புஷ்பா கிறிஸ்ரி
அன்று நீங்கள்
அழகாக உழைத்தீர்கள்.
ஆடம்பரமாக நடந்தீர்கள்.
ஏழைகளாய் நாங்கள்
உங்கள் அழகைப் பார்த்து
ஏக்கத்துடன் பெருமூச்சு
விட்டுக் காத்திருந்தோம்
எமக்கும் ஒரு காலம்
வரும் என்று
இன்று எமக்கும் ஒரு காலம்
இதமாய் வந்தது
நாங்களும் உம் போல்
நலமாய் உழைக்கின்றோம்
உழைத்து உழைத்து
உயர்ந்து வருகின்றோம்
நீங்கள் உங்கள்
உழைப்பை மறந்து
உயர்வை மறந்து
ஓய்யார வாழ்வில்
உம்மை மறந்தீர்கள்.
இன்று நீங்கள்
மீண்டும்
அன்றைய எம்போல்
உழைப்பின்றி,
உயர்வின்றி
உரு மாறி ஏழைகளாய்…
நாங்கள் உம் இடத்தில்..
பணக்காரார்களாய்…
பண்பாளர்களாய்..
இது வாழ்க்கை
எமக்குக் கற்றுத் தந்த பாடம்.
நீங்கள் வாழக்கையிடம்
கற்க மறந்த பாடம்
புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com
- இலையுதிர்க் காலம்.
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது -4( தொடர்கவிதை)
- வலி
- வாழ்வும் கலையும் (இறுதிப்பகுதி)
- ஆவலும் அப்பாவித்தனமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 36-வைக்கம் முகம்மது பஷீரின் ‘ஐஷூக்குட்டி ‘)
- ஊசியின் காதும் ஒடுங்கிய தெருவும் (கபீர் தாசாின் சிந்தனைகள் பற்றி சில குறிப்புகள்)
- செயற்கைக் கதிரியக்கம் ஆக்கிய ஐரீன் ஜோலியட் கியூரி [Irene Joliot Curie] (1897-1956)
- அறிவியல் மேதைகள் ரூதர் ஃபோர்ட் (Ruther Ford)
- பாட்டு படும் பாடு
- நீங்கள் இன்று…
- படிக்க மறந்த கவிதை
- நலமுள்ள நட்பு
- பால்
- கடற்கரை வாக்கிங்
- வட்டத்தின் வெளி
- வேங்கூவர் – கனடா
- வேகத் தடுப்புகள்
- வாழ்வும் கலையும் (இறுதிப்பகுதி)
- சிந்து சமவெளி நாகரிகம் : ஒரு மறு பார்வை
- எஸ் என் நாகராஜன் 75 ஆண்டு நிறைவு : மலர் வெளியீடு
- என் குர் ஆன் வாசிப்பு
- சுற்றம்
- அரிசிபால்தீ
- நாங்கள் பேசிக்கொள்கிறோம்