குரும்பையூர் பொன் சிவரசா
வேலையில்லாக் கந்தனுக்கு
வெள்ளையிலே ஓர் தனிப்பிடிப்பு
அப்பா அம்மா பார்த்த பெண்களெல்லாம்
அற்பமாய்த் தெரிந்தார்கள் அவனுக்கு
கொழுத்த சீதனத்துடன் கொண்டு வந்தார்
அப்பா ஓர் பெண்பிள்ளை
குணத்திலே தங்கமான பெண்ணொன்றை
தன்னோடு கூட்டிவந்தார் அவன் அம்மா
பணமும் குணமும் பட்டிக்காட்டான்
பேசும் பேச்சுக்கள் தெரியாதா உங்களுக்கு
வெள்ளையாய் பெண்ணொன்று வேண்டுமென்றான்
வேலையில்லாக் கந்தன்
கறுத்த பெண்ணைக் கைப்பிடித்தால்
கருமம் பிடித்த வாழ்க்கைதான் மிஞ்சுமென்றான்
வெளிநாட்டுக்குப் போனவங்கள்
வெள்ளைகாரியையே கொண்டுவாறாங்கள்
நானும் போறேன் வெளிநாடு
நாட்டுக்கு வாறேன் வெள்ளையோடு
சொல்லிப்புறப்பட்டான்
வேலையில்லாதோர் ஓடும் வெளிநாட்டிற்கு
குளிரும் கூதலுமாய் காலநிலை
கும்மிருட்டு எங்கு பார்த்தாலும்
கடவுளை மனத்தில் வைத்தபடி
காலடி எடுத்து வைத்தான் வெளிநாட்டினிலே
பாசை ஒன்றும் புரியவில்லை அவனுக்கு
பாடசாலைக்குப் போகட்டாம் படிப்பதற்கு
இதுதானோ விதியென்று போனான் பள்ளிக்கு
படிப்பொன்றும் ஏறவில்லை என்றாலும்
பக்கத்து வகுப்பு பமீலாவுடன்
பரிச்சயம் மட்டும் ஏற்பட்டதவனுக்கு
கந்தன் இப்போ கன்டோவாய் மாறிவிட்டான்
கருப்புத்தான் என்றாலும் வெள்ளைக்காரன் தான் நானென்றான்
மாட்டுவண்டியை அவன் மறந்தான்
மாடாய் உழைத்த தன் தந்தையையும் அவன் துறந்தான்
அம்மா என்ற அன்புத் தெய்வத்தை
அடிக்கடி பணம் கேட்கும் தொல்லை என்றான்
பகிர்ந்துண்ணும் பண்பாட்டை பட்டிக்காடென்றான்
வகுப்பில் பமீலாவை தன் பக்கத்தே இருத்தி
பலமான முத்தங்கள் கொடுத்திடுவான்
சில நேரம் நஸ்சாக சில்மிசமும் செய்திடுவான்
வெள்ளைப் பொம்பிளையள் வாழப்பிறந்ததுகள்
எங்கடை பொம்பிளையள் வாய்காட்டப் பிறந்ததுகள்
சொல்லிடுவான் நாக் கூசாமல்
எட்டு முழத்தில் இப்பவும் சேலை உடுக்குதுகள்
எங்கடை பொம்பிளையள் வெளிநாட்டில்
தண்ணி அடித்தால் தரம் கெட்டுப் போகுமாம் தங்களுக்கு
டிஸ்கோ போவது டிசிப்பிளீன் இல்லையாம்
வாழ்வை ரசிக்க வக்கில்லாத பிறப்புக்கள்
இதுகளைக் கைப்பிடித்தால் பாழாகும் வாழ்வென்று
வெள்ளையுடன் இன்பமாய் வாழ முடிவெடுத்தான்
வெளிப்படையாய் பல இரவு பரீட்சித்து பார்த்தபின்பு
பமீலாவை கைப்பிடித்தான் கன்டோவாய் மாறிய கந்தன்
ஒளிவில்லை மறைவில்லை ஒற்றுமைக்கும் குறைவில்லை
ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் ஏதுமில்லை
ஆளுக்குச் சரிபாதி என்ற சமத்துவ சமுதாயம்
இதுவல்லோ வாழ்க்கையென்று இன்புற்று இருக்கையிலே
இடியாய் விழுந்ததோர் செய்தி!
கறுவல் ஒருவனிடம் கள்ளத் தொடர்பாம் பமீலாவிற்கு
கண்டிப்பாய் கேட்டான் கன்டோ
“வெட்கமாய் இல்லை உனக்கு”
ஆம் வெட்கம்தான்! உன்னைப்போல் உலகம் புரியாதவனை
கலியாணம் செய்தது வெட்கம்தான்!
வெட்டொன்று துண்டிரண்டாய் அட்டகாசமாய்
பதிலளித்தள் பமீலா
வெள்ளையைத் தேடி தான் போக
வெறும் கறுவலை நாடி வெள்ளை போவதேனோ!
ஓடி வந்தான் என்னிடத்தில், அழுகையுடன்
காலிலே போடுகின்ற கறுப்புச் சப்பாத்து
கண்ணுக்கழகாய் இருப்பதுவும் தெரியாதோ?
கருங்கூந்தல் வேணுமென்று
கன்னியர்கள் கலங்குவதுவும் உனக்குத் தெரியாதோ?
கன்டோவே கந்தனாய் நீ மாறிவிடு
உடல் கறுப்பென்றாலும்
உள்ளம் வெள்ளை கொண்டவர்கள் நம் பெண்கள்
உன்னையே திருத்தி உருவாக்கும் சக்தியுண்டு அவர்கட்கு
மன்னிக்கும் குணம்கொண்ட மனிதர்கள் எம் பெண்கள்
மடத்தனம் வேண்டாம் இனியும்
மடல் ஒன்று வரைந்திடு உன் அம்மாவிற்கு
கயமை புரிந்தவர்க்கும் கருணை காட்டும் பெண்கள்
இன்றும் உள்ளார் எம் நாட்டில்
அம்மா சொல்பவளை ஏற்றுக்கொள்
அன்பாய் குடும்பத்தை நடாத்திவிடு
வெள்ளை உள்ளத்தை கண்டு கொள்வாய்
வெள்ளைக் காதல் என்னவென்று புரிந்து கொள்வாய்
சொல்லி வைத்தேன் அவனுக்கு!
சூடு பட்டதனால் புரிந்திருக்கும் அவனுக்கு!
ஆம் சூடு பட்டதனால் புரிந்திருக்கும் அவனுக்கு!
ponsivraj@gmail.com
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 4- ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 14,15)
- சுந்தர ராமசாமி விருது திரு.கண்மணி குணசேகரனுக்கு வழங்கப் படுகிறது
- இஸ்லாமிய கலாச்சாரம் கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் பார்வை குறித்த ஓர் உரையாடல்
- காதல் நாற்பது (43) எப்படி நேசிப்பது உன்னை ?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 2
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி கானல் காடு கவிதைக் கருத்தரங்கு
- கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் -7
- சாருவின் ஜனனி:
- கோரேகான் தமிழ்ச் சங்கம் – எஸ் ஷங்கரநாராயணனுடன் ஒரு சந்திப்பு
- பொது ஒழுக்கம்
- தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” சிறுகதைத் தொகுப்பு
- வானப்பிரஸ்தம்
- ஹெண்டர்சன் சமூக மன்றத்தின் பட்டி மன்றம்
- நிலாவின் ‘பனிவிழும் இரவு’ சிறுகதையின்
- காந்தி மக்கின்ரையர் வழங்கும் இரு நாடகங்கள்
- பன்னாட்டுக் கருத்தரங்கு – தமிழின் ஓருலகக் கருத்துணர்வு
- Tamilnadu Thiraippada Iyakkam And National Folklore Support Centre
- திருமதி நூர்ஜகான் சுலைமான் எழுதிய நூல் வெளியீட்டு விழா
- பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா
- எழுத்தாளினி ஏகாம்பரி நட்சத்திரம் ஆனக் கதை
- சும்மா
- கால நதிக்கரையில்……(நாவல்)- 28
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 32
- நாக்குநூல்
- இறந்தது யார்?
- சிறுகதையில் என்ன நடக்கிறது?
- குற்றாலம் பதிவுகள்
- படித்ததும் புரிந்ததும்..(6) மிருகம்- கன்னத்தில் அறைந்தால் – கூட்டணி தர்மம்
- புலம்பெயர் சஞ்சிகைகள் ஆய்வுக்கான ஓர் அறிமுகம்
- கரிசல் கிருட்டிணசாமி (17.12.1959)
- கே.எஸ். பாலச்சந்திரனின் தனிநடிப்பு நிகழ்சிகளின் தொகுப்பு வெளியீட்டு விழா
- திருப்பூர் ம. அருணாதேவியின் கவிதைகள்
- எங்கள் தாய் !
- வெள்ளைக்காதல்
- வஞ்சியென்றால் என்னை…
- “ நிற்பவர்கள்”
- வாசம்