இருத்தல்

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


வாலாட்டி வாலாட்டி
நீருள் இரத்தினங்களாக வெயில் சிதைய
மகிழ்ந்திருக்கும் சிறுமீன்கள்.
காற்றில் முளைத்து
தாழை மடலில் தரை இறங்கும் மீன்கொத்தி.
மீண்டும் அமர்ந்தேன்.

தென்னங் கீற்றுத் தோகைக்குள்
இசைத்த சிறு குருவி சிறகை விரித்தாச்சு.
இனி வானத்துச் சிப்பி வயிற்றுள்
மிழிருகின்ற சூரியனும் செரித்துவிடும்.
நீர்க் கரையில் பாம்புகள் கண்விழிக்கும்.

கை பற்றிக் கதைத்திடவும்
மறையும்வரை பின்பக்கம் பார்த்திடவும் தூண்டுகின்ற
முலை அரும்பும் பரட்டைத் தலைத் தேவதைகள்
தம் மனசில் வண்னக் கனவாய் குமிழி விடும்
ரீங்காரம் எல்லாம் காற்றில் உமிழ்ந்தபடி
ஆடுகளின் பின்னாடி போய்விட்டார்.

வணங்கா முடிப் பனைகளின் பின்
தூரத்தே
இடி முழங்கிப் பறக்கும் அசுரர்களின்
சிறகோசை கேட்கிறது.
விரைந்தபடி ‘அண்ணே கவனம் ‘ என்ற
துப்பாக்கிச் சிறுவர் சிலரும் மறைந்துவிட்டார்.

இன்னும் நுனி நாவில்
அனுதாப வர்த்தைகளை கோர்த்தபடி
இருளில் இருக்கின்றேன்
-1994
(பெருந்தொகை, சென்னை 2000)

V.I.S.Jayapalan (Poet)
Raadyr Veien 3B – leil. 36
0595 Oslo, NORWAY.
Tel/Fax: 00 47 22 162235
Sri Lanka: 00 94 777 560 759

Series Navigation

இருத்தல்

This entry is part [part not set] of 5 in the series 20000326_Issue

ரேகா ராகவன்


இருந்தால்…….

          மென் ரோஜா மொட்டொன்றில்
          பூவாய் அமர்ந்துக்
          கதிரவனைத் தன்னுள் பூட்டியிருக்கும்
          ஒரு பனித்துளியாய்……

          கோடைக்காலத் தாகத்தில்
          உதட்டின் மேல்
          லேசாய் வந்துவிழும்
          ஒரு மழைத்துளியாய்…..

                                     
………………………………………இருத்தல் வேண்டும்.

எண்ணங்கள் தேக்கி
எட்டி நடக்கையில்

தன் இருத்தலைத் தெரிவிக்கத்
தொலைவிருந்த நீர்வீழ்ச்சி
மயிலிறகாய் முகத்தில் தெறித்துது
ஒரு துளி நர்……

சிறகடிக்கும் கண் மூடித்
துடிக்கும் இதயம் அடக்கி
இத்துளியை ஸ்பரிசித்த ஒரு நொடியில்
அனைத்தும் அடைந்துவிட்ட
ஒரு பரிபூரணம்

இனி இருத்தலில்
தான் என்ன அவசியம் ?

ததும்பி வந்து
இமை உறுத்திப் பிரித்துத்
தன் இருப்பை உணர்த்தி
என் இருத்தலின் அவசியத்தை
உறுதிப்படுத்தியது
ஒரு துளிக் கண்ணீர்…….

Reka Raghavan
 

Series Navigation

ரேகா ராகவன்

ரேகா ராகவன்