கடலம்மா….

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

கோவின் – கோச்சா


கடலலைத் தாலாட்டில்
எம் சோகம் தீர்ந்ததுண்டு.

கட்டுமரமேயானாலும்
நீ காத்திடுவாய் என்றே
அகண்ட ஆழ்கடல் சென்று
வாழ்தலின் விடை கண்டோம்…

எமக்கு அனைத்துமாய்
இருந்த உன்னை,
அன்னையாய்
அது தாண்டி,

‘இறை ‘ என்றே கொண்டோம்..

தெய்வமே, கடலே…
ஏன் எம்மை

‘இரை ‘ என்று நினைத்தாய்….

உனை விட்டால்
உயிர் வாழ
யார் எமக்கு உதவுவார்…. ?
சந்தோஷம் முடிந்தபோன
இந்த சுனாமி ஆக்ரோஷம் தாண்டி
உன் மேல் இருக்கும்
நம்பிக்கைத் தளராமல்

இதோ,
கரையிலிருந்து
கட்டுமரத்தை
கடலில் தள்ளிக்கொண்டு….
நாங்கள் –
அப்பாவி மீனவர்கள்….

— கோவின் – கோச்சா —-

gocha2004@yahoo.com

Series Navigation

கோவின் - கோச்சா

கோவின் - கோச்சா