ஷேக்ஸ்பியரும் வெங்காயமும்

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


—-

இஸங்கள் எப்படி உருவாகின்றன எனப் பல்லாண்டு ஆராய்ச்சிக்குப் பின் எழுதிய கதை.

1

நாட்டில் எவனிடம் ‘ ‘சீஸர் தெரியுமா ? ‘ ‘ என்று கேட்டாலும், ‘ ‘நாயின் பெயர் ‘ ‘ என்கிறான்கள். ஒருவனுக்காவது அது ஒரு மன்னனின் பெயர் என்று தெரியவில்லையே… என்று அவன் வருத்தப் பட்டான். அவன் வாழ்வில் இப்படி நிறைய வருத்தங்கள். உலகம் அபத்தங்களின் அகராதி. இதில் அவனைப் போன்ற மேதாவிகளுக்கு விலாசமேயில்லை. அறிவாளிகள் விலக்கி வைக்கப் படுகிறார்கள். அல்லது சுடப்படுகிறார்கள். சில அறிவாளிகள் போராளிகள் ஆகி… ஆ, தாங்களே துப்பாக்கிகளை ஏந்தி விடுவதும் உண்டு. அவர்களுக்கு வீர வணக்கம்.

2

போகாத பொழுதுகளை என் செய்வது ? சீட்டு விளையாடலாம். அதற்கும் தன்னொத்த வெட்டி வீரமணிகள் வாய்க்க வேண்டும். ஆள் சிக்கா விட்டால் வெளியே காலாற நடந்துவிட்டு வரலாம். சுற்று முற்றும் பார்த்துக்கொண்டு சிகெரெட் பிடிக்கலாம். உலா போகும் தருணங்களில் அதிர் ?டம் இருந்தால் செளதாமினியின் தரிசனம் கிடைக்கும்.

நடையலுத்த மதிய நேரங்கள் எனில் ?… குடிசைப் படிப்பகம். டாக்கடை மோ ?தரில் ஒரு பெஞ்சும் அதில் கல்லடியில் பத்திரப் படுத்தப் பட்ட செய்தித்தாளும். உக்கிரச் சிவப்பில் கொடி. ஒதுக்கமாய் ஈரமணல் குவித்து அதன் குழிவில் மண்குடத் தண்ணீர். மேலே ஈயலோட்டா, சீ ?ராய் சங்கிலியில் கட்டிக் கிடக்கும். ஈயலோட்டாவுக்கும் திருடன் என்கிற ?ாக்கிரதை வாழ்க.

கல்கொண்டு செய்திகளை அமுக்கி வைத்தவர்கள் வாழ்க.

‘புரட்சி வெடிக்கும் ‘ செய்திகொண்ட தாளை விரித்து பெஞ்சில் துாங்கிக் கொண்டிருந்த மனிதர் எழுந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார் அவனிடம். உயரமானவர். அதாவது படுத்தால் பெஞ்சுக்கு வெளியே கால்கள் திகைக்கும். உயரம் என்றால் அவன் தோளுக்கு மிஞ்சியவர். தோழர். தோழர் சுயம்பு.

மனிதனென்றால் எப்படி இருக்க வேண்டும். ஆ, சுயகெளரவம்… சிந்தனை வேண்டும். போராட்ட உணர்வு வேண்டும். ரெளத்திரம் பழக வேண்டும். தவறு கண்ட இடம் சுட்டிக் காட்டத் தயங்கக் கூடாது. இப்படி ஏடாகூடமாய் நடந்து கொண்டு ஒரு தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்… வெளியிறக்கப் பட்டவர் அவர்.

‘ ‘வாங்க தோழர்… வெயில்ல வரீங்க… குளிர்ந்த நீர் அருந்துங்க ‘ ‘ என்றார் அன்புடன்.

‘ ‘நீங்க சாப்டாங்களா ? ‘ ‘ என பதிலுக்கு மனிதநேயத்துடன் அவன் விசாரித்தான்.

அவரது பேச்சே பிரசங்கப் பிரவாகமாய் இருந்தது. யாரோ எழுதிக் கொடுத்துப் பேசுகிற காடையிருந்தது அதில். ஒரு சீஸர் வாலாட்டல் அதில் இருப்பது போல் ஏனோ அவனுக்குப் பட்டது. அவன் வருகைக்குக் காத்திருந்தாற் போலவே அவர் பேசப் பிரியம் கொண்டு ஆரம்பித்தார். அவரிடம் இருந்த உக்கிரத்துக்கு அந்த மண்பானைத் தண்ணீர் அவருக்கே காணாது என்றிருந்தது. படுத்திருந்த பெஞ்சில் இருந்து எழுந்து கொண்டு அவர் பேச, அவனுக்கு உறக்கம் வந்தது. அவர்முன் கொட்டாவி விட சங்கடப் பட்டான். இதுதான் ஆவியெழுப்புதல் கூட்டமா ? பிறகு அந்தப் பக்கம் போவதையே நிறுத்தி விட்டான். உம் துாக்கம் உமக்கு. என் துாக்கம் எனக்கு. எங்கிருந்தாலும் வாழ்க. உம் இதயம் அமைதியில் வாழ்க.

3

தனசேகருக்கு இன்டர்வியூ கார்டு வந்தது. அது ஒன்றும் புதியதல்ல. நீங்கள் தேர்வு பெறவில்லை என்றுகூட நிறையக் கடிதங்கள் வருகின்றன. கடிதங்கள் சேதி சொல்லிகள். அவ்வளவே.

ஆனால் அப்பாவுக்கு அதில் காணாததைக் கண்டாற்போலப் பரவசம். கார்டு அவருக்கு பெரிய சை ? பி ?கெட் துண்டு போலிருந்தது. அவரது பக்தி அதிகமாகி விட்டது. அட ஆஞ் ?நேயா என்றார் அவர் தனை மறந்த கூவலில். மனிதநேயம் மாதிரி ஆஞ்சநேயம் இது. அப்பாவுக்கு பாவம் நோஞ்சான் உடம்பு. சின்ன மழை, கொஞ்சம் அதிகவெயில் எதானாலும் சளித் தொந்தரவு எகிறிவிடும். (அமிர்தாஞ்சநேயம்!)

டார் ?ானுக்கு எதிர்ப்பதம் நோஞ்சான்.

‘ ‘அடேய் பக்தியும் சளிப் பிடிக்கிறதும் ஒண்ணா ? ‘ ‘

அவன் சிரிக்கிறான். ‘ ‘ஏம்ப்பா எதுக்கெடுத்தாலும் உங்களுக்கு ஒரு படபடப்பும் கோபமும் வருது ? ‘ ‘

‘ ‘உன்னைப் பெத்ததில் இருந்தே அப்படித்தான். ‘ ‘

தனசேகர் அப்பாவைப் பற்றி இந்தக்கால மோ ?தரில் ஒரு கவிதை எழுதினான்.

தோஷம் விலக

காலையில் குளித்து

கோவிலைச் சுற்றினால்

பிடித்தது ஜலதோஷம்

காலையில் அப்பா அவனை எழுப்பினார். அன்பான அப்பா. அவன் சிகெரெட் பிடிக்கிறான் எனத் தெரிந்தும் அவனை அனுமதிக்கிறார்… வேறு வழியில்லாமல். ‘ ‘தனு ? ‘ ‘ என அவன் தலையை வருடினார். ‘ ‘என்னப்பா ? ‘ ‘ என்று பாதிக்கண்ணைத் திறந்கிறான். அவனது மன அறையே மணவறையாய் ஆ, உள்ளே செளதாமினி. அப்பா வந்ததில் அவள் வெட்கப்பட்டு எழுந்து போய்விடுவாளோ என்று பயமாய் இருந்தது.

‘ ‘குட் மார்னிங் ‘ ‘ என்கிறார் அப்பா அதே புன்னகையுடன். ‘ ‘இன்னிக்கு என்ன நாள் ? ‘ ‘

‘ ‘பிரதோ ?மா ? ‘ ‘

‘ ‘அட இல்லடா ‘ ‘

‘ ‘சரி உங்க பிறந்தநாள் அல்லது கல்யாணநாள். சரியா ? ‘ ‘

‘ ‘அட விசே ?ம் எனக்கில்லடா உனக்கு ‘ ‘ என்று அழுத்தினார் அப்பா.

‘ ‘எனக்குக் கல்யாண நாளா ? சொல்லவே யில்லையே ? ‘ ‘

‘ ‘சரி நானே சொல்றேன்… இன்னிக்கு… உனக்கு… இனடர்வியூ! ‘ ‘

அப்பா, உனக்காகவாவது இந்தவேலை எனக்குக் கிடைக்கணும். அவன் பல் விளக்கி முகங் கழுவி வருமுன் அவர் பூை ?யறையில் இருந்தார். வடை கண்டுபிடித்தவன்… அதில் ஓட்டை போட்டவன்… அதை மாலையாக்கிச் சார்த்தியவன்… என நாடு பக்தியில் தலைமுறைகளாய் முன்னேறி வருகிறது.

இவனுக்கு அடுத்து ஒரு பெண். இந்திரா. இந்தப்புறா ஆட வேண்டுமானால் இளவரசர் பாட வேண்டும்… என்று தமிழில் புகழ்பெற்ற சினிமாவசனம். அதைப்போல அவளுக்கு நல்ல வரன் அமைய வேண்டுமானால் இவன் நல்ல வேலையில் அமர வேண்டும்.

கிணி கிணியென்று மணியோசை. ‘ ‘அம்மா பால் வந்தாச்சி ‘ ‘ என்று கத்தினான் உடைமாற்றியபடியே. ‘ ‘இல்லடா உங்கப்பா பூை ? பண்ணறார் ‘ ‘ என்றாள் அம்மா. பாலை வைத்து நைவேத்தியம் நடந்தாகிறது. பால்காரனாய் ஆஞ்சநேயரை அழைப்பதாகவே அதுவும் தோன்றியது.

‘ ‘வாடா கற்பூரம் எடுத்துக்கோ. ‘ ‘ குனிந்து எடுத்துக் கொண்டான். ‘ ‘அப்டியே ஒரு நம ?காரத்தைப் பண்ணு. ‘ ‘ சரியென்று அதையும் பண்ணினான். ‘ ‘நல்லா மனசார வேண்டிக்கோ வேலை கெடைக்கணும்னு… ‘ ‘

‘ ‘இப்டி மணியடிச்சா வேலை கிடைச்சிருமாப்பா ? ‘ ‘

‘ ‘ச்… ‘ ‘ என்றார் தளர்ந்து போய். இதுக்கெல்லாம் நம்பிக்கை வேணுண்டா ‘ ‘

‘ ‘நீங்க நம்புங்கப்பா உங்க பிள்ளையை… இந்த வேலைல நான் என் அறிவினால் தகுதி பெறுவேன்… ‘ ‘

‘ ‘டேய், உனக்கு இன்டர்வியூ இன்-ன்னிக்கு. கார்டு வந்ததே அபூர்வம். ஒரு ?ி.கே. புத்தகம், குறைந்தபட்சம் இன்னிக்குக் காலைல இந்து… புரட்டினியா நீ ? பிரிக்காமல் கொள்ளாமல் அப்டியே கிடக்கு பாரு. ‘ ‘

‘ ‘அப்டின்னா நீங்களும் படிக்கல… காலைல மணியடிக்க உக்காந்தாச்சி… ‘ ‘

அவருக்கு உள்ளே இரத்தம் எகிற ஆரம்பித்து முகம் சிவந்து விட்டது. ‘ ‘பகவான் அருள் இல்லாட்டி என்ன அறிவு இருந்தும் பிரயோ ?னமில்லை. அதைத் தெரிஞ்சுக்கோ ‘ ‘

‘ ‘அப்ப எதுக்கு ?ி.கே. புத்தகம்லாம் போடறான் நாட்ல ? வே ?ட்! ‘ ‘

‘ ‘ஐய அவன் அமைதியா இன்டர்வ்யூ போய்ட்டு வரட்டும். உங்க சண்டையை அப்றம் வெச்சிக்கங்க… ‘ ‘ என்றாள் அம்மா.

சாப்பிடுகையில் ‘ ‘உன் முதல் சம்பளத்தில் எனக்கு என்ன வாங்கித் தருவேடா ? ‘ ‘ என்றாள் அம்மா.

‘ ‘வடைக்கரைக்க வெட்கிரைண்டர் ‘ ‘ என்றான்.

4

என்ன கம்பெனி தெரியவில்லை. நகரத்தின் மையத்தில் அலுவலகம் இருந்தது. நல்ல விஷயம். டை அணிந்து, சட்டையை இன் செய்துகொண்டு, ஷூ சாக்ஸ் எடுப்புடன் ஜோராய்ப் போயிருந்தான். டைதான் பார்க்க ஏனோ பேன்ட் பட்டன் போடாத மாதிரி உறுத்தலைத் தந்துகொண்டே இருந்தது. இடுப்பில் பின்னால் டை கட்டினால் அப்பா நெகிழ்ந்து ‘ ‘ஆஞ்சநேயா ‘ ‘ எனப் பரவசப் படக்கூடும்.

அலட்சியமாய் இன்டர்வியூவுக்கு வந்த சகாக்களை ஒரு நோட்டம் விட்டான். பாவம் அவர்கள் வெறும் விரல்சூப்பலுடன் வீடு திரும்ப நேரலாம். அப்ப நீ ?… என்றது மனது. தற்செயலாய்ப் பார்த்தது போல் ரிசப் ?னி ?டைப் பார்த்தான். Not bad.

டாய்லெட்டே அமர்க்களமாய் இருந்தது. இலைபோட்டுப் பரிமாறலாம் போல. கண்ணாடி பார்த்து, யார் இந்த அழகன், என பிரமித்தான். இந்தக் கோலத்தில் செளதாமினியைப் பார்க்க வாய்த்ததேயில்லை.

ஒவ்வொருமுறை செளதாமினியைப் பார்க்க நேர்கையிலும் எதாவது அசம்பாவிதங்கள். சட்டை சற்று கசங்கி சாயம்போனதாய் இருக்கும். செருப்பு பிய்ந்து மிதிக்கக் கூடாததை மிதித்தாற்போல நடந்து வந்து கொண்டிருப்பான். அட அவளைப் பார்க்கவென்றே சிறப்புத் தயாரிப்புடன் போனால் அவள் கண்ணில் பட்டால்தானே ?

‘ ‘மி ?டர் தனசேகர் ? ‘ ‘

‘ ‘கமிங் ‘ ‘ என்றலறி ஓடிவந்தான். வேலையில்லைன்றாதீங்கப்பா.

ரெண்டாள் இருந்தும் உள்ளே குளிரூட்டப் பட்ட அமைதியாய்க் கிடந்தது. பிணவறை. டேய் இந்த லொள்ளு எல்லாம் வேணாம். அடக்கி வாசி.

‘ ‘உட்காருங்கள் திரு …. ‘ ‘ என அவன் பெயரை மனசில் தேடினார் ஒருவர். இதான் திரு திரு என்று விழிக்கிறதா ?… பிறகு அவன் விண்ணப்பத்தில் தேட, அவர் தன் கண்ணாடியைத் தேடினார். ‘ ‘நான் தனசேகர் ஐயா ‘ ‘ என்றான் தமிழில். ‘ ‘ஆ, வெக நல்லது ‘ ‘ என்றார் ஆங்கிலத்தில். ‘ ‘நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருப்பதை உங்கள் சான்றிதழ்கள் தெரிவிக்கின்றன. நல்வாழ்த்துக்கள்! ‘ ‘

‘ ‘இதை நல்ல துவக்கமாகவே உணர்கிறேன் ‘ ‘

‘ ‘துடிப்பும் ஆர்வமும், சவாலான நிமிர்வும் கொண்ட… ‘ ‘

‘ ‘என்னைப் போன்ற… ‘ ‘ என்றான் இடைமறித்து.

‘ ‘ஆ ?ா ‘ ‘ என்றார் இன்னொருவர் தலையாட்டி.

‘ ‘நீங்கள் அதிர்ஷ்டக்காரர் என நம்புகிறேன்… ‘ ‘ என்றான் விடாமல்.

முதலாமவர் தலையாட்டியபடி ‘ ‘நம்முடையது புதிதாய்த் துவங்கப்படவுள்ள வியாபார மையம். சுற்றாலாப் பயணிகளுக்கு நமது பாரம்பரியம்-மிக்க கலைப்பொருட்களை பற்றி எடுத்துச் சொல்லி, அவர்களைக் கவர்ச்சிகரமான நல்லறிமுகத்தினால் ஈர்த்து விற்பனை செய்ய வேண்டியிருக்கும். ‘ ‘

வெள்ளைக்காரன் உடையுடன் நம் நாட்டுப் பாரம்பரியப் பொருள் விற்பனை. (சிரித்து விடாதே.) ‘ ‘அது என்னால் ஆகும் கனவான்களே. தஞ்சாவூர் ஓவியங்கள், காஷ்மீர் சால்வைகள், கலைப்பொருட்கள் பற்றிய செய்திகளைத் திரட்டிக் கொண்டு நான் திறமையாகவே செயல்படுவேன். ‘ ‘

‘ ‘தேவைப்பட்டால் சற்று மிகைப்படுத்தி பொய்களும் பேசலாம் அல்லவா ? ‘ ‘

‘ ‘தேவைப்பட்டால் சற்று உண்மையும் பேசுவோம் ‘ ‘ என்றான். சிரித்தார்கள். பிறகு அவர்கள் சில பொது அறிவுக் கேள்விகள் கேட்டார்கள். வெளிநாட்டு புழக்க நாணயம் பற்றிய அறிவு, ரூபாய்க்கு நிகராக அவற்றின் நாணறமாற்று பற்றி… சரமாரியான ஆங்கிலத்தில் சரளமாக அவன் உரையாடியதில் அவர்களுக்குத் திருப்தி.

‘ ‘உங்களைப் போல ஒருவரையே நாங்கள் எதிர்பார்த்தோம் ‘ ‘

‘ ‘போல ஒருவரை… என்று ஏன் அந்த மேலதிக வார்த்தைகள் ? ‘ ‘ என்றான் அலங்காரமாய்.

‘ ‘அடுத்த மாத அளவில் அரசு பிரமுகர் முன்னிலையில் திறப்பு விழா. அத்தோடு நாம் மும்முரமாக வேண்டியிருக்கும். சம்பளம் பற்றிய விதிமுறைகள் எல்லாம் கவனித்தீர்கள்தானே ? ‘ ‘

‘ ‘ஆம். அவற்றுக்கு ஒத்துப் போகிறேன். ‘ ‘

‘ ‘நல்வாழ்த்துக்கள் ‘ ‘ என்று கைகுலுக்கினார்கள்.

செளதாமினிக் குட்டி, எனக்கு வேலை கிடைத்து விட்டது!

5

மொட்டைமாடியில் அப்பா இருந்தார். என்னவோ தோணியது. அங்கேயே நம ?கரித்தான். ‘ ‘காலை வாரிறாதே ‘ ‘ என்றபடி கும்பிட்டார். ‘ ‘வேலை கிடைத்து விட்டது அப்பா. நோ lie ‘ ‘ என்றான். சிலிர்த்துப் போய் வானத்தைப் பார்த்துக் கும்பிட்டார் அவர். ‘ ‘பகவானே ‘ ‘ என்றார்.

‘ ‘பகவான் இல்லப்பா. வெறும் வான் ‘ ‘ என்றான் அவன்.

6

ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளி ஒருவரைக் கொண்டு திறப்பு விழா. அவர் மந்திரியாகும் ஹேஷ்யங்கள் வேறு இருந்தன. அரசின் கருணைப் பார்வையில் டாலர் போக்குவரத்து, டிராவலர்ஸ் செக்குகள் புழக்க வழக்கங்களுக்கு ஒத்தாசை சகஜப்படும் என ஒரு கணக்கு. பிரபலஸ்தரைப் பிடித்து அவர் தரும் நாளுக்குக் காத்திருந்து திறப்பு விழா தீர்மானிக்கப் பட்டது.

ஷா என்டர்பிரைசஸ்- திறப்பு விழா என்று இந்து முதல்பக்க வண்ண விளம்பரம் கொந்தளிப்பாய் இருந்தது. அப்பாவிடம் காட்டினான். ‘ ‘தேவலையே ‘ ‘ என்றார். ‘ ‘உடனே வானத்தைக் கும்பிட வேண்டாம். தேவலை இல்லை- வியாபார வலை ‘ ‘ என்றான்.

‘ ‘தம்பி, நிகழ்ச்சித் தொகுப்பு… காம்பியரிங் பண்றியா ? ‘ ‘என்று கேட்டார்கள் திடாரென்று. ‘ ‘அதுக்கென்ன ? ‘ ‘ என்றான் உற்சாகமாய்.

அணிவகுப்பு மரியாதையுடன் – பள்ளி வகுப்பு நுழையாத கூட்டத்துக்கு கார் அணிவகுப்பா ? – வி.ஐ.பி. வந்தார். யானைத் துதிக்கை போலப் பெருந்துண்டு. புகைப்பட மின்னல். பன்னீர் மழை. கருப்புக் கண்ணாடிக்கும் அதுக்கும் குப்புறத் தட்டிருமோன்ற பயத்தில் கையைப் பிடித்து மேடைக்கு அழைத்து வந்தனர். ‘ ‘எங்களது பாரம்பரியம் மிக்க (என்ன பாரம்பரியமோ ?) மேதகு ஐயா சோமசுந்தரம் அவர்களை உவகை பொங்க வரவேற்கிறோம் ‘ ‘ என்றான் ஒலிபெருக்கியில். அவர் – அப்பிடித் தாக்குய்யா – அவனைப் பார்த்துக் கும்பிட்டார்.

கீழயிருக்கும் அப்பா ஆனந்தக் கண்ணீர் விட்டு ஆஞ்சநேயா என்றிருப்பார்.

எல்லாம் நன்றாய்த்தான் இருந்தது. சோமபான சுந்தரம் தமது உரையில் நிறைய அசட்டு ே ?ாக்குகள் அடித்தார். நிர்வாகிகள் பக்கம் புன்னகையுடன் பெரிய மின்விசிறி போலத் திரும்பினார். அவர்கள் புல்லரித்துப்போய்த் தலையாட்டி ரசனை கொண்டாடி மகிழ்ந்தார்கள். ‘ ‘ ?ா என்றதும் எனக்கு பெர்னாட் ?ா ஞாபகம்தான் வருகிறது. (வந்திருமே!) அவர் எழுதிய ?ுலிய ? சீ ?ர் நாடகத்தில்… ‘ ‘

அந்தப் பக்கத்து மைக்கில் அவர். இந்தப் பக்கம் அவன். சட்டென்று ‘ ‘ஐயா, ?ுலிய ? சீ ?ர் எழுதியவர் பெர்னாட் ?ா அல்ல, ே ?க் ?பியர் ‘ ‘ என்றான். ஒருகணம் திகைத்துப் போனார் அவர். பிறகு சமாளித்துக்கொண்டு ‘ ‘எ ? எ ? ‘ ‘ என்று மேலே பேச ஆரம்பித்தாலும் அவரிடம் முன்னிருந்த அந்த கெத்து குரல்-ரகளை இல்லை. காற்றுப் போன டயருடன் பஸ்ஸை டிப்போவுக்கு எடுத்துப் போகிறாப்போல என்னவோ பேசிவிட்டு அமர்ந்து கொண்டார்.

கூட்டம் முடிந்து கார்கள் புறப்பட்டுப் போன புழுதி அடங்குமுன்னே நிர்வாகிகளிடம் இருந்து அவனை உள்ளே கூப்பிட்டு அழைப்பு வந்தது. தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தார்கள். அவனைப் பார்த்ததும் முதலாமவர் ‘ ‘எய்யா ஜூலியஸ் சீஸரை ஷேக்ஸ்பியர் எழுதினா என்ன வெங்காயம் எழுதினா என்ன ? அவர் எதோ சொன்னார்னா சொல்லிட்டுப் போட்டுமேய்யா… நீ என்னத்துக்கு டிராஃபிக் சிக்னல்ல பின்வண்டி ஹாரன் அடிச்சாப்ல திருத்தறே ? ‘ ‘ என கண்சிவக்க எகிறினார்.

‘ ‘இல்ல சார்… நான்… ‘ ‘

‘ ‘இல்ல சாராவது நொள்ள சாராவது ? யூவார் dismissed ‘ ‘ என்றார் அடுத்தவர் ஆக்ரோஷமாய்.

7

‘ ‘பகவானே ‘ ‘ என்று வானத்தைப் பார்த்தார் அப்பா. அவர் கண்கள் அழுதன. ‘ ‘கடவுள் நம்பிக்கை வேணுண்டா, தனு. அவனன்றி ஓரணுவும் அசையாதுன்னுட்டு… ‘ ‘

‘ ‘வெறுப்பேத்தாதீங்கப்பா… (அவர் சொல்வது அவனுக்கு, அவனன்றி ஒரு மயிரும் அசையாது என்பது போலிருந்தது.) ‘ ‘ என்று வெளியேறினான். கலைந்த தலையை வாரிக்கொள்ளக் கூடத் தோணவில்லை. எதோ ஒரு சட்டை. மனசில் வன்மமும் ஆத்திரமும் குமுறியது. தெருவில் இறங்கினான். நேர் எதிரே வந்தாள் செளதாமினி.

8

போகாத பொழுதுகளை என் செய்வது ?

‘ ‘மனித சக்திகளை ஒன்று திரட்ட வேண்டும். அதிகார வர்க்கத்தைத் தகர்த்தெறிய வேண்டும். அதைத் தட்டிக்கேட்க வேண்டும். அதட்டிக் கேட்க வேண்டும் நம் உரிமையை. நிர்வாகத்தின் முதுகெலும்பை முறிக்க வேண்டும். புர்ட்சி செய்யத் தயங்கக் கூடாது… ‘ ‘

முடிக்கவே மாட்டாரா இவர் ?

‘ ‘அதற்காக எந்த ஆயுதத்தையும் கைக்கொள்ளலாம். போராட்டத்துக்கான உன் ஆயுதத்தை… நீ அல்ல, உன் எதிரியே தீர்மானிக்கிறான்… என்கிறான் எங்கல்ஸ் ‘ ‘

அவன் அவரைப் பார்த்தான். ‘ ‘அதைச் சொன்னவன் எங்கல்ஸ் அல்ல, மாவோ ‘ ‘ என்றான்.

9

தமிழ்நாட்டில் ஒரு பெரும் தீவிரவாதக் கும்பல் வளர்ந்து தாடிவளர்த்து வருகிறதாகவும் அமெரிக்க, பன்னாட்டு நிறுவனங்கள் உஷாராகி தத்தம் வணிக வளாகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி யிருப்பதாகவும் கேள்வி.

—-

storysankar@rediffmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்