கீதாஞ்சலி (100) – காற்றில் அணையும் விளக்கு!

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா



துடுப்பைக் கைவிட்ட பின் நீ
எடுத்தோட்டும் தருணம்
தொடங்கி யதாய்த் தோன்றும் எனக்கு!
முடிய வேண்டிய பணிகள் யாவும்
உடனே நிறைவேறும்!
எதிர்த்துப் போராடுவது வீணே!
தோல்வியை மௌனமாய்
ஏற்றுக் கொண்டு,
துடுப்பி லிருந்து கரங்களை
விடுவித்துக் கொள்வாய்
என்னிதயமே!
முழு நிம்மதியில்
பிறந்த தளத்திலே வாழ்வது
பெரும் அதிர்ஷ்ட மெனக்
கருதிடுவாய்!
ஒவ்வொரு தரமும்
குப்பென வீசி அடிக்கும்,
மெல்லிய காற்றில் கூட
டுப்பென அணையும்,
எனது விளக்குகள் எல்லாம்!
மீண்டும் மீண்டும் அவற்றை ஏற்றிட
முனையும் போது,
மறந்துபோய் விடுகிறேன்
மற்ற வேலைகளை!
சற்று அறிவோடு
கவனமா யிம்முறைக்
காத்திருப்பேன் காரிருளில்,
தரைமேல் பாய் விரித்து!
உனக்கு விருப்பமான சமயத்தில்
ஓசையின்றி வந்திங்கு
அமர்ந்திடு
என் அதிபனே!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (November 21, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா