வானம்

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

“மீன்கொடி” கோவிந்தராசு



வாயுக்களால்
வடிமைக்கப்பட்ட

கூரை!

புவிஈர்ப்பு விசைக்கெதிராய்
புறப்பட்ட தாவரங்கள்
தொட்டு விடத் துடிக்கும்
தொட முடியாத் திரை!

நிலத்தைப் பசுமையாக்கும்
நெடுந்தூரத்து
நீலம்!

ஒட்டுத்துணிகளால் தைக்கப்பட்ட
ஊதா நிற
ஓட்டைக் குடை!

ஞாயிறும், திங்களும்
நட்சத்திரங்களும்
நாள்தோறும் வந்து
நடித்து விட்டுச் செல்லும்
நாடக மேடை!

உலகை உழவை
உயிர்ப்பிக்கும்
கடவுள்!


meengovind@yahoo.com

Series Navigation

“மீன்கொடி” கோவிந்தராசு

“மீன்கொடி” கோவிந்தராசு