வளர்ப்பு

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

தங்கவேல் மாணிக்கதேவர்



கண்ணு ஒழுங்கா தெரிய மாட்டேங்குது ?
அது என்ன காரா ? ஏன் இப்படி பேய்த்தனமா வருகிறான்.
மெதுவாடா ? மெதுவா ..
மேலே இடிக்கப்போறானோ.
புகை மாதிரி தெரியுது. இந்தப் பக்கம் போவோமா ?
அட அதற்குள் , என்ன அது ?
மோட்டார் பைக்கா இது ?
இந்தக் கண்ணு வேற !
ஒன்னும் சரியா தெரிய மாட்டேங்குது.
கால் வேற நடுங்குது.
வேகமா போறதுக்குள்ள இடிச்சிட்டானா என்ன செய்றது?
ஆட்டோவா அது ?
நிப்பாட்டி பார்க்கலாமா ?
அட ஏன் நிக்காம போறான்…?
என் கையில தான் காசு இருக்கே… !
சரி, இந்தப் பக்கமா மெதுவா போயிடலாம்.
என்ன அது ?
பெருசா?
லாரியா அது ?
என்னமோ சத்தமா பேச்சு குரல் கேக்குதே ?
என்ன சொல்லுறாங்க ?

* * *

ஏம்மா, அந்த தாத்தா நடு ரோட்டுல நிக்கிறாரு ?
தெரியலைப்பா…
ஏம்மா, அவருக்கு உன்னை மாதிரி அம்மா எல்லாம் கிடையாதா?
இருப்பாங்க கன்னு ?
அப்புறம் ஏம்மா குளிக்காம அழுக்கா சட்டை போட்டுட்டு இருக்காரு ?
அவரு அம்மா மோசம் இல்லைம்மா ?
அப்படி இல்லைப்பா ?
பாவம்மா அந்த தாத்தா, ரோட்டை கடக்க முடியாமல் கஷ்டப்படுறாரு. நான் வேனா கையை பிடித்து இந்தப் பக்கம் அழைச்சுட்டு வரட்டுமாம்மா ?
வேணாம் கன்னு.. உன் மேலே யாராவது காரை ஏத்திருவாங்க.

* * *

thangavelmanickadevar@gmail.com

Series Navigation

தங்கவேல் மாணிக்கதேவர்

தங்கவேல் மாணிக்கதேவர்