மதியழகன் சுப்பையா
தமிழ் மொழியின் மேல் அதிகபடியாக உள்ள பற்றினால் பலர் பிறமொழிகளை கண்டபடி பேசியும் எழுதியும் விடுவது இயல்பானதே.
பாபு என்றால் நாற்றமிக்கவன் என்று பொருள் கூறி முன் மொழிந்தவர்களையும் அதற்கு வரிந்து கட்டுக் கொண்டு வழிமொழிந்தவர்களையும் கண்டு சிரிப்புத்தான் வருகிறது.
”கொக்கறக்கோ” (கொக்- அரக்கன், கற-அறுத்த, கோ-கோமானே(அரசனே) என்று சேவல் கூவுவது தனது கடவுள் முருகனைப் போற்றுவதற்காக என இறையருள். திருமிகு கிருபாணந்தவாரியார் வாக்கு. என்ன செய்ய கிருபாணந்தவாரியாருக்கு முருகனை விட்டால் ஏதுவுமில்லை. ஆனால் இந்தியா முழுவதும் சேவல் அப்படித்தான் கூவுகிறது என்று விசாரித்ததில் தகவல். ( உலகம் முழுவதும் கூட அப்படித்தான் இருக்கலாம். நான் உலகம் சுற்றவில்லை/ யாரிடமும் கேட்க வாய்ப்பும் இல்லை.)
ஏப்ரலுக்கு அடுத்த மாதம் என்னவென்றால் ”மே” என்று மிகச் சரியாகச் சொல்கிறது ஆடு.
அப்பாவுக்கு எதிர்பதம் என்னவென்றால் ”அம்மா” என்று மிகச் சரியாக சொல்கிறது மாடு.
இப்படித்தான் இருக்கிறது பாபு என்ற வார்த்தைக்கு நாற்றம் பிடித்தவன் என்று பொருள் சொல்வது.
பாபு என்ற சொல்லுக்கு மரியாதைக்குறியவர் என்றும் மேன்மையானவர் என்றும் மட்டுமே பொருள்.
ஓசோவின் புத்தகத்தில் குறிப்பிட்டது போல் வெள்ளையர்கள் பெங்காளிகளை நாற்றம் பிடித்தவன் என்று விளிக்க இந்திய வார்த்தையை அதுவும் பெங்காளிகள் புரிந்து கொள்ளக் கூடிய பெங்காளி மொழியில் அழைப்பது கூட தெரியாமல் பெங்காளிகள் இருந்திருக்கலாம். ஆனால் அந்த வார்த்தை பெங்காள் மாநிலம் முழுவதும் பரவி இந்தியா முழுவதும் பரவுவது வரை அது இந்திய மொழி வார்த்தை என்று எந்த ஒரு இந்தியனும் கண்டு பிடித்து சொல்லவில்லையோ?
பூ-என்றால் நாற்றம் என்று பொருள்தான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அது பெங்காளி என்று உறுதியாக சொல்ல முடியாது. இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் அச்சொல் உள்ளது. மேலும் பாபு என்ற வார்த்தைக்கு நாற்றம் பிடித்தவன் என்று சொல்வது ஒரு மொழியை கொச்சைப் படுத்துவதாகும்.
யாராலும் எந்த மொழியையும் கொச்சை படுத்த முடியாதுதான் ஆனால் தவறான தகவல்கள் வாசகர்களைப் போய்ச் சேருதல் கூடாது என்பது எனது தாழ்மையான எண்ணம்.
அதே நேரத்தில் ”அங்ரேஜ்-பாபு” ( வெள்ளைக்காரத் துரை) பாபு-துரை என்று வெளிநாட்டவர்களை இந்தியர்கள் அழைத்தார்கள். அது முதல் அலுவல் பணியில் ஈடு பட்டவர்களை பாபு-ஆங்கிலத்தில் Sir என்று பொருள் படும் வகையில் அழைக்கவே இந்த வார்த்தை பயன் படுத்தப் பட்டது.
விரைவில் இது குறித்த ஆதாரப் பூர்வமான தகவல்களுடன் வருகிறேன்.
மதியழகன் சுப்பையா,
மும்பை
madhiyalagan@rediffmail.com
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 2
- ப.ஜீவானந்தம் – பி.ராமமூர்த்தி நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் – 2007
- வாசிப்பின் எல்லைகள்
- அக்காவின் சங்கீத சிட்சை
- செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் ·பீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி (ஆகஸ்டு 9, 2007)
- கடிதம்
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 11 புனைபெயரா? – புனைப்பெயரா?
- அமரர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு
- கடிதம்
- ”காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” – (பாபு-நாற்றம் பிடித்தவன் என்று பொருளல்ல)
- கவிஞர் ரசூல் மீது பத்வா வன்முறை
- மதுரை புத்தகக் கண்காட்சியில் எனி இந்தியன் புத்தகங்கள்
- மலேசியத் தமிழ் மக்களின் வரலாற்று பதிவுகளை தொகுக்கும் பணி
- மதியழகன் சுப்பையா அவர்கள் திண்ணை.காம் குறித்து எழுதியுள்ள கட்டுரை
- பொதுவாய் சில கேள்விகள்
- உயிர்மை பதிப்பகம் இரண்டு நூல் வெளியீட்டு விழாக்கள் – ஆகஸ்ட் 11, 12
- சிங்கையில் பாரதச் சுதந்திர தின விழா!
- திலகபாமா புத்தக வெளியீட்டிற்கான அழைப்பிதழ்
- பெண்கள்
- ஆகஸ்டு – 15 (மொழிச் சித்திரம்)
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்தியிரண்டு: சுதந்திரதேவிக்கொரு விண்ணப்பம்!
- கால நதிக்கரையில்……(நாவல்)-18
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 22
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -3 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சிகள்
- நீயும் இந்நிலைக்கு ஆளாவது நிலைமாறா உண்மை
- உணர்வுகள்
- போதி
- தேசத்திற்குத் தந்தை; மகனுக்கு? “காந்தி, என் தந்தை” எழுப்பும் கேள்வி
- கம்பளி பூச்சி
- காதல் நாற்பது – 33 செல்லப் பெயரில் அழைத்திடு !
- மௌனம்
- இலை போட்டாச்சு – 32 ரவா கேசரி
- சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்
- சென்னை வலைப்பதிவர் பட்டறை 2007
- அழகிய சிங்கரின் கவிதைகள்