நட்சத்ரவாசி
பனிப்பெய்யும் இவ்விரவில் தீபச்சுடர்களை ஏற்றி
நான் காத்திருக்கிறேன்
பரிசுத்த நறுமணங்களடங்கிய தூபங்களை
காற்றில் சுழலவிடுகிறேன்
சுகந்த மலர்களைத் தூவி ஆராதனைச் செய்து
தனித்திருந்து தியானிக்கிறேன்
குளிர்காலங்களின் இராக்காலங்களில்
அவர்களின் வருகை நிகழக்கூடும்
ஏதொரு முன்னறிவிப்பின்றி
நான் போதையற்று தளும்பும்
திராட்சை ரசத்தை மதுக்கிண்ணங்களிலூற்றி
அவர்களுக்கு விருந்துண்ணக்கொடுப்பேன்
தட்டுகளிலும் கூடைகளிலும் அடுக்கிவைக்கப்பட்ட
காய்கனிகளை உளமார கொடுத்து மகிழ்வேன்
புசிக்கும் அப்பங்களையும்,மாவினாலான
பணியாரங்களையும் நிறைய அளிப்பேன்
பின்னர் கடுங்கதைகள் பேசி
நேரத்தை கழிப்போம்
நெடுந்துயில் வேண்டி படுக்கைகளை
தாயார் செய்துள்ளேன்
அவர்கள் தேவதூதர்கள்
பரிசுத்தமானவர்கள்
அன்னை மரியாவிற்கிரங்கி தேவப்பிரச்சன்னம்
போதித்தவர்கள்
ஓராயிரம் இறக்க்கைகள் அவர்கட்கு
இருக்கக்கூடும்
பிரகாசமான கண்கள்
ஒளிரக்கூடும்
கைகளிலே சின்னஞ்சிறு செங்கோல்கள்
இருக்கக்கூடும்
நான் காத்திருக்கிறேன் அவர்களின் வருகைக்காய்
எவ்வொரு நற்செய்தியை அறியவோ
தேவநிச்சயத்தை தெரியவோ
மாத்திரமின்றி பரிசுத்த இரவில்
தேவனுடனுன் கலந்து போகுதல் பற்றி
வாக்களிக்கப்பட்ட நன்மையை தேவன்
கொண்டுவருவதாய் சொன்ன கனவினை நம்பி
தேவன் வருகை சாத்தியமே
ஆயினும் பரிசுத்த இரவை குறித்து
தேவதூதர்களுக்கு சேதி சொல்லி அனுப்புவான்
இந்த இரவுகளில் நான் உண்பதுமில்லை
நித்திரை செய்வதுமில்லை
விடியும் வரை காத்திருக்கிறேன்
தேவதூதர்களின் வருகைக்காய்
அதன் பின்னர் வாக்களிக்கப்பட்ட நன்மை
அடைந்தே தீரும்
அந்த பரிசுத்த இரவில்
நான் எனை இழக்கும் அவ்வொரு பொழுதுக்காய்
ஆகவே நான் காத்திருக்கிறேன்
தினமும் விருந்தினை ஏற்பாடு செய்து
இராக்காலங்களில் அவர்களின் வருக்கைக்காய்
காத்திருக்கிறேன்.
mujeebu2000@yahoo.co.in
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! பூர்வீக விண்மீன்கள், அபூர்வக் கரு விண்மீன்கள்(Earlier Stars & Dark Stars)!(கட்டுரை:66
- நிரப்புதல்…
- இராக்காலங்களில் அவர்களின் வருகைக்காய் காத்திருக்கலாம்
- அமீரக தமிழ் மன்றம் இன்பச்சுற்றுலா
- ஜனவரி 2010 முதல் மும்மாத இதழாக வருகிறது நேர்காணல்
- சந்திரவதனாவின்-‘மனஓசை’
- வயநாட்டு சிங்கத்தின் தணியாத சுதந்திர தாகம்
- நட.சிவகுமாரின் எதிர் கவிதையும் எதிர் அழகியலும்
- அழியாப் புகழ் பெறும் இடங்கள்
- ‘யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை’ – விமர்சனக் கட்டுரைகள்
- கவிதைகள் எழுதவில்லையெனில் ஒருவேளை தற்கொலைகூட செய்திருப்பேன் – கவிஞர் அய்யப்பமாதவனுடன் ஒரு கவிதை சந்திப்பு
- வேத வனம் விருட்சம் -61
- காத்திருந்தேன்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << புன்னகையும், கண்ணீரும் >> கவிதை -20
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -1 தடம் காண முடியாச் சுவடு
- புத்திசாலி
- பாரதியாரிடம் ஒரு வேண்டுகோள்
- கனவுகளின் நீட்சி
- பனிவிழும் அதிகாலையொன்றில்
- உதிரும் வண்ணம்
- புனிதமோசடி — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் 1
- தொலைதூர வெளிச்சங்கள்
- விளம்பரம் தரும் வாழ்வு
- தத்ரூப வியாபாரிகள்
- ‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-2
- வில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம்
- முள்பாதை 7 (தெலுங்கு தொடர்கதை)
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -9
- முடிவுறாத பயணம்