வெகுஜன இதழ்களின் வியாபாரத் தந்திரங்கள்

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

சுரேஷ் கண்ணன்


சமீபத்தில் ஒரு வாரப் பத்திாிகை தனது பத்திாிகையின் விற்பனை பத்து லட்சத்திற்கும் அதிகமாக உள்ளதென்று தினப் பத்திாிகைகளில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து ஜம்பமடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எத்தனை லட்சம் இளிச்சவாயர்கள் உள்ளனர் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. பங்களாவில் திருடப் போகிறவர்கள் காவல் நாய்களுக்கு மயக்க மருந்து பிஸகட் கொடுத்து தன்வயப்படுத்திக் கொள்கிற அதே தந்திரத்தை சில பல மசாலா, சிப்ஸ் பாக்கெட்டுகளையும் வாசகர்களுக்கு தந்து இந்தப் பத்திாிகை பயன்படுத்தி இதை சாதித்துள்ளது. இதை வெறும் வணிக உத்தி என்று ஒதுக்கி வைத்துவிடுவது அபாயகரமானது. கலாச்சார சீரழிவின் அடையாளமாக இதைப் பார்க்க வேண்டும்.

சாி இந்தப் பத்திாிகையின் உள்ளடக்கம் என்னவென்று பார்ப்போமா ?

தமிழக இலக்கியச் சிற்பிகளின் சாகாவரம் பெற்ற படைப்புகளோ, நம்பிக்கை தரும் புதிய எழுத்தாளர்களது இலக்கியப் படைப்புகளோ, தமிழ் செம்மொழியாக அங்கீகாரம் பெறுவதின் அவசியம் குறித்த கட்டுரைகளோ இருக்குமென்று பார்த்தால் ஏமாந்துதான் போக வேண்டும். எந்தெந்த நடிகர், நடிகையர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள், எந்த நடிகையுடன் எந்த நடிகருக்கு பாலியல் தொடர்பு இருக்கிறது போன்ற வாசகனுக்கு அத்தியாவசியமான (!) தகவல்களின் தோரணங்களையே நாம் பார்க்க முடியும். அடுத்த வேளை சோற்றுக்கான உத்தரவாதமில்லாவிட்டாலும் கூட குறிப்பிட்ட நடிகாின் திரைப்படம் ஏன் வெளியாகவில்லை என்று விசனப்படுகிற கூட்டத்திற்கு இது தேவையான ஒன்றுதான்.

சமீபத்தில் ஒரு முடிதிருத்தகத்தில் காத்திருக்க நோிட்ட போது இது சம்பந்தமான ஒருவர் தன் நண்பருடன் நடத்திய உரையாடலை கேட்க நோிட்டது. (முடிதிருத்தகத்தில் காத்திருக்கும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது இதுதான். ஒரு காலத்தில் ஜாதிவெறி பிடித்த சில உயர்ஜாதிக்காரர்கள் முடிதிருத்துபவர்களை வீட்டின் புழக்கடை வழியாக வரவழைத்து காத்திருக்க வைத்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் சர்வாங்க ஷவரம் செய்துக் கொள்கிற நிலை மாறி இன்று அவர்களின் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலையை நோக்குகிற போது காலச் சக்கரம் மிக நியாயமான முறையில்தான் சுற்றுகிறதென்கிற ஆத்ம திருப்தி எனக்கு ஏற்படுகிறது)

இனி அந்த உரையாடலுக்கு வருவோம்.

‘ஏம்ப்பா அந்தப் பத்திாிகைய வாங்கினா அதுக்கு ஈடா சில பொருள்களை கொடுத்துடறாங்களாமே. அப்ப நமக்கு லாபம்தானே ? ‘

‘ஆமாம்ப்பா. ‘

இதைக் கேட்ட எனக்கு நகைப்பாக இருந்தது. பொருட்கள் வாங்குவதால் பத்திாிகையா ? பத்திாிகை வாங்குவதால் பொருட்களா ? எதற்கு எது ஆதாரம் ? இன்று மசாலா பாக்கெட்டுகளை வாங்க மளிகைக் கடைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை போலும். பத்திாிகைக் கடைக்கு சென்றால் போதும். நாம் எந்தப் பத்திாிகையை படிக்க வேண்டும் என்பதையும் எந்தப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதையும் மற்றவர்கள் தீர்மானிக்க, சில லட்சம் பேர் வாய்ப்பு கொடுத்திருப்பது துரதிர்ஷ்டம்தான்.

O

முன்பு தினமலர், தினபூமி போன்ற தினப்பத்திாிகைள்தான் இந்த விளையாட்டை ஆரம்பித்து வைத்தது. தீபாவளி நேரங்களில் மலர் கொண்டு வந்து கூடவே 15 விதமான கச்சடா பொருட்களையும், ஓரு கூப்பனையும் கொடுத்து முதற்பாிசு கார் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி பத்திாிகையை லாட்டாிச்சீட்டுக்கு இணையாக மாற்றியது. இந்த மலர்களில் பெரும்பான்மையான விளம்பரங்களும் மூன்றாந்தர எழுத்தாளர்கள் எழுதிய குப்பைகள் மட்டுமே காணக்கிடைக்கும். பின்னர் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த மாதிாியான இலவச பொருட்கள் வழங்கப்படுவதற்கு தடைவிதித்தது.

O

இன்று எந்த வெகுஜன பத்திாிகைக்கும் சுயமுகமோ, அடையாளமோ இல்லை. தினப் பத்திாிகைகளின் நீட்சியாகவே இவை விளங்குகின்றன். மலத்தின் மீதும் பிணத்தின் மீதும் மொய்க்கிற ஈக்களை போல ஒரு குறிப்பிட்ட செய்தியின் மீது அனைத்து பத்திாிகைகளும் மொய்க்கின்றன. சமூக விரோதிகளின், விபச்சாரம் செய்கின்றவர்களின் அன்றாட நடவடிக்கைகளே இன்று தலைப்புச் செய்தியாகின்றன். அப்துல் கலாம் சம்பந்தப்பட்ட செய்திக்கு தரப்படாத முக்கியத்துவம் கூட சிவகாசி ஜெயலட்சுமி சம்பந்தப்பட்ட செய்திகளுக்கு தரப்படுகிறது. வம்பு பேசுகிற மனோபாவம் உடைய வாசகர்களின் எண்ணங்களுக்கு தீனி போடுகிற வகையில் செய்திகளை பதிப்பித்து காசு பார்க்கிற உத்தியையே இந்த பத்திாிகைகள் கடைப்பிடிக்கின்றன.

வாசகர்களும் பத்திாிகைகளின் இந்த கேவலமான உத்தியை புரிந்து கொண்டு வாங்காமல் ஒதுக்குவதுதான் நலமாக இருக்கும். ஆனால் அதற்கான விழிப்புண்ர்வு ஏற்படும் வரை அது சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது.

O

sureshkannan@vsnl.net

Series Navigation

சுரேஷ் கண்ணன்

சுரேஷ் கண்ணன்