திண்ணைப் பாடல்கள்

This entry is part [part not set] of 29 in the series 20020728_Issue

அனந்த்


திண்ணையிலே காற்றுவாங்க வந்தேன்
தெருவில்இலை அசைவுமிலை நொந்தேன்!

….. கண்திறக்கும் நேரத்திலே
….. கடைசிவீட்டு ஓரத்திலே

விண்மடந்தை! உடலெலாம்கு ளிர்ந்தேன்!

***

உண்டபின்னே திண்ணையில் அமர்ந்தேன்
உடல்அசதி மேவக்கண்ண யர்ந்தேன்

….. அண்டியென்னை ஏதோஒன்று
….. அணைத்ததது யாரோவென்று

கண்திறந்தால் நாய்!நிலைபெ யர்ந்தேன்!

***

திண்ணையென்ற சொல்லையிங்கு யார்தான்
தேர்ந்தெடுத்தார் அவர்ரசனை ஜோர்தான்!

….. கண்ணையள்ளும் நிறத்தினிலே
….. கவிதைகளின் திறத்தினிலே

விண்ணையெட்டும் இவ்விதழின் பேர்தான்!

***

Series Navigation

அனந்த்

அனந்த்