தாகூரின் கீதங்கள் – 10 என்னுடன் இருக்கிறாய் எப்போதும் !

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


கோடான கோடி ஆண்டுகளுக்கு
முன்பு புவிக்
கோளில் முதலில் எழுந்த
சூரிய உதயத்திலே
வீசிய வெண்கதிர்ப் பொறிகளில் எடுத்து
என் வாழ்வுக்குப்
பின்புலம் நீ ஆக்க வில்லையா ?
யார் அறிந்திடுவார்
நான் எவ்விதம்
அன்றைய காலைப் பொழுதில்
தோன்றினேன் என்று ?
மலர்ந்தும் மலராத
எந்த ஓர் வடிவத்தை எனக்களித்தாய்
என்று எட்டாமல் போகும்
என் அறிவுக்கு !
கால வரம்பில்லாத முதல்வனே !
நினைவைக் கடந்து
எனைப் புதுப்பித்து
வடிவமைத்து வருகிறாய்
யுக யுகமாய் !
என்னருகில் அமர்ந்து கொண்டு
என்னுடனே இருக்கிறாய்
எப்போதும் !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 1, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா