தையை குலோன் செய்ய இந்திய ஆராய்ச்சியாளர்கள் முயற்சி

ஹைதராபாத்தில் இருக்கும் செண்டர் ஃபார் செல்லுலார் மாலுக்குயுலர் பயலாஜி நிறுவனம் ஈரானில் இருக்கும் இரண்டு சிறுத்தைகளின் உடலில் இருக்கும் செல்களை கேட்டிருக்கிறது. இந்த செல்களின் மூலம் குலோனிங் செய்து இயற்கையிலிருந்து அழிந்து போய்விட்ட இந்திய சிறுத்தைகளை மறுபடி உயிர்ப்பிக்க முனைகிறது இந்த நிறுவனம்.

ஈரானிய குடியரசுத்தலைவர் முகம்மது கடாமி இந்தியா வந்திருந்தபோது இந்த கோரிக்கை அவரிடம் வைக்கப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டதால் இந்திய சிறுத்தை இயற்கையிலிருந்து மறைந்துவிட்டது. ஆனால் இந்த இந்தியவகை சிறுத்தைகள் ஓரிரண்டு இன்னும் ஈரானின் சிலபகுதிகளில் காணக்கிடைக்கின்றன.

***

வானொலி அலைகள் (ரேடியோ அலைகள்) மூலம் கண் சிகித்சை

ஐந்து நிமிடமே எடுத்துக்கொள்ளும் எளிய சிகித்சை மூலம் கண் பார்வையை சரி செய்யும் ஒரு முறை இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது.

முதலில் கண் பாப்பாவை மரத்துப்போகச்செய்யும் மருந்து இடப்படுகிறது. அடுத்தது மயிரிழை போன்ற ஒரு ஊசிவழியாக மிகவும் குவிக்கப்பட்ட ரேடியோ அலைகள் கண்ணில் இருக்கு கோர்னியாவைச் சுற்றி 32 இடங்களில் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் வெளிப்படும் வெப்பம் கண்ணில் இருக்கும் கோலோஜனை மிகசிறிய அளவு சுருக்குகிறது. இது கண்ணில் இருக்கும் லென்ஸை அமுக்கி அதன் பார்வையைச் சரி செய்கிறது. இது தூரப்பார்வையை வெகு எளிதில் சரி செய்ய உதவுகிறது.

இது எளிய முறையாக இருப்பதால், இங்கிலாந்தில் இதற்கு ஆதரவு பெருகி வருவதாக பிபிஸி தெரிவிக்கிறது

***

கடந்த இருபது ஆண்டுகளாக நடந்த போரினால் ஆஃப்கானிஸ்தானத்தின் சுற்றுச்சூழல் பேரழிவு நடந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கிறது

இந்த போரின் விளைவால் காபூலுக்கு வரும் தண்ணீரில் பாதி கெட்டுப்போன தண்ணீர் என்று கூறுகிறது. குழந்தைகள் 12 மணி நேரம் வேலை செய்யவைக்கப்படுகிறார்கள் என்றும், அவர்கள் ஆபத்தான இயந்திரங்கள் மேலே தூங்குகிறார்கள் என்றும் கூறுகிறது.

கடந்த 25 வருடங்களில் ஆஃப்கானிஸ்தானத்தின் முக்கிய காடுகளில் பாதி அழிக்கப்பட்டுவிட்டன என்றும் இது கூறுகிறது.

நேரடியாக போரின் காரணத்தால், நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்றுவிட்டது என்றும், சதுப்பு நிலங்கள் காய்ந்து போய்விட்டன என்றும், காடுகள் அழிந்துவிட்டன என்றும், காட்டு விலங்குகள் காணாமல் போய்விட்டன என்றும் இது கூறுகிறது.

ஆஸ்பத்திரி கழிவுப்பொருட்கள் சரியான முறையில் அழிக்கப்படாமல் அங்கங்கு வீசி எறியப்பட்டதால், பல இடங்களும், ஏரிகளும், தெருக்களும் சுகாதாரமின்றி ஆகிவிட்டன என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. நகர்ப்புற குடிநீர் தளங்களில் மருத்துவ சிரிஞ்சுகளும், மனித உடல் பாகங்களும், பாக்டாரியா அசுத்தங்களும், சாக்கடைநீரும் கலப்பதை இது தெரிவித்திருக்கிறது.

ஆஃப்கானிஸ்தானத்துக்கே உரிய சில விலங்குகள் முழுவதுமாக காணாமல் போய்விட்டன என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது

***

Series Navigation

செய்தி

செய்தி