இது கூட இயற்கை தானா?….

This entry is part [part not set] of 24 in the series 20070215_Issue

சக்தி சக்திதாசன்


கண்ணின் வழியே பாய்ந்த அம்பு
காளையின் நெஞ்சைத் துளைத்த பொழுது
காதல் என்னும் உணர்வு இதயத்தில்
கருவாய் புலர்ந்தது இயற்கை நிகழ்வே

நேசத்தின் நிழலில் இதயத்தைக் கிடத்தி
நாளைய வாழ்வின் கனவால் தாலாட்டி
இன்றைய பொழுதில் அமைதி அடையும்
இயல்பு அதுவும் இயற்கை நிகழ்வே

பெண்ணின் மென்மை வருடிய உணர்வு
போதை கொடுத்து உள்ளம் கிறங்க
பெற்ற இன்பம் நிலையானது என்ற
பேதையர் எண்ணமும் இயற்கை நிகழ்வே

இதயத்தில் இருந்த அன்பைக் கொட்டி
இருப்பதைத் துறந்து தஞ்சம் புகுந்திடும்
இளம் காதல் நெஞ்சங்கள்…. வஞ்சிப்பது….
இதையும் எப்படி இயற்கை நிகழ்வென்று ? …….


sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்