செய் நன்றி!

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

இளவட்டம்


பெருத்த இரையை
தட்டு தடுமாறி சுமந்து
வந்த எறும்பு ஒன்று
நிலைத்தடுமாறி
நீரில் விழ அதை
உற்று நோக்கிக்
கொண்டிருந்தவனின்
நினைவில்
செய் நன்றிக்காக
புறா இலை பறித்து
போட எறும்பு அதன்
மீதேறி கரை சேர்ந்த
கதை நினைவில் மோதி
மீளத் துவங்கியிருந்த
நொடியில்
அந்த எறும்பு
இறந்து விட்டிருக்கக்கூடும்!

– .

Series Navigation

இளவட்டம்

இளவட்டம்