சி. ஜெயபாரதன், கனடா
வடிவுள்ள பாதாளங்களில் நிரம்பிய
ஆழ் கடலில் குதித்து,
மூழ்கினேன்,
வடிவில்லாப் பூரண முத்தைத்
தேடிக் கைக்கொள்ளும்
நம்பிக்கை யோடு!
பருவக் காலத்தால்
துருப்பிடித்த எனது படகில்
துறைமுகம் ஒவ்வொன்றாய்ப்
பயணம் போக
முயல மாட்டேன் நான்!
அலைகள் கொந்தளிக்கும் வேளையில்
அம்மாதிரி
நீர்விளை யாட்டு புரிய
நெடு நேர மாகிறது!
ஆயினும் நான்
துணிவு செய்து விட்டேன்,
மரணமற்ற நிலைக்கு என்னுயிரை
மாய்த்திட!
வேட்பாளர் அமர்ந்துள்ள,
கான அரங்கத்தின் அடித்தளம்
காணா பாதாளத்தில்,
நாதத்தின் தொனி யில்லா
நாண்களில்
கீதம் பொங்கிடும் போதென்
வாழ்க்கைப் புல்லாங் குழலில்
வாசிக்கப் போகிறேன்!
கீதங்களுக் கேற்ப எப்போதும்
நாத நரம்புகளைச் சீராய்
மீட்டுவேன்!
கடைசிக் கானம்
பொங்கித் தணிந்து முடியும் போது,
மௌனமாய்ப் போன எந்தன்
புல்லாங்குழலை அர்ப்பணம் செய்வேன்,
மௌனியின்
பொற் பாதங்கள் மீது!
*****************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (November 13, 2006)]
- இருளும் மருளும் நேச குமாரும் – சில வரிகள்!
- ருவாண்டாவின் ரத்த அழிவின் பின்புலத்தில் “ஆரிய” வாதம்
- திருக்குர்ஆன்(புனிதம் சார்ந்த) கற்பிதமா…………?
- நாள் முழுதும் இலக்கியம் – நவம்பர் 25 சனிக்கிழமை
- கடித இலக்கியம் – 32
- கவிஞனின் கடப்பாடு
- கவிதைகள்
- பெரியபுராணம் – 112 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- சபரிமலையை வளைக்க கிறிஸ்தவ மிஷநரிகள் சதித்திட்டம்
- கீதாஞ்சலி (99) – மௌனமான என் புல்லாங்குழல்!
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 11
- இலை போட்டாச்சு – 2 : பாசிப்பருப்புப் பாயசம்
- தமிழால் முடியும்!
- ஒன்றும் ஒன்றும் ஒன்று
- மாண்புமிகு மந்தியாரும் மதிப்பிற்குரிய பன்றியாரும்
- மடியில் நெருப்பு – 12
- சுப்புணியின் நாடக அரங்கேற்றம்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:4) சீஸர் பட்டாபிசேகத்தின் முந்தைய நாள்
- ஹிந்துத்துவம்: ஊடகங்கள் அறிந்ததும் அறியாததும்
- ஓர்ஹான் பாமுக் – 1: பேச்சுரிமையின் பிரதிநிதி
- கில்காமெஷ் : மரணமின்மையின் இரகசியத்தை தேடிய இதிகாச வீரன் [1]
- மெளனமான உணர்த்துதல்கள்
- பேசும் செய்தி – 7
- பதஞ்சலியின் சூத்திரங்கள்-(4)
- வீணைமகளே என்னோடு பாடவா!
- அன்பு ! அறிவு ! அழகு !
- நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?
- வறுமை நிறம் சிவப்பல்ல – செழுமை
- தாழ்ந்தோர் நலிவழிய கனவிலிது கண்போம்
- இந்த சோஷலிசத்துக்கு எதிரான மார்க்சீயம்
- உள்அலைகளும் புனித குரானும்
- மழைபோல……