தமிழில்: ஜெயந்தி சங்கர்
டாங் முடியாட்சிக்கு முற்பட்ட கவிதைகள்
************************************************************
‘லியூ பாங்’கின் (247 – 195 கி.மு)
சண்டமாருதத்திற்கொரு ஒரு சிந்து
ஓ, சண்டமாருதம் எழுந்திட,
மேகங்கள் சூல்கொள்கின்றன.
என் பலம் நான்கு கடல்களையும் தாண்டிப் பரவிட,
இப்போது நான் என் கிராமத்திற்குத் திரும்பியிருக்கிறேன்.
எப்படி வீரர்களைப் பெறுவேன்
என் நாட்டின் நான்கு மூலைகளையும் காவல்காத்திட.
***
ஸியாங் யூ (232 – 202கி.மு)
காய்ஸியாவில் ஒரு பாடல்
ஒருகாலத்தில் எதிர்த்திட ஆளில்லாத பலத்துடன்
மலைகளைப் பறித்திடுவேன் நான்.
ஆனால், இப்போதோ காலத்தால் புறக்கணிக்கப்பட்டு,
என் குதிரை ஓடாதினி.
அது ஓடிட முடியாதபோது
நான் செய்யக் கூடியதுதான் என்ன?
ஓ, யூ, என் அன்பு யூ,
அடுத்து உனக்கு எப்படி நான் உதவிட?
*******************************************************************
டாங் முடியாட்சி காலக் கவிதைகள் (618-907கி.பி)
*******************************************************************
ச்சென் ஜீயாங் (661-702கி.பி)
யோவ்ஜோவ் கோபுரத்தை ஏறிடும் போது
எங்கே போனார்கள் பழைய ஞானிகள் எல்லோரும்?
எங்கே வரவிருக்கும் எதிர்காலத் தலைமுறையினர்?
அகண்ட பெரும் மேலுலகையும் பூமியையும் நினைத்திடு,
நான் சோகத்திற்குள் வீழ்கிறேன், கண்ணீர் ஓடையென கீழே வீழ்ந்திட.
***
பாய் ஜுயி (772-846கி.பி)
புற்கள்
புற்கள் நிலமெங்கும் பரவுகின்றன,
செழித்து வளர்ந்து வாடிடும் ஒவ்வொரு வருடமும்.
தீயினால் எரிந்து போய், ஆனால் அழிந்திடாமல்,
மீண்டும் முளைக்கின்றன, வசந்தத்தின் ஊதல் வீசிடும் போது.
***
sankari01sg@yahoo.com
அம்ருதா – ஆகஸ்ட் 2007
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 4
- காதல் நாற்பது – 35 காதல் என்பது மனக்குடைவு !
- பூம்பூம் காளை!!
- ஸூபி முஹம்மதிற்கு…..
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 20
- சீனக்கவிதைகள்
- எஸ்.ராமகிருஷ்ணனின் ‘இலைகளை வியக்கும் மரம்’
- கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஆவணப்படம் தொடக்கவிழா
- எனி இந்தியன் பதிப்பகம் நடத்தும் கருத்தரங்கு
- ஊர்விலக்கத்தினூடே தொடரும் பயணங்கள்
- குடியேற்றம் முத்தமிழ்ச்சுவைச்சுற்றம் பதினொன்றாம் ஆண்டு பைந்தமிழ்த்திருவிழா
- அரிமா விருதுகள் 2006
- பத்துப் பைசா பெறாத ஃபத்வாக்கள்
- ‘நாங்கோரி என்ற உறுப்பினர்’ கதையை பற்றி
- மும்பையனுக்கு மும்பாதேவி
- திரு அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்திநான்கு: அனிஸ்மானின் ஆலோசனை!
- மழை என்னும் மாபெரும் சக்தி – சரவணன் கவிதைத்தொகுப்பு
- பிழைதிருத்தம் 13 : வாய்பாடு – வாய்ப்பாடு
- ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)
- அறிவுநிதி கவிதைகள்
- உருக்கியில் (HIV) உருகும் சிறார்!!
- விமர்சனக்குருவிகள்
- ஒரு புயலும் சில பூக்களும்
- என் வெளி…..
- தஸ்லிமாவின் முன்னோடி : இஸ்மத் சுக்தாய் எதிர்கொண்ட ஆபாச எழுத்து வழக்கு
- ஹெச்.ஜி.ரசூல் மீதான ஊர்விலக்கமும் எழுத்துக்களின் உடனான உரையாடலும்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்)
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 24