மாதங்கி
முன்னொரு நாளில்
தோன்றியபோதெல்லாம்
இறக்கைகளை விரித்துக்கொண்டு
பறந்து கொண்டிருந்த மலைகளைக்
கெஞ்சிக் கேட்டேன்
பறப்பதை நிறுத்திவிடுங்களேன்
நிமித்த காரணம் சொல்லலாமே
அவை கேட்டன
எங்கள் குழந்தைகள்
தூக்கத்தில் எழுந்து அலறுகிறார்கள்
எங்களுக்கே சோறு பலசமயங்களில் இறங்குவதில்லை
சில பறவைகள் உங்களைக் கண்டு பறத்தலையே
மறக்கத் துவங்கிவிட்டன
எங்கள் குழந்தைகள் வெட்டவெளிகளில்
விளையாட மறுக்கின்றனர்
பயிர்த்தொழில் பாதிப்படைகிறது
எங்கள் நிம்மதி
உங்களால் போய்க்கொண்டிருக்கிறது
தங்களால் யாரும் உயிரிழக்காத போதும்
எங்களுக்காக
தாமே தம் இறக்கைகளை இற்றுப்போக
செய்து
பறத்தலை நிறுத்திவிட்டன மலைகள்
இன்று யுத்த பேரிகைகளும்
போர்ச்சாவுகளும்
உறக்கத்தை கவ்வும் இவ்வேளையில்
மலைகள் சிரிக்குமோ அழுமோ
madhunaga@yahoo.com.sg
வடக்குவாசல் டிசம்பர் 2008
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10
- சுவர்க்கம்
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றல் படைத்த பூதக் காந்த விண்மீன் புரியும் பாதிப்புகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -4
- “மாற்றம்”
- தமிழ் சேவைக்கு இயல் விருது.
- எழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின் “BLEEDING HEARTS” நூல்
- சங்கச் சுரங்கம் – 16: நெடுநல்வாடை
- விமர்சனக் கடிதம் – 1 ( திரு.பாரதிமணியின் ‘பல நேரங்களில் பலமனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து)
- நிழலாடும் கூத்துகள் : களந்தை பீர்முகம்மது எழுதிய ‘பிறைக்கூத்து’ நூலுக்கு கவிஞர் யுகபாரதியின் முன்னீடு
- மலையாள இலக்கியத்தின் மாபெரும் ஆளுமை: “வைக்கம் முகம்மது பஷீர் -காலம் முழுதும் கலை”
- வயதாகியும் பொடியன்கள்
- மலைகளின் பறத்தல்
- மகாகவியின் ஆறுகாவியங்கள் வெளியீடு
- பேராசிரியர் ஏ.எஸ். முகம்மது ர·பி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
- நாகூர் ரூமியின் இலக்கிய அறிவு
- பேராசிரியர் நாகூர் ரூமிக்கு பதில்கள்
- வைகைச் செல்வியின் ஆவணப்படம் வெளியீட்டுப் படங்கள்
- விருட்ச துரோகம்
- என்றாலும்…
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஐந்தாவது அத்தியாயம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -38 << ஆயிரம் விழிகள் எனக்கு >>
- வேத வனம் விருட்சம் 36
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 3
- ஸெங் ஹெ-யின் பயணங்கள்
- மரமணமில்லாத மனிதர் : பாரதியின் கடிதங்கள்-(தொகுப்பு: ரா.அ.பத்மநாபன்)
- கதைசொல்லி சாதத் ஹசன் மண்டோவின் மறுபக்கம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தேழு
- ஞாபக வெளி
- பட்டறிவு
- திமிர் பிடிச்சவ