மலரும் மனமும்

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


மகிழ்ச்சியும் துக்கமும்
மனம் மட்டுமே அறிந்த தெளிவு

எவரிடமிருந்து எது ?
அல்லது
எதனிடமிருந்து எது ?
என்பதில்
எதிரபிப்ராயம் மனதிற்கும்
உண்டு.

வலியில் சுகமும்
சுகத்தில் வலியும்
உள்ளுரையுவமம்

மலரின் மெல்லிதழ்களில்
காற்பதித்துத் தேனுறிஞ்சும்
வண்டுகளால்
மலருக்கு நேர்வது
வலியா ? சுகமா ?
அது மலர் மட்டுமே அறிந்த உண்மை.

மானுட விரல்கள்
அறிந்ததெல்லாம்
மலரை அதன் உறவிடமிருந்து
பிரிப்பது மட்டுமே

என்றேனும் ஒருநாள்
மலரின் முனகலுக்கு
மானுடம் பதில் சொல்ல வேண்டும்
நமது
மனதிற்கும் கூட!
Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா