கற்பதை விட்டொழி

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

புதுவை ஞானம்


கற்பதை விட்டொழி -உந்தன்
தொல்லைகளுக்கு முடிவு கட்டு.

ஆம் என்பதற்கும்
இல்லை என்பதற்கும்
வேறுபாடு ஏதாவது இருக்கிறதா ?

நல்லது என்பதற்கும்
கெட்டது என்பதற்கும்
வேறுபாடு ஏதாவது இருக்கிறதா ?

மற்றவர்கள் அஞ்சுவதைக் கண்டு
நானும் அஞ்ச வேண்டுமா ?
இது என்ன முட்டள் தனம் ?

எருதைப் பலியிட்டு விருந்தைச் சுவைக்கின்றனர் சிலர்
பூங்காவுக்குச் செல்கின்றனர் வசந்தத்தில் சிலர்
சிகரங்களில் ஏறிச் சாதிக்கின்றனர் சிலர்
எங்கிருக்கிறேன் என்பதே புரியாமல்
தடுமாறுகிறேன் நான் மட்டும்.

இன்னும் சிரிக்கக் கற்றுக் கொள்ளாத
அப்போது தான் பிறந்த பச்சிளம் குழந்தை போல
எங்கும் போவதற்கின்றி தவித்துத்
தடுமாறுகிறேன் நான்.

தேவைக்கு மேலேயே இருக்கிறது மற்றவர்க்கு
எனக்கு என்று எதுவுமே இல்லை.
நான் ஒரு முட்டாள் ஆம், குழம்பிப் போனவன்.
தெளிவாகவும் பிரகாசமாகவும் இருக்கிறார்கள் மற்றவர்கள்
நான் மட்டும் தான் இருட்டில் தடுமாறுகிறேன்
கூர்மையாகவும் புத்தியாகவும் மற்றவர்கள்
நான் மட்டும் தான் தத்தளிக்கிறேன் கடலலை போல்
போக்கற்றும் ஓய்வற்றும்.

சுறுசுறுப்பாய் மற்றவர்கள்
நோக்கமற்றும் மன இறுக்கத்தோடும்
வித்தியாசமானவன் நான்
இயற்கை அன்னையால்
சீராட்டப் படுபவன்.
——————————————————————————

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்