குரும்பையூர் பொன் சிவராசா
தனிமையிலே நான் இருந்து
வெறுமைதனை உணர்ந்து கொண்டேன்
கலகலப்பாய் நாம் இருந்த காலத்தை
ஒரு கணம் எண்ணிப் பார்க்கின்றேன்
முன்னோக்கிப் போகின்ற என் எண்ணத்தை
பின்னோக்கித் திருப்புகின்றேன்
அம்மா அப்பாவின் அரவணைப்பில்
அந்த அளவற்ற சந்தோசம்
அண்ணன் தம்பியுடன் அடிபட்டு
அல்லோல கல்லோலமாய் வாழ்ந்த
அந்த வசந்த காலங்கள்
எடுத்தெறிய முயன்றாலும்
என்னுள்ளே மீண்டும் மீண்டும்
விசையாய் எழுந்து நிற்கிறது
பாடசாலையில் படித்த பாடங்கள்
அங்கே அடித்த கும்மாளங்கள்
பள்ளிக்கூடத்தை கட் பண்ணி
படம் பார்த்ததிலே கண்ட இன்பம்
இடையிடையே இனிமையாக வந்து போகும்
அந்தக் காதல் சுகங்கள்
பரீட்சை நெருங்க நெருங்க
பதறுகின்ற நமது நெஞ்சங்கள்
எல்லாமே பசுமையான நினைவுகளாய்
என்றுமே என் மனத்தில் பதிந்திருக்கும்
அக்கம் பக்கத்து வீடுகளில்
அளவான கல் எடுத்து விசையாய் விட்டெறிந்து
விழும் மாங்காய் எடுத்துத் தின்றதில்
நாம் பெற்ற மட்டற்ற மகிழ்ச்சி
இன்றும் இதயத்தே நன்றே நிறைந்திருக்கும்
கள்ளங் கபடமில்லா நல்ல நண்பர்கள்
இவர்களிடம்……..
காசில்லை பெரிதாக
காரில்லை மொடேணாக
தற்புகழ்ச்சி செய்கின்ற இழிவில்லை
போட்டி இல்லை பொறாமை இல்லை
ஒழிவு மறைவு ஒன்றுமில்லை
ஆனால் இவர்களிடம்…..
பகிர்ந்துண்ணும் பண்புண்டு
பழகுவதற்கு நல்ல மனமுண்டு
அழிக்க நினைத்தாலும்
என் மனத்தை விட்டு அகலாத
இந்த நினைவலைகள்
இங்கு தனிமையிலே வெறுமை
இந்த வெறுமையினை
பொல்லாத தனிமையினை
அகற்றவென்று தேடுகின்றேன் மனிதர்களை
கண்டால் எனக்கும் ஒருக்கால்
கட்டாயமாய்ச் சொல்லுங்கோ.
ponnsivraj@bredband.net
ponnsivraj@hotmail.com
- சக்தே இண்டியா – தூள் கிளப்பு இந்தியா – இந்தியா வயது : 60
- ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பும் -3 (ஜூலை 17, 2007)
- ஹெச்.ஜி.ரசூல் எழுத்துக்கள் – பதிவுகள்
- காதல் நாற்பது – 36 காதல் பளிங்கு மாளிகை !
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 5
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 1 பாகம் 2
- நட்சத்திர இரவு – 2007
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்!
- இலக்கிய வட்டம், ஹாங்காங் திரைப்பட ரசனை கருத்தரங்கம்
- புதிய நளபாகம் – மும்பாதேவிக்கு
- கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்புகள் – நீதிக்குக் கிடைத்த வெற்றியா?
- இனியநாள்
- பா.விசாலத்தின் படைப்புப்பயணம்
- நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்(10.09.1862 -30.07.1914)
- தோழர் வே.ஆனைமுத்து அவர்களுக்குப் பாராட்டுவிழா
- ஹெச்.ஜி.ரசூல்
- ஜெ.மோவின் சுவாரசியம் என்பது என்ன என்கிற கட்டுரை பற்றி
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 25
- இலை போட்டாச்சு -34 ரவா பொங்கல்
- கடிதம்
- கவிதைகள்
- தனிமையில் வெறுமை
- முகம்
- ஹை கூ…..
- முடிவதில்லை எவராலும்..
- உன் கவிதையை நீயே எழுது
- அமெரிக்கன் பேபி
- விலைவாசி
- ஹைதராபாத் குண்டுவெடிப்புக்கள்: தெற்கின் ஜிகாதி தீவிரவாத கொடுக்குகள்
- ஹைதராபாத் முஸ்லிமீன் கட்சியின் அராஜகப் பாரம்பரியம்
- சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்
- ல ப க்
- ‘ஸியா மிங்ஜு’ என்ற ஒரு பளீர் முத்து
- தி ல் லா னா
- கால நதிக்கரையில்……(நாவல்)-21
- நான்காம் நாயகம்!
- தாமஸநாசினி