உயிர்பெருக்கில் குளிர்காய்தலை குறித்து
நட்சத்திரவாசி
விரைக்கும் உச்சத்தின் அடிவானத்தில்
பதாகையை நீட்டுகிறதென் உயிர்பெருக்கு
அதன் நிழலில் நீர் பருகிடவும்
ஓய்வெடுக்கவும் கனவு சுந்தரிகள்
காத்திருக்கின்றனர்
மணி மண்டபத்தில் அரசாளும்
கட்டளைகளுக்கு தம்மையே அர்பணித்த
விழிகளின் திரையில்
போதை ஊற்றுக்கள் பீறிட்டெழுகின்றன
உடல் வாதைகளை கழற்றி வைத்து
சொப்ன ரூபங்களில் மிதந்தலைகிறார்கள்
அரளிப் பூக்களைப் போல
எரியும் நடு நிசியிலோ மெல்ல
தீமூட்டி அதன் தழல்களில்
உலர வைக்கின்றனர் நெடுநாள் ஆசைகளை
குளிர்காய்ந்து பெய்மறந்து உலாவுகையில்
எனது காமம் உலகங்களுக்கு அப்பால்
பயணிக்க எத்தனிக்கின்றன
யாகம் செய்தோ,மோன தவம் செய்தோ
மீட்டெடுக்கின்றனர் எனதுடலை
அதன் யவ்வன திரட்சி மாறாமலே
நறுமணங்களையும்,தூபங்களையும்
சுழலவிட மெல்ல அசைந்து
உச்சத்தையெட்டுகிறது
மீண்டும் அவர்கள் வருகிறார்கள்
நிர்வாணத்தை நனைத்து உயர
பருந்தென பறந்து போகையில்
கூழாங்கற்களென உருண்டு போகிறது
என் நெடுநாள் குறிகள் யாவும்
mujeeb.h
- ஆ·பிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! (Fossil Reactor & Geo-Reactor)(கட
- ஆயுத மனிதன் (The Man of Destiny ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -17
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் = கவிதை -28 பாகம் -3
- அஜ்னபி
- உயிர்பெருக்கில் குளிர்காய்தலை குறித்து
- அம்மா
- உருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்
- காதலி எனும் கிறுக்கல்கள்!
- இந்திய வரலாற்றுப்போக்கை மாற்றிய 27 வருட மராத்தா முகலாயர் போர் – முடிவுரை
- திராவிட அரசு திராவிடச் சான்றோர் வேண்டுகோளைச் செவிமடுக்குமா?
- காற்றாடிகளுடன் உறவாடிய நாட்கள்
- முள்பாதை 29
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று = கவிதை -9
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று
- வேத வனம் விருட்சம் 85
- ஆபிதீனின் கதை, “அங்கண ஒண்ணு, இங்கண ஒண்ணு”
- பட்சியும் கனகாம்பரமும்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழா 2010
- என். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து -சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்பு
- பெத்தமனம் பித்து
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -14
- பத்துப்பாட்டில் தொழிலும், தொழிலாளர்களும்
- கொங்குநாட்டுத் தமிழ் குழந்தை (புலவர் குழுந்தை)
- பொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் – ஸ்ரீ ரங்கம் வி. மோஹனரங்கன்
- குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?
- சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு