வாய்திறந்தான்
நெப்போலியன்
—-
வாய்திறந்தான்
நல்ல பேச்சாளர்.
திண்ணைப்பேச்சு
திருமணப்பேச்சு
அரசியல்பேச்சு
ஆன்மீகப்பேச்சு
இலக்கியப்பேச்சு
இரங்கல்பேச்சு
என
பேச்சிற்கொரு
ரேட் வைத்திருப்பார்.
பட்டுஅங்கவஸ்திரம்
பைஜாமாகுர்தா
கோட்டுசூட்டு
வேட்டிசட்டை
என
விதவிதமாய்
உடையணிந்து மேடையில்
பட்டையக் கெளப்புவார்.
அன்பிற்குரிய பெரியோரே
வளர்த்து ஆளாக்கிய தாய்க்குலமே
என் இனிய தமிழ் மக்களே
உடன்பிறப்பே
அப்பனே முருகா வணக்கம்
சகோதர சகோதரிகளே
லேடாஸ் அண்ட் ஜென்டில்மேன்
என
கலப்படக்கலவையாய்
பேச்சைத் துவக்குவார்.
பருப்பு தலைப்பு என்றால்
செருப்பைப் பற்றி சிறப்பாய் கூறுவார்
பூசணிக்காயைப் பேச வந்தவர்
பால்கோவாவின் கதையளப்பார்.
அலைகடல் வெள்ளமென கூட்டம்
விரல்விட்டு எண்ணிவிடும் கூட்டம்
அடிக்க ஆசிட்டும் முட்டையும்
அள்ளி வந்த கூட்டம்
என
கூட்டம் பல கண்டவர்.
பேருந்து
புகைவண்டி
மிதிவண்டி
மாட்டுவண்டி
விமானம்
கருவாட்டு லாரி
கார் ஆட்டோ
என
பேச்சிற்காகவே
நாள் முழுவதும்
பயணிப்பவர்
நாளுக்கொரு ஊரும்
ஊருக்கொரு உணவுமென
இரவும் பகலும்
பேசியே கரைபவர்.
துண்டு
சால்வை
கிரீடம்
மலர்மாலை
முறுக்குமாலை
நோட்டுமாலை
கேடயம்
பொற்கிழி
பணமுடிப்பு
என
இதர மேடை வரும்படிகளும் நிறைய.
வாய்திறந்தான்
ஒருநாள்
மேடையிலேயே
இறந்துபோனார்
அன்று அவர்
பேச இருந்த தலைப்பு
‘ மெளனம் ‘
என் உயிர்த்தோழர்களே
என ஆரம்பித்தவுடனேயே
சரிந்து விழுந்தார்
இறக்கும் சமயத்திலாவது
உருப்படியான
ஒரு பேச்சைப் பேசிய
திருப்தி
அவர் முகத்தில் இருந்தது
வாய் மூடியபடி !
—- நெப்போலியன்
சிங்கப்பூர்
kavingarnepolian@yahoo.com.sg
- து ணை – குறுநாவல் -பகுதி 5
- விலங்கு நடத்தைகள்..
- சிந்திக்க ஒரு நொடி – எல்லோரும் இந்நாட்டு மன்னர் [ஒரு சினிமா நடிகருக்கும் அரசியல் கருத்து தொிவிக்க பிரஜா உாிமை உண்டு ]
- சிறகுகள் முளைத்து..
- கண்ணாடிக் கண்கள்
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி இரண்டு : வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்
- ஜப்பானிய பூகம்பம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே
- சிந்திக்க ஒரு நொடி : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…
- தமிழகத்தைக் காப்பாற்றிய மூன்று பேர்கள் – சோ, ஜெயகாந்தன், கண்ணதாசன்
- வாய்திறந்தான்
- ஒரு மரத்தின் இறப்பு!
- குமுதம் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன ?
- பருந்துகள்
- சிலுவையில் மலருமா ரோஜா ? மார்க்ரட் ஸ்டார்பர்ட்டுடன் சில கேள்வி பதில்கள்
- ஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும்
- கடலை வசக்குதல்
- வன்முறை
- பெரியபுராணம் – 31 -18. மானக்கஞ்சாற நாயனார் புராணம்
- பாவங்கள்(SINS) & பாடம் ஒன்னு ஒரு விலாபம் – இரு திரைப்படங்களும், தொடரும் சர்ச்சைகளும்
- ஓவியப் பக்கம் – பதினாறு – டிம் ஹாக்கின்ஸன் (Tim Hawkinson) – வாழ்வின் இசையை வடிக்கும் கலை
- ஹிப்பாங்… ஜிப்பாங்
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-1
- நேற்று வாழ்ந்தவரின் கனவு – பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
- இறைநேசர் இமாம் ஜாஃபர் சாதிக்(ரலி)அவர்கள்
- மூன்றாம் பக்கம் ( 3)
- நேர்காணல் : வசந்த்
- ‘சே ‘
- வெளி.காம் (vezhi.com) இலக்கிய இதழ் -அறிமுகம்
- ஸ்த்ரீ கானம்
- பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும்!கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும்!(Ice Age, Sea-Floor Rise & Fall) [3]
- அருண் வைத்தியநாதனின் குறும்படம் திரையிடல்
- ‘புனரபி ஜனனம் புனரபி மரணம் ‘ – சில மலின பிரச்சாரங்களுக்கும் தான்
- உலகத்தின் மிக உயரமான டென்னிஸ் கோர்ட்
- உலகத்தில் பார்க்கவேண்டிய இடங்கள்
- அறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)